Skip to main content

"தமிழகத்தில் இருந்து துரத்தப்படுவார்கள்.." - வள்ளுவர் விவகாரத்தில் நெல்லை கண்ணன் அதிரடி பேச்சு!

Published on 09/11/2019 | Edited on 09/11/2019


திருக்குறள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுதொடர்பாக பல்வேறு தகவல்களை தமிழ்கடல் என்று அழைக்கப்படும் நெல்லை கண்ணன் அவர்களிடம் கேள்விகளாக முன்வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை, ருத்ராட்சம் அணிவித்து, பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிட்டுள்ளார். இந்த நிகழ்வை எப்படி பார்க்கிறீர்கள்?

திருவள்ளுவருக்கும் பாரத மாதாவுக்கு என்ன சம்பந்தம்? இதற்கு முதலில் அர்ஜூன் சம்பத் பதில் சொல்ல வேண்டும். திருவள்ளுவர் இந்து மதம் என்று கூறுவதே முதலில் தவறான ஒன்று. இந்த மதத்தை பற்றி விவேகானந்தரே சொல்லியிருக்கிறார். திருவள்ளுவர் இந்துமத வாழ்வியலை பற்றி எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா? அவர் பேசியது எல்லாம் மனித வாழ்வியல். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார் என்று தற்போது சிலர் முன்னிலைப்படுத்தி கூறுகிறார்கள். அந்த கடவுள் வாழ்த்தே பிறகு வந்தவர்கள் சேர்ந்தது என்று வ.உ.சி சொல்லியிருக்கிறார். அவர் சொன்னால் தவறாக இருக்காது. திருக்குறள் முழுவதும் தமிழர்களின் வாழ்வியல். அதனால் தான் பாரதியார் யாம் கம்பனை போல், வள்ளுவனை போல் உலகில் இல்லை என்கிறார். வள்ளுவரும், இளங்கோவடிகளும் சமணர்கள்கள். 

 

hg



உங்கள் கூற்றுப்படியே திருவள்ளுவரை சமணர் என்று கூறுவதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது? அவரை மத சார்ப்பற்றவராக கொண்டு வருவதன் நோக்கம் என்ன?

மதசார்ப்பற்றவராகத்தான் அவர் இருந்திருக்கிறார். அவரை நீங்கள் இந்து என்று சொன்னால்? திருநீறு பூசினால், அங்க அப்பாவை அவன் அவர்களுடைய அப்பா என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். திருவள்ளுர் தமிழர்களின் தலைவர். அவரை எங்கள் அப்பா என்று சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. அது ரொம்ப கேவலமானது.

கிருஸ்துவர்கள், முஸ்லிம் தவிர மீதி இருப்பவர்கள் எல்லாம் இந்துக்களை என்பதுதான் அவர்கள் வைக்கும் வாதம். அந்த வகையில் திருவள்ளுவரை அவர்கள் இந்து என்கிறார்கள். இதை எப்படி பார்ப்பது?

சமணர்கள் இந்து மதத்தில் வரமாட்டார்கள்.  இங்கே மார்வாடி, ஜெயின் மதத்தினர் இருக்கிறார்களே, அவர்கள் ஒரு போதும் தங்களை இந்துக்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். புலால் உண்ணாமையை லட்சியமாக வைத்திருப்பவர்கள். ஆகையால் அதே சமயத்தை பின்பற்றிய வள்ளுவரும் அதனை பின்பற்றினார். ஆகையால் இதனை வைத்து அவரை இந்து என்று அடையாளப்படுத்துவது முட்டாள் தனமான ஒன்று. பிராமணர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் மற்றவர்களை விட அதிகமான அறிவு இருப்பதாக சிலர் கூறுகிறார்களே! அவ்வளவு தான் அவர்களின் அறிவு.

கடவுள் நம்பிக்கை உடைய திருவள்ளுவரை நாத்திகவாதிகளும், திராவிட இயக்கவாதிகளும் கொண்டாடும் போது நாங்கள் கொண்டாட கூடாதா? என்று அவர்கள் கேட்கிறார்களே?

நாங்கள்தான் நீண்ட காலமாக கொண்டாடி வருகின்றோமே, இப்போது திருவள்ளுவரை பற்றிபேசும் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கே இருந்தார்கள். நாங்கள் வள்ளுவர் கோட்டம் அமைத்தோம், வள்ளுவனுக்கு சிலை அமைத்தோம். இவர்கள் என்ன செய்தார்கள். அப்போதெல்லாம் சும்மா இருவிட்டு தற்போது உரிமை கொண்டாடுவதற்கு அவர்களின் நோக்கம் என்ன. எல்லாம் தேர்தல் அரசியல்தான். இவர்களை யாரும் நம்மபோவதில்லை. தமிழகத்தில் இருந்து நிரைவில் இவர்கள் துரத்தப்படுவார்கள்.

 

 

 

 

 

 

 

Next Story

திருவள்ளுவர் நாள் விழா‌‌ கொண்டாட்டம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Thiruvalluvar day celebration in Sivagangai!

சிவகங்கையில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டம் முதலாம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவைக் கொண்டாடியது. கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், கவியரங்கம் என மூன்று அரங்கமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாக உலகத்திருக்குறள் கூட்டமைப்பினர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

விழாவிற்கு வந்தோரை மு.சகுபர் நிசா பேகம்  வரவேற்றார், தேசிய நல்லாசிரியர் செ. கண்ணப்பன் தலைமை வகித்தார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டத் தலைவர் சோ.சுந்தர மாணிக்கம், துணைத் தலைவர் மு.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறளை வாழ்வியலாக கொண்டு திருக்குறள் பரப்பும் பெரும் பணியை செய்து வரும் கல்லலைச் சேர்ந்த திருக்குறள் பரப்புநர் சி.முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவருமான நா. சுந்தரராஜன், சிவகங்கை அரிமா சங்கத் தலைவர் க.முத்துக்குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (ஓய்வு) இளங்கோவன், கலைமகள் ஓவியப்பள்ளி ஓவியர் நா.முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை மூத்த வழக்கறிஞர் மு. இராம் பிரபாகர், நல்லாசிரியர் பா.முத்துக்காமாட்சி, மருத்துவத்துறை கண்காணிப்பாளர் இரமேஷ் கண்ணன், ( jci )உலக இளையோர் கூட்டமைப்பு செயலர் ஹரிஹரசுதன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மண்டல பொறுப்பாளர் புலவர் மாமணி ஆறு. மெய்யாண்டவர், க.கீர்த்திவர்சினி, கா.நனி இளங்கதிர், ப.யோகவர்ஷினி, க.முத்துலட்சுமி ஆகியோர் குறளால் பாராட்டு செய்யப்பட்டனர்.

‘வள்ளுவத்தைப் பாடுவோம்’ எனும் பொதுத் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது, இக்கவியரங்கத்திற்கு புலவர் கா.காளிராசா தலைமையேற்று தலைமைக் கவிதை பாடி வழி நடத்தினார். ‘உடுக்கை இழந்தவன் கை போலே’ எனும் தலைப்பில் முனைவர் உஷா, ‘அன்பின் வழியது உயிர்நிலை’ எனும் தலைப்பில் கவிஞர் பீ. பி.எஸ் எட்வின், ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ எனும் தலைப்பில் முனைவர் இரா.வனிதா, ‘எண்னென்ப ஏனை எழுத்தென்ப’ எனும்  தலைப்பில் ஆசிரியர் மாலா, ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்னும் தலைப்பில் கவிஞர் சரண்யா செந்தில், ‘யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் அகமது திப்பு சுல்தான், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் பிரீத்தி அங்கயற் கண்ணி ஆகியோர்கவிதை பாடினர்.

ஆசிரியர் ந. இந்திரா காந்தி, செல்வி கா.நவ்வி இளங்கொடி  நிகழ்வை தொகுத்து வழங்கினர். அரிமா முத்துப்பாண்டியன், லோபமித்ரா, மகேந்திரன்,அந்தோணி பிரான்சிஸ் ஜெயப்பிரியா ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். தவழும் மாற்றுத்திறனாளிகள் தாய் இல்ல ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், பாரதி இசைக் கல்விக் கழக யுவராஜ், தமிழாசிரியர் அயோத்தி கண்ணன் போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டனர், இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புலவர் கா. காளிராசா செய்திருந்தார்,இந்நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் வே.மாரியப்பன் நன்றியுரைத்தார்.

Next Story

'மும்மொழி கொள்கையே திணிப்புதான்'-கவிஞர் வைரமுத்து கருத்து

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
'Three-language policy is an imposition'-poet Vairamuthu interviewed

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது' என ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவிஞர் வைரமுத்து, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திருவள்ளுவர் தமிழர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். மும்மொழி கொள்கை என்பதே திணிப்புதான் என தமிழர்கள் கருதுகின்றனர். அதனாலேயே இந்தி மொழி திணிப்பை வேண்டாம் என்று கூறுகிறோம். மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி மீது எங்களுக்கு என்ன வெறுப்பா. இல்லை. இந்தி மொழி கூடாது என்று நாங்கள் கொடிபிடிக்கிறோம் என்றால் இந்தி மொழியின் திணிப்பு கூடாது என்று நாங்கள் உறுதிபட சொல்கிறோம். இந்தி மொழியின் திணிப்பு எதிர்ப்பதைத்தான் தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள்'' என்றார்.