Skip to main content

அன்றே சொன்னது நக்கீரன்! இப்போது சொல்லும் தினகரன்!

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
​​dinakaran


 

2012ஆம் ஆண்டு ஜனவரி 9-ந்தேதி வெளியான நக்கீரன் இதழில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் உணவுப் பழக்கம் குறித்து ஒரு செய்தி வெளியானது. அதையடுத்து, ஜெ.வின் தூண்டுதலின் பேரில் நக்கீரன் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் ஏராளம். அ.தி.மு.க.வினரால் இரண்டு நாட்கள் நக்கீரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. நக்கீரன் ஊழியர்கள் உள்ளே இருக்கும்போது வெளியிலிருந்து தீ வைக்கப்பட்டது. அமைச்சர்கள் முன்னிலையில், எம்.எல்.ஏ.வே களமிறங்கி இத்தகைய வேலையை செய்தார். ஒரு எம்.எல்.ஏ. அலுவலக வாசல் கதவைப் பூட்டினார்.


நக்கீரன் அலுவலகத்தின் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் ஆசிரியர் மீது சுமார் 261 எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டு, நக்கீரன் அலுவலகம், நக்கீரன் ஆசிரியர் இல்லம் ஆகியவற்றில் சோதனை என்ற பெயரில் காவல்துறை அத்துமீறல் நடத்தி ஊழியர்களையும், குடும்பத்தினரையும் மிரட்டியது. செஷன்ஸ் நீதி மன்றத்தில் அரசு சார்பாக அவ தூறு வழக்கு தாக்கல் செய்யப்பட் டது.


தனது தனிப் பட்ட வாழ்க்கையை நக்கீரன் எழுதி விட்டதாகக் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் ஜெ. தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழ்களை ஏஜெண்டுகளிடம் இருந்து பறித்துச் சென்று எரித்தனர். ஏஜெண்டுகள் மிரட்டப்பட்டனர். தமிழக முதல்வரை இழிவுபடுத்தி சட்டசபைக்கு அவமானம் ஏற்படுத்துவதாகக் கூறிய சபாநாயகர், இது தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையில் சட்டசபையில் ஆஜராகுமாறு ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கைகள் மேற் கொண்டார். இவ்வாறு ஒரு செய்திக்காக 8 வகையான நடவடிக்கைகள் மேற்கொண்டது ஜெ. தலைமையிலான அ.தி.மு.க. அரசு.

 

nakkheeranoffice


அத்தனை அடக்குமுறைகளையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்த்து கடந்த 8 வருடங்களாக நக்கீரன் சட்டத்தின் துணையுடன் போராடி வருகிறது.


இந்நிலையில், தந்தி டி.வி.யில் ஒளிபரப்பான ""ஜெ. ஜெயலலிதா எனும் நான்'' என்ற தொடரில் பேசியுள்ளார் அ.ம.மு.க. துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவர் அளித்த பேட்டியில், ""எங்கேயாவது காரில் போகும் போது ரோட்டுக் கடையில மசால் வடை போடும் போது அதை (ஜெ.) வாங்க சொல்லுவாங்க. பாய்லர் டீ அவுங் களுக்கு பிடிக்கும். இதெல்லாம் 88 - 89-ல்.


எங்க இளவரசி மாமி சமைத்தால் அவர்களுக்கு பிடிக்கும். தஞ்சாவூர் சமையலை சமைக்க சொல்லி ஞாயிற்றுக்கிழமை சாப்பிடுவாங்க. நான் வெஜிடேரியனும் (அசைவம்) சாப்பிடுவாங்க. வெஜிடேரியனும் சாப்பிடுவாங்க. சில நாள் சனிக்கிழமை, வியாழக்கிழமைன்னு நாங்க விரதம் இருப்போம். அதுக்கு அவங்க. "நானே அசைவம் சாப்புடுறேன்... சாப்பிடுப்பா'ன்னு சொல்லுவாங்க...


"2014 சிறைக்குச் சென்ற பிறகு சுத்தமாக அசைவத்தை விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் வெஜிடேரியனா மாறிட்டாங்க. எங்க சித்தியும் (சசிகலா) வெஜிடேரியனா மாறிட்டாங்க'’’ எனத் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா அசைவம் சாப்பிடுவார் என்று அவரது உணவுப் பழக்கம் குறித்து இப்போது தினகரன் வெளிப்படையாகப் பேசி யுள்ள நிலையில், அதே உணவுப் பழக்கம் குறித்து அன்று எழுதியதற்காகத்தான் நக்கீரன் மீது கொடூரமான 8 வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்று ஜெ.வின் உணவுப்பழக்கம் எத்தகையது என்பது தினகரன் வாயால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

​​banwarilal prohit


 

அதுபோலவே, ‘"கவர்னர் கறார்-ராஜ்பவனில் சைவப் பூனைகள்'’ என்ற தலைப்பில், பன்வாரிலால் புரோகித் சைவம் என்பதால், ராஜ்பவனில் அசைவ உணவு சமைக்கப்படுவதில்லை என்ற செய்தியையும் நக்கீரன் வெளியிட்டிருந்தது. தற்போது ஆளுநரே, "நான் சைவ உணவு உண்பதால் ராஜ்பவனில் அசைவம் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டேன்' என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.



அதிகார அத்துமீறல்கள்-சட்டத்தின் பாய்ச்சல்கள்-தாக்குதல்கள்-சிறைவாசம்-உயிரிழப்பு எனக் கடும் சவால்களுக்கிடையே மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்க்கும் நக்கீரனின் புலனாய்வுகள் பொய்ப்பதில்லை.


 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.