Skip to main content

வீட்டிற்கு ஒரு புத்தகச் சாலை தேவை!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

வீட்டிற்கு ஒரு நூலகம் தேவை என்ற பேரறிஞர் அண்ணாவின் கூர் வாக்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் தமிழறிஞர் பேராசிரியருமான மு.பி.பா என்கிற மு.பி.பாலசுப்பிரமணியன். அவரின் 80 வது முத்து விழாவை முன்னிட்டுத் தான் அவரது பிறந்த பூமியான நெல்லை மாவட்டத்தின் தென்காசி வட்டத்தில் வருகிற அய்யாபுரம் கிராமத்தின் காந்தி தெருவில் அமைக்கப்பட்ட புதிய நூலகத்தினை கடந்த மே 16 அன்று பட்டித் தொட்டியெல்லாம். பட்டிமன்றம் புகழ் ஓங்கும் நடுநாயகர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், சாகித்திய அகாடெமி  விருதாளர், எழுத்தாளருமான பொன்னீலன் ரிப்பன் வெட்டிக் குத்துவிளக்கேற்றிய முகூர்த்தத்தில் திறந்து வைத்தார். 

 

 

BOOKS

 


இந்த நிகழ்ச்சியில் மாவட்டதின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர், பேராசிரியைப் பெருந்தகைகளான அழகேசன், ஜாஸ்மீன் ஆசீர், பா வளன் அரச பேராசிரியர் மு.பி.பா அறக்கட்டளை அறங்காவளர்களான பா.இன்பவல்லி, முனைவர் பா. கலையரசி, முத்துக்குமரன், முத்துமிழ் செல்வன், உள்ளிட்ட பல்துறைச் சான்றோர்கள் ஊர் மக்கள் என்று பெரியதொரு கூட்டமே திரண்டிருந்தது. மட்டுமல்ல, பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் வந்து நூலகத் திறப்பைச் சிறப்பித்துள்ளனர். பேராசிரியர் மு.பி.பா.வின் தமிழ்வளர்ச்சி, அவரின் தமிழ் தொண்டு பற்றியவைகளுக்குள் போவதற்கு முன், ஐயாவின் பூர்வீகம் பற்றி ஒரு எட்டு பார்த்துவிடலாம்.

 

 

 

BOOKS

 

 

இதே அய்யாபுரம் கிராமத்தின் பிச்சைமுத்து, கண்ணியம்மாள் தம்பதியரின் மகன் தான் மு.பி.பா 16.05.1939-ல் பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர் மற்றும் இரு சகோதரிகள். பேராசிரியரான மு.பி.பா வின் மனைவியான இன்பவல்லியும் இதே கிராமத்தைச் சேர்ந்தவரே. இவர்களுக்கும் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஆரம்பத்தில் எம்.ஏ.தமிழ் பி.எச்.டி. முனைவர் பட்டம் பெற்றவர். பின்பு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் பணியிலிருந்தவர். தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு மாறுதலானார். கவிதை மேகங்கள், வாணிதாசன் கவிதை ஓர் ஆய்வு, மணமல்லி, உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதி தமிழுக்குச் சிறப்பு செய்துள்ளார். குறிப்பாக இவரின் கவிதை மேகங்கள் என்கிற புத்தகம் கல்லூரி பாடமாகவும் இடம் பெறுமளவுக்குச் சிறப்புப் பெற்றதுமல்லாமல் கவிதைகள் பள்ளிப் பாடப் புத்தங்களிலும் இடம் பிடித்துள்ளது, கவனிக்கத்தக்க தமிழ் தொண்டு.

 

 

 

BOOKS

 

 

இது போன்று மு.பி.பா தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமில்லாமல் குறிப்பாக சிங்கப்பூர் மலேசியா, கனடா, சுவிட்சர்லாந்த், என கடல் கடந்து தூர கிழக்கு நாடுகளிலும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் பேராசிரியர் மு.பி.பா. தற்போது தமிழாலயம், எனும் இரண்டு மாதம் ஒருமுறை பருவ இதழினையும் கடந்த 17 வருடங்களாக நடத்திவரும் மு.பி.பா. மத்திய அரசின் தணிக்கைக்குழு உறுப்பினராகவும், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் தமிழ் மன்றத்தில் துணைத் தலைவராகவும் இருந்தவர். பேராசிரியர் மு.பி.பாவின் தமிழ் சிறப்புத் தொண்டினைப் பாராட்டும் வகையில் அவரது 80- வது  பிறந்த நாளின்போதே  நூலகம் திறக்கப்பட்டதோடு உடன் அறக்கட்டளையும் தொடங்கப்பட்டது.

 

BOOKS INAUGURATION

 

 

வீட்டிற்கு ஒரு புத்தகச் சாலை தேவை என்றார் பேரறிஞர் அண்ணா. ஒரு நூலகம் திறந்தால் ஒரு சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும் என்பது விவேகானந்தரின் வாக்கு.. பிரான்சிஸ் பேகனின் கணிப்பு வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்பதே. அந்த அடிப்படையில் தான் இந்த நூலகம் திறக்கப்பட்டது என்கிறார்கள் பேராசிரியர்கள். பெயரளவில் நூலகம் என்றில்லாமல் அது புத்தங்களின் புதையலாகவே உள்ளது. திராவிட இயக்க நூல்கள்,வரலாற்று நூல்கள், இந்திய தமிழக அளவில் நடைபெறுகிற சிவில் சர்வீஸ் குரூப் தேர்வுகள் டி.ன்.பி.எஸ்.சி, நேவி எஸ்.எஸ்.இ, வங்கித்தேர்வுகள், ஆர்.ஆர்.டி. வனத்துறை, இந்து சமயம், மற்றும் அறநிலைத்துறை, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல தரப்பட்ட அரசுத்துறைப் போட்டிகளுக்கான புத்தங்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் மேற்படிப்பிற்கு உதவும், மருத்துவம், நீட் தேர்வு, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வு புத்தங்களுடன், இலக்கிய இலக்கண ஆய்வு நூல்கள், கவிதை,  நாவல், சிறுகதை, நாடகம் உள்பட தமிழ் வளர்ச்சிக்கானது என்று நகரத்திற்கு இணையானதொரு மெகா நூலகத்தை உள்ளடக்கிய மு.பி.பா.வின் அய்யாபுரம் நூலகம், நாட்டு நடப்பை அறிய தினசரி நாளிதழ்களும் இடம் பெற்றுள்ளன.

 

BOOKS FESTIVAL

 

 

மேலும், மு.பி.பாவின் அறக்கட்டளை கல்விக்காகவும், நூலகத்தின் வளர்ச்சிக்காக, மக்கள் நலப்பணிக்காகவும், உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது அதன் முன்னோட்டமாக அய்யாபுரம் கிராமத்தின் தொடக்கப்பள்ளியின் 150 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் எழுது பொருட்களும் அளிக்கப்பட்டதோடு நலிந்த ஆடவர், பெண்டிர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டுள்ளன. புத்தகக் களஞ்சியமான அய்யாபுரம், பல்கலைகழகமாக மாறி வருகிறது.

 

 

 

 

 

 


 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.