Skip to main content

ரோடு போட்டாலும், யார் கேட்டாலும், தரவேமாட்டோம்! - நில உரிமையை நிலைநாட்டும் நெயில் ஹவுஸ்கள்  

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
nail house

 

சேலம் டூ சென்னை பசுமை வழிச்சாலை வந்தால் இரண்டு மணி நேரம் மிச்சமாகும் என்று பசுமையான வயல்களை அழித்தும், மலைகளைக் குடைந்தும் பசுமை வழிச்சாலையை அமைக்க இருக்கின்றன மத்திய மாநில அரசுகள். இதற்கு மக்களிடையே எதிர்ப்பும் கட்சிகளிடமிருந்து கண்டனங்களும் வந்த வண்ணம் உள்ளன. இருந்தும் சின்சியராக மாநில அரசு பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்த ஆரம்பித்துவிட்டது. நீதிமன்றத்தில் இதற்காகத் தடை உத்தரவு கோரியும், சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போதுதான் நெயில் ஹவுஸ் என்ற ஒன்றை பற்றி தெரிகிறது.

 

nail house 2

 

நெயில் ஹவுஸ், அதான் ஆணி வீடு. ஆணி அடித்தார் போல் அங்கேயே சொருகி கொள்ளும் வீடுகள். நிலம் என்பது ஒருவருடைய உரிமை என்று பல அரசியல் சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு கார்ப்ரேட்டுக்கோ பெரிய அளவில் நிலம் வேண்டும், அப்படி வாங்கும்போது அந்த இடத்தில் ஒருவருடைய குறுகிய நிலம் இருந்தால், அதையும் வாங்கவேண்டும் அல்லவா? அதற்கு அவர்கள் நிலத்திற்கான பணம், அல்லது வேறொரு நிலத்தை அதன் உரிமையாளருக்கு அளிக்க வேண்டும். இதுவும் அந்த உரிமையாளர் ஒப்புக்கொண்டால் மட்டுமே. அப்படி நிலம் அரசாங்கத்திற்காக தேவைப்படுகிறது என்றால்,  பலர் கொடுத்துவிடுவார்கள். ஆனால், சிலர் 'என் நிலம் என் உரிமை' என்று வெளியேற மாட்டார்கள். அப்படி வெளியேறாமல், சுற்றி சாலையோ வேறு கட்டுமானங்களோ இருக்க நடுவில் தனியாக, பிடிவாதமாக நிற்கும் வீடுகள்தான் நெயில் ஹவுஸ் என்று அழைக்கப்படுகின்றன.

 

nail house 3

 

இதுபோன்ற வீடுகள் பல சீனாவில் காணப்படுகின்றன. நீண்ட சாலைக்கு நடுவில் தடையாய் ஒரு வீடு, சுற்றிலும் வேறொருவர் கையகப்படுத்திய நிலத்திற்காக பள்ளம் பறிக்க நடுவில் ஒரு வீடு தீவு போன்று காட்சியளிக்கிறது. அமெரிக்காவில் பெரிய கட்டடத்திற்கு நடுவில் ஒரு சின்ன குறுகிய வீடு. இதுபோன்ற வீடுகளைப் பார்க்கும்போது, தனி மனிதனின் உரிமைக்கும் போராட்டத்துக்கும் அந்த அரசுகள் கொடுத்திருக்கும் மரியாதை (அல்லது உறுதியான சட்டம்) தெரிகிறது. இந்தியாவில் மட்டும் ஏன் இதுபோன்ற நெயில் ஹவுஸ்கள் இல்லை? யாரும் கேட்காத சாலைக்காக இத்தனை ஆயிரம் ஏக்கர் விவசாயத்தை, மரங்களை பிடுங்கி எறியும் அரசுக்கு ஓரிரு வீடுகளா பெரிய விஷயம்?   
 

Next Story

''எட்டு வழிச்சாலை... நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும்''-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி! 

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

"Eight-lane highway... should be done by acquiring the land"- Minister AV Velu interviewed!

 

'எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ''எட்டு வழிச் சாலையை பொறுத்த அளவிற்கு முதல்வர் பிரச்சனைகளை அலசி பார்த்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள். நிலம் கொடுப்பவரிடம் சந்தை மதிப்பிற்கான பணத்தை கொடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் இந்த திட்டத்திற்கு எதிரி கிடையாது. நாங்கள் ஏற்கனவே ஆட்சி நடத்தி இருக்கிறோம். பல சாலைகளை நாங்களே போட்டிருக்கிறோம், கையகப்படுத்தி இருக்கிறோம். இப்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.

 

சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும். நீங்கள் போகும் வண்டி, நான் போகும் வண்டி என நாளுக்குநாள் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்பொழுது என்ன செய்ய முடியும் சாலையை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். அப்பொழுது நிலத்தை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும். முதல்வர் வேண்டாம் என்று சொல்கிறார் சம்பந்தப்பட்ட மந்திரி சாலை போட வேண்டும் என்று சொல்கிறார் என்று எங்கேயாவது நிரூபியுங்கள்'' என்றார்.

 

 

Next Story

'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம்' - மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுக்கும் 8 வழிச்சாலை!  

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்திருந்தது மத்திய அரசு. 277 கிலோமீட்டர் தூரம், சுமார் 3 மணி நேரத்தில் சேலத்திலிருந்து சென்னை வந்தடையும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே சேலம் பகுதியில் விவசாயிகள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விவசாயிகளின்  எதிர்ப்பை மீறி பலரின் நிலங்களைச் சாலைக்காக கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டது. மேலும், 8 வழிச்சாலை திட்டம் என்ற பெயரில் மலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியதோடு நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

இந்நிலையில் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுத்துள்ளது இந்த விவகாரம். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்காக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (16.02.2021) சென்னை வந்தார். இதுதொடர்பாக நேற்று மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்துகொண்டார். 'விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 6 வழிச்சாலை போடப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

இந்நிலையில் சேலம் - சென்னை 6 வழிச்சாலை அமையவுள்ள சேலம், வீரபாண்டி ஒன்றியத்தை ஒட்டியுள்ள பூலாவரி பகுதி மக்கள் 'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம். 8 வழிச் சாலையானாலும் சரி, 6 வழிச் சாலையானாலும் சரி, எதற்கும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்' என்ற முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் சிலர் பேசுகையில், 'முதலில் 8 வழிச்சாலை என்றார்கள், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இன்று 6 வழிச்சாலை என்கிறார்கள், இது ஏமாற்று வேலை. 8 வழிச்சாலை போடத்தான் இவ்வாறு கூறி வருகிறார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி என்பதே சாலைக்காக நிலத்தை அபகரிக்கச் செய்யும் முயற்சி' என்றனர்.