Skip to main content

ஒரு ஏழை மாணவன் மருத்துவராகக் கூடாதா? ஏன் நீட் தேர்வில் இவ்வளவு பிரச்சனை செய்கிறார்கள்: விஜயதாரணி கண்டனம்

Published on 04/05/2018 | Edited on 04/05/2018


 

neet


நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் தயாராகி வந்த நேரத்தில், அவர்களில் பல பேருக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. அம்மாநிலங்களுக்கு சென்றுவர பொருளாதார சூழல் பல மாணவர்களுக்கு இல்லை என்பதால் தமிழகத்திலேயே தேர்வை எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. 
 

வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கும், அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும்), இதர செலவினங்களுக்காக மாணவர் தலா ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதமும் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணி,
 

தமிழகத்தில் படித்த பிள்ளைகளுக்கு கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எனது கண்டனத்தை முதலில் பதிவு செய்கிறேன். தமிழக அரசு முறையாக அணுகி, உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் நிலையை மாற்றியிருக்கலாம். 
 

ரயில் டிக்கெட் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. பிள்ளைகளை வெளி மாநிலங்களுக்கு தனியாக அனுப்பவும் முடியாது. ரயில் டிக்கெட் மட்டும் போதுமா? அங்கு சென்று அறை எடுத்து தங்க வேண்டும். அதற்கான செலவு குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் ஆகும். மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என்பது போதாது. தங்குவதற்கான செலவு, உணவுக்கான செலவுகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும். 
 

மேலும், இங்கிருந்து அந்த மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு மொழி தெரியாது. ஒரு ஏழை மாணவன் மருத்துவராகக் கூடாதா? ஏன் இந்த நீட் தேர்வில் இவ்வளவு பிரச்சனை செய்கிறார்கள். சாதாரண அரசு பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளின் நிலைமையை நினைத்து பாருங்கள். சாதாரண கிராமங்களில் இருக்கும் அரசு பள்ளியில் படித்த குழந்தையை ராஜஸ்தானில் போய் தேர்வு எழுதிய சொன்னால் அந்த குழந்தையின் மனம் எப்படி இருக்கும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மிகப்பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

vijayadharani mla


 

அரசு கொடுக்கும் உதவித் தொகை போதாது. பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் மாணவர்களை நினைத்துப் பாருங்கள். தினக்கூலி வாங்குபவர்கள் தங்களது பிள்ளைகள் டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு காணக் கூடாதா? பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள மாணவர்களை பொறுத்த வரையில் நீட் தேர்வுக்கு உண்டான முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்.  
 

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறதான் முடியவில்லை. இனி தமிழக மாணவர்கள் நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுதவாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். 
 

Next Story

நீட் தேர்வு; விண்ணப்ப பதிவிற்கான அறிவிப்பு வெளியீடு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Notification Release for Application Registration for NEET Exam

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டிய தேதியை தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (10-02-24) முதல் நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், www.nta.ac.in, exams.nta.ac.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” -  கவிஞர் வைரமுத்து

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Vairamuthu has demanded that education should be transferred to state list

 

நீட் விலக்கை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க, கையெழுத்தியக்கத்தை இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார். அதன் பணிகள் தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும் நிலையில், இன்று கவிஞர் வைரமுத்து நீட் தேர்வுக்கு எதிராக கையொப்பமிட்டுள்ளார்.  

 

அதற்கு முன்பு பேசிய அவர், நீட் என்பது மாணவர்களுக்கு எதிரானது; சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்து நகரம் முதல் கிராமம் வரை பரவி இருக்கிறது. நீட் என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படுகிற கல்வி அநீதி அல்லது எதிர்கால அநீதி என்பதில் உணர்ந்தவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஏனென்றால் நீட் தேர்வில் எழுதுகிற மாணவனுக்கு எழுதும் தேர்வில் ஒரு  சமநிலை இல்லை; மாணவர்கள் தேர்வு எழுதி எழுதியே தங்களது வாழ்வில் பாதியை கரைத்து விடுகிறார்கள் என்பதை   இந்த சமூகம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் நீட்டுக்கு எதிராக; நீட் விலக்கிற்காக நாங்கள் இங்கே கையெழுத்திடுகிறோம்” என்றார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

 

“‘நீட் விலக்கு நம் இலக்கு’
இயக்கத்தில் நானும் 
கையொப்பமிட்டேன்.

 

“நீட் என்பது 
கல்விபேதமுள்ள தேசத்தில் 
ஒரு சமூக அநீதி என்றேன். 

 

நீட்தேர்வு 
மருத்துவத்தில் 
சேர்த்துவிடுவதற்கு மாறாகச்
சிலரை
மரணத்தில் சேர்த்துவிடுவதை 
அனுமதிக்க முடியாது என்றேன்

 

நீட் விலக்கு மசோதாவில் 
குடியரசுத் தலைவர் 
கையொப்பமிட வேண்டும் மற்றும் 
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு 
மாற்ற வேண்டும்" என்று 
கோரிக்கை வைத்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.