Skip to main content

விபச்சார புரோக்கருக்கு இத்தனை மரியாதையா? சல்யூட் அடிக்கும் சல்லாப போலீஸ்!

Published on 02/09/2020 | Edited on 02/09/2020
ttttt

 

 

சில தினங்களுக்கு முன்னர், நாகர்கோவில் சற்குணவீதியில் இருக்கும் ஒரு வீட்டில் கோழிக்கடை என்ற போர்வையில், விபச்சாரம் நடத்திவந்த இலந்தையடிவிளையை சேர்ந்த விஜய் ஆனந்தை தனிப்படை எஸ்.ஐ. சாம்சன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவருடன் திருவனந்தபுரம், மதுரை மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் உட்பட, சல்லாப ஆண்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

 

விஜய் ஆனந்த் மீதான இந்த கைது நடவடிக்கை குமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, கடந்த நான்காண்டுகளாக குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு ட்ரான்ஸ்ஃபரில் சென்ற உயரதிகாரிகள், எஸ்.ஐ.கள் உள்ளிட்ட சல்லாப காக்கிகள் சிலருக்கு ஷாக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்நிலையில், வழக்குப்பதிவு செய்து கோட்டார் காவல்நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்த விஜய் ஆனந்தை, ஒரே மணிநேரத்தில் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில், காவல்நிலைய ஜாமீனில் விடுவித்து, காவல்துறை வாகனத்திலேயே அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதோடு அவர் வழியில் குறுக்கிட்ட தனிப்படை அதிகாரியும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஒரு விபச்சார புரோக்கருக்கு காவல்துறையில் இத்தனை மரியாதையா என்ற கேள்வியுடன் விஜய் ஆனந்தை பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது நமக்கே அதிர்ச்சி உண்டானது.

 

“வழக்கறிஞர் என்று சொல்லிக் கொண்டாலும் விஜய்ஆனந்த் எந்த பாரிலும் உறுப்பினராக இல்லை. மாவட்டத்தின் பல இடங்களில் ஆயுர்வேத மசாஜ் சென்டர்களைத் தொடங்கி, அதில் விஐபிக்களுக்கும், நவீன கோழிக்கடை என்ற பெயரில் மிடில் தரப்பினருக்கும் என ரகம்பிரித்து விபச்சாரம் நடத்துவதுதான் அவரது பிரதான தொழில். தனது சல்லாப தொழிலுக்கு இடையூறு செய்யாமல் இருப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து மட்ட போலீஸ் அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்களுக்கு வேண்டும் போதெல்லாம் பெண்களை அனுப்பிவைத்து, கைநிறைய கரன்சியையும் கொடுத்தனுப்புவார். இதனாலேயே குமரி மாவட்ட காவல்துறையில் அவருக்கு அடிபணிந்து கிடக்கும் அதிகாரிகள் ஏராளம்.

 

மாவட்டத்தில் புதிதாக எந்த காவல்துறை அதிகாரி வந்தாலும், விஜய் ஆனந்த் பழகிவிடுவார். அல்லது ட்ரான்ஸ்ஃபரில் போகிறவர் இவரை, புதிய அதிகாரிக்கு அறிமுகம் செய்துவிடுவார். இப்படி விஜய் ஆனந்துடன் பழக்கம் வைத்திருந்த பல அதிகாரிகள், சென்னை உட்பட பல பகுதிகளில் முக்கியப் பதவிகளில் இருக்கின்றனர். இன்றைக்கும் அவர்கள் குமரி மாவட்டம் வரும்போதெல்லாம் விஜய் ஆனந்தின் ஏற்பாட்டில் எஸ்டேட் பங்களாக்களில் குளிர் காய்ந்துவிட்டுத்தான் செல்கிறார்கள். தற்போது விஜய் ஆனந்தை ஸ்டேஷன் பெயிலில் விடச்சொன்னதே கூட, குமரியில் சப்-டிவிஷன் அதிகாரியாக இருந்து, இப்போது மீண்டும் குமரிக்கு பதவி உயர்வில் வந்திருக்கும் ஈசனின் பெயரைக் கொண்ட அதிகாரிதான். மேலும், குமரி மாவட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் 3 டிஎஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் விஜய் ஆனந்தின் ரெகுலர் கஸ்டமர்களாக இருக்கிறார்கள்.

 

சாத்தான்குளம் லாக்கப் படுகொலை புகழ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இங்கு டியூட்டியில் இருந்தபோது விஜய் ஆனந்துக்கு தனி மரியாதையே இருந்தது. ஸ்ரீதருக்கு சல்லாபம் தேவைப்படும் போதெல்லாம், அவர்கேட்ட விதத்தில் கச்சிதமாக பெண்களை ஏற்பாடு செய்து தருவார் விஜய் ஆனந்த். அதேபோல், விஜய் ஆனந்தின் ரெகுலர் கஸ்டமரான எஸ்.பி. அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தின் டி.எஸ்.பி. மகேந்திரனுடன் அலுவலகத்திலேயே விஜய் ஆனந்த் பீர் குடித்த சம்பவம், அந்த அலுவலக அமைச்சு பணியாளர்கள் மூலமாக எஸ்.பி.க்கு போனதால், டிஎஸ்.பி. மதுரைக்கு மாற்றப்பட்டாரே தவிர, விஜய் ஆனந்த் மீது துரும்புகூட படவில்லை. எஸ்.பி. அலுவலகத்திற்கு விஜய் ஆனந்த் வந்தால், அதிகாரிகளுக்கு இணையாக சல்யூட் போடுமளவுக்கு, குமரி மாவட்ட காவல்துறை கேடுகெட்டுப் போயிருக்கு’’ என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள், விஜய் ஆனந்த் பற்றிய தகவல்களை நம்மிடம் விளக்கிய காவல்துறையினர்.

 

விஜய் ஆனந்தைக் கைதுசெய்த தனிப்படை போலீசாரிடம் பேசினோம். "புது எஸ்.பி.க்கு வந்த தகவலின் அடிப்படையில், அவரது உத்தரவின் பேரில்தான் விஜய் ஆனந்தையும், அவரது கும்பலையும் பிடித்தோம். இந்த ஊரடங்கு நேரத்தில் இ-பாஸ் கூட இல்லாமல், வேறு மாவட்டங்களில் இருந்து இளம்பெண்களைக் கூட்டிவந்து தொழில் நடத்துமளவுக்கு, மாவட்ட எல்லையில் செக்போஸ்ட் போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர்'' என்றனர்.

 

ppttt


எஸ்.பி. பத்ரி நாராயணிடம் இதுபற்றி கேட்டபோது, "நான் புதிதாக வந்து சில நாட்கள்தான் ஆகிறது. யார்யார் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டிருக்கிறேன். விஜய் ஆனந்த் பற்றி விசாரிக்கிறேன்'' என்றார்.

 

கடந்த நான்கு ஆண்டுகளாக குமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் செய்கிற தவறையெல்லாம் கண்டிக்க வேண்டிய உச்ச அதிகாரி ஒருவர், அவர்களைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தார். இதனால், அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதையே செய்வார்கள். இதுதான் குற்றங்கள் அதிகரிக்கவும் காரணம் என்கின்றனர் குமரி மாவட்ட காவல்துறையை நன்கு அறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.