Skip to main content

அன்றே சொன்னது நக்கீரன்! இப்போது சொல்லும் தினகரன்!

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
​​dinakaran


 

2012ஆம் ஆண்டு ஜனவரி 9-ந்தேதி வெளியான நக்கீரன் இதழில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் உணவுப் பழக்கம் குறித்து ஒரு செய்தி வெளியானது. அதையடுத்து, ஜெ.வின் தூண்டுதலின் பேரில் நக்கீரன் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் ஏராளம். அ.தி.மு.க.வினரால் இரண்டு நாட்கள் நக்கீரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. நக்கீரன் ஊழியர்கள் உள்ளே இருக்கும்போது வெளியிலிருந்து தீ வைக்கப்பட்டது. அமைச்சர்கள் முன்னிலையில், எம்.எல்.ஏ.வே களமிறங்கி இத்தகைய வேலையை செய்தார். ஒரு எம்.எல்.ஏ. அலுவலக வாசல் கதவைப் பூட்டினார்.


நக்கீரன் அலுவலகத்தின் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் ஆசிரியர் மீது சுமார் 261 எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டு, நக்கீரன் அலுவலகம், நக்கீரன் ஆசிரியர் இல்லம் ஆகியவற்றில் சோதனை என்ற பெயரில் காவல்துறை அத்துமீறல் நடத்தி ஊழியர்களையும், குடும்பத்தினரையும் மிரட்டியது. செஷன்ஸ் நீதி மன்றத்தில் அரசு சார்பாக அவ தூறு வழக்கு தாக்கல் செய்யப்பட் டது.


தனது தனிப் பட்ட வாழ்க்கையை நக்கீரன் எழுதி விட்டதாகக் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் ஜெ. தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழ்களை ஏஜெண்டுகளிடம் இருந்து பறித்துச் சென்று எரித்தனர். ஏஜெண்டுகள் மிரட்டப்பட்டனர். தமிழக முதல்வரை இழிவுபடுத்தி சட்டசபைக்கு அவமானம் ஏற்படுத்துவதாகக் கூறிய சபாநாயகர், இது தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையில் சட்டசபையில் ஆஜராகுமாறு ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கைகள் மேற் கொண்டார். இவ்வாறு ஒரு செய்திக்காக 8 வகையான நடவடிக்கைகள் மேற்கொண்டது ஜெ. தலைமையிலான அ.தி.மு.க. அரசு.

 

nakkheeranoffice


அத்தனை அடக்குமுறைகளையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்த்து கடந்த 8 வருடங்களாக நக்கீரன் சட்டத்தின் துணையுடன் போராடி வருகிறது.


இந்நிலையில், தந்தி டி.வி.யில் ஒளிபரப்பான ""ஜெ. ஜெயலலிதா எனும் நான்'' என்ற தொடரில் பேசியுள்ளார் அ.ம.மு.க. துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவர் அளித்த பேட்டியில், ""எங்கேயாவது காரில் போகும் போது ரோட்டுக் கடையில மசால் வடை போடும் போது அதை (ஜெ.) வாங்க சொல்லுவாங்க. பாய்லர் டீ அவுங் களுக்கு பிடிக்கும். இதெல்லாம் 88 - 89-ல்.


எங்க இளவரசி மாமி சமைத்தால் அவர்களுக்கு பிடிக்கும். தஞ்சாவூர் சமையலை சமைக்க சொல்லி ஞாயிற்றுக்கிழமை சாப்பிடுவாங்க. நான் வெஜிடேரியனும் (அசைவம்) சாப்பிடுவாங்க. வெஜிடேரியனும் சாப்பிடுவாங்க. சில நாள் சனிக்கிழமை, வியாழக்கிழமைன்னு நாங்க விரதம் இருப்போம். அதுக்கு அவங்க. "நானே அசைவம் சாப்புடுறேன்... சாப்பிடுப்பா'ன்னு சொல்லுவாங்க...


"2014 சிறைக்குச் சென்ற பிறகு சுத்தமாக அசைவத்தை விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் வெஜிடேரியனா மாறிட்டாங்க. எங்க சித்தியும் (சசிகலா) வெஜிடேரியனா மாறிட்டாங்க'’’ எனத் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா அசைவம் சாப்பிடுவார் என்று அவரது உணவுப் பழக்கம் குறித்து இப்போது தினகரன் வெளிப்படையாகப் பேசி யுள்ள நிலையில், அதே உணவுப் பழக்கம் குறித்து அன்று எழுதியதற்காகத்தான் நக்கீரன் மீது கொடூரமான 8 வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்று ஜெ.வின் உணவுப்பழக்கம் எத்தகையது என்பது தினகரன் வாயால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

​​banwarilal prohit


 

அதுபோலவே, ‘"கவர்னர் கறார்-ராஜ்பவனில் சைவப் பூனைகள்'’ என்ற தலைப்பில், பன்வாரிலால் புரோகித் சைவம் என்பதால், ராஜ்பவனில் அசைவ உணவு சமைக்கப்படுவதில்லை என்ற செய்தியையும் நக்கீரன் வெளியிட்டிருந்தது. தற்போது ஆளுநரே, "நான் சைவ உணவு உண்பதால் ராஜ்பவனில் அசைவம் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டேன்' என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.



அதிகார அத்துமீறல்கள்-சட்டத்தின் பாய்ச்சல்கள்-தாக்குதல்கள்-சிறைவாசம்-உயிரிழப்பு எனக் கடும் சவால்களுக்கிடையே மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்க்கும் நக்கீரனின் புலனாய்வுகள் பொய்ப்பதில்லை.


 

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.