Skip to main content

"அச்சத்தில் அதிமுக.. பிடி கொடுக்காத புதிய தமிழகம்..!"

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

2016- தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளில் கடைசி 3 சுற்றுக்களையும் தபால் வாக்குகளையும் மறுபடியும் எண்ண வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டதுமே, அதிமுகவுக்கு உதறல் ஆரம்பித்துவிட்டது. அக்.04-ந்தேதி நடந்த மறுவாக்கு எண்ணிக்கையை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார் அந்த தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவான இன்பதுரை.

 

nanguneri,vikkiravandi byelection... admk



3 தொகுதிகளில் வெற்றி-ஸ்டாலின்...

ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை அக்.23-ந்தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. இது ஓரளவுக்கு ஆளுங்கட்சிக்கு நிம்மதி. இருந்தாலும், 23-ந்தேதி இடைத் தேர்தல் முடிவுகள் வரும்போது திமுக கூட்டணிக்கு 3 எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள் என்று ராதாபுரத்தையும் சேர்த்தே திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது திமுகவினருக்கு உற்சாகத்தையும், அதிமுக தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

nanguneri,vikkiravandi byelection... admk

 

21-ந்தேதி நடக்கும் இடைத் தேர்தலில் எப்படியாவது விக்ரவாண்டியிலும், நாங்குநேரியிலும் ஜெயிக்க வேண்டும் என்ற படபடப்பு அதிமுகவிடம் தொற்றிக் கொண்டது. அதனால் தான் பிஜேபியை ஒதுக்கியே வைத்திருந்த அதிமுக, இப்போது இறங்கி வந்து, பிஜேபி தலைவர்களை  நேரில் சந்தித்து ஆதரவு கோரியது. அதுவரைக்கு வீராப்பு காட்டிய பிஜேபியும், "பக்கத்து இலை வரைக்கு வந்த பாயாசம் இப்போது நம்ம இலைக்கும் வந்துவிட்டது என அக மகிழ்ந்து இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என அறிவித்திருக்கிறது.


பிடிகொடுக்காத கிருஷ்ணசாமி...

nanguneri,vikkiravandi byelection... admk



அதேபோல் "பட்டியல் வெளியேற்றம், தேவேந்திர குல வேளாளர் அரசாணை என்ற கோரிக்கையை முன்வைத்து, அதிமுகவிடம் முறுக்கிக் கொண்ட புதிய தமிழகத்தையும் அதிமுக கடைசிவரை கண்டு கொள்ளவில்லை. கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியிடம் அதிமுகபேச முயன்றபோது அவர் பிடிகொடுக்கவில்லை."


ஜான்பாண்டியனுடன் அமைச்சர்கள் பேச்சு....

 

nanguneri,vikkiravandi byelection... admk



பிஜேபிகிட்டயே ஆதரவு கேட்கும்போது அவர்கிட்டயும் பேசி வைப்போம் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை நெல்லையில் உள்ள அவரது வீட்டில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் சந்தித்தனர். ஆனால், அவரும் "7 சாதிகளை  ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடுங்கள் ஆதரவு தருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.. இதனால் முதல்வரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறோம் என அமைச்சர்கள் திரும்பிவிட்டனர்.

ஏற்கனவே வேலூரில் 8 ஆயிரம் வாக்குகளில் அதிமுக தோற்றது. நாங்குநேரியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுக்கள் உள்ளன. இந்த இடைத் தேர்தலில் அவர்களை புறக்கணித்தால், இடைத் தேர்தல் மட்டுமின்றி, அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தலில்(ஒருவேளை தேர்தல் நடந்தால்) சறுக்கலை சந்திக்க நேரிடுமோ? என்ற அச்சம் அதிமுகவிடம் எழுந்திருக்கிறது.

இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் மட்டுமின்றி தேவேந்திரகுல சமூகத்தினர் வசிக்கும் விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் கறுப்புகொடி ஏற்றி அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.

 


 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.