Skip to main content

“என் குழந்தை குடியுரிமையோடு பிறக்க வேண்டும்” - 1400 கி.மீ. சைக்கிளில் பயணிக்கும் இலங்கைத் தமிழர்

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

“My child should be born with citizenship”- 1400 km. A Sri Lankan Tamil traveling on a bicycle

 

சொந்த நாட்டில் (ஈழம்) வாழ வழியின்றி அகதியாக இந்தியாவிற்குள் நுழைந்து பல வருடங்கள் அங்கேயும் அகதி என்ற முத்திரையோடு வாழ்ந்து நமக்கென்று ஒரு குடியுரிமை வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து 15, 20, 30 நாட்கள் கடினமான கடல் பயணம் செய்து ஆஸ்திரேலியா செல்லும் ஈழத் தமிழர்களில் பல ஆயிரம் பேர் கடலுக்குள்ளேயே மடிந்து போனாலும் சில ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளுடன் ஆஸ்திரேலியா கடல் கரை ஏறும்போது விடும் நிம்மதி பெருமூச்சில் இனி எமக்கென்று ஒரு நாடு உள்ளது என்பது அனலாக வரும்.

 

ஆனால் கடந்த 12 வருடங்களாக ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாகச் சென்ற சுமார் 12 ஆயிரம் பேருக்கு இன்னும் நிரந்தர விசா கிடைக்காததால் தங்கள் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் உணவு, உறைவிடம், மருத்துவச் செலவுக்கே சரியாகப் போவதால் தங்களின் கனவான குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் தான் எங்களுக்கு நிரந்தர விசா கொடுங்கள், மருத்துவ அடையாள அட்டை கொடுங்கள் என்று தொடர்ந்து போராடும் இலங்கை, ஈரான் மக்கள் கடந்த மாதம் 22 ஆம் தேதி 22 பெண்கள் பாராளுமன்றம் நோக்கி 670 கி.மீ நடைப் பயணத்தை தொடங்கி கடினமான பாதைகளில் வலிகளைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறார்கள்.

 

“My child should be born with citizenship”- 1400 km. A Sri Lankan Tamil traveling on a bicycle

 

இவர்கள் எதிர்வரும் 18 ஆம் தேதி கான்பராவில் பாராளுமன்றம் முன்பு கூடி நின்று கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர். இவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தினுஷன் என்ற இளம் கிரிக்கெட் வீரரும் 1400 கி.மீ. சைக்கிள் பயணத்தை தொடங்கி சென்று கொண்டிருக்கிறார்.

 

ஆஸ்திரேலியாவில் தனி ஆளாக சைக்கிள் பயணத்தில் உள்ள தினுஷன் நம்மிடம், “இலங்கையில் பிறந்த நான் அங்கே வாழ முடியாது என்ற நிலையில் சின்ன வயதில் பெற்றோருடன் இந்தியா வந்து 22 ஆண்டுகள் இந்தியாவில் பல முகாம்களில் வாழ்ந்தோம். உணவும் வசிப்பிடமும் கொடுத்த இந்திய அரசாங்கம் எங்களுக்கு குடியுரிமை தரவில்லை. நான் அனுமந்தை அரசுப் பள்ளியில் படிக்கும் போது தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கிய போது என்னோடு 3 மாணவர்களுக்கு தரவில்லை. எங்களுக்கு மனசு வலித்தது. நமக்கென்று ஒரு நாடு இருந்தால் இப்படி ஒதுக்கப்பட்டிருப்போமா? ஓ.சி என்று எங்களுக்கு சான்று கொடுத்தார்கள் சக மாணவர்கள் எங்களை 'ஓ.சி.' என்றே அழைக்கும் போது எங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அந்த வலிகளை பொறுத்துக் கொண்டு 22 ஆண்டுகள் வாழ்ந்தோம்.

 

“My child should be born with citizenship”- 1400 km. A Sri Lankan Tamil traveling on a bicycle

 

அதன் பிறகு தான் கடுமையான பயணம் என்பதை உணர்ந்தே கடலில் பயணித்தோம் 10 நாளில் வந்தடைய வேண்டும். ஆனால் 14 நாட்கள் ஆனது. திசைகாட்டி பழுதானதால் 2 நாள் கடலில் தவித்து ஒரு விமானம் வட்டமடித்து இறங்கியதைப் பார்த்து திசையறிந்து சென்றோம். நாங்கள் வந்தவுடன் உணவு கொடுத்து உபசரித்து தங்க வைத்தார்கள். சில மாதங்களில் தற்காலிக விசா கிடைத்தது. ஒரு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. ஆனால் 6 மாத விசா தான். விசா காலம் முடிந்ததும் வேலை கேள்விக்குறியாகும். மறுபடியும் விசா பெற வேண்டும். இப்படியே 12 ஆண்டுகள் ஓடிவிட்டது. இதற்காகத் தான் நிரந்தர விசா வேண்டும் என்கிறோம்.

 

எனக்கு 33 வயதாகிறது எனக்கு பிறக்கும் குழந்தை குடியுரிமையோடு ஒரு நாட்டின் குழந்தையாக பிறக்க வேண்டும். அகதியின் குழந்தையாக பிறக்கக் கூடாது என்பதற்காக நிரந்தர விசா கிடைக்கும் வரை திருமணம் வேண்டாம் என்று மறுத்து வருகிறேன். நான் ஒரு கிரிக்கெட் வீரர் பல நூறு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறேன். இந்தியாவில் பல போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆஸ்திரேலியாவிலும் எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. எல்.எம்.எஸ். கிரிக்கெட் அணிக்கு என்னை தேர்வு செய்து அழைத்தார்கள். தற்காலிக விசாவில் இருப்பதால் பாஸ்போர்ட் எடுக்க இயலாது. இதனால் அந்த வாய்ப்புகள் என்னை விட்டுப் போனது. 

 

“My child should be born with citizenship”- 1400 km. A Sri Lankan Tamil traveling on a bicycle

 

ஆஸ்திரேலிய அரசாங்கம் நல்ல அரசு தான். எங்கள் கோரிக்கைகள் அவர்களின் கவனத்திற்கு முழுமையாக போனால் எங்களை ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகத் தான் அக்டோபர் 18 ஆம் தேதி பாராளுமன்றம் முன்பு பல ஆயிரம் அகதிகள் ஒன்றுகூடி அமைதியான முறையில் எங்களுக்கு நிரந்தர விசா கொடுங்கள் என்று கேட்க இப்போது 22 பெண்கள் 670 கி.மீ நடந்து வருகிறார்கள். நான் 1400 கி.மீ சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறேன்.

 

சைக்கிள் பயணம் எப்படி உள்ளது?


இது ரொம்பவே கடுமையான பயணமாக உள்ளது. நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாயைிலேயே என் பயணம் இருப்பதால் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லும் போது என்னைத் தள்ளிவிடுகிறது. பல இடங்களில் நிலை தடுமாறி சுதாரித்து வந்தேன். சில நேரங்களில் சைக்கிள் டயர் பஞ்சராகி சிரமப்பட்டு நானே பஞ்சர் ஒட்டி வந்திருக்கிறேன். காட்டுப் பகுதியில் வன விலங்குகள், பாம்புகளிடம் இருந்து தப்பி வந்தேன். உணவுக்காக கிடைக்கும் இடங்களில் வாங்கி வைத்துக் கொண்டு கிடைக்கும் இடங்களில் தங்கி கால் வலிக்கு மருந்து போட்டுக் கொண்டு சைக்கிள் மிதிக்கிறேன். எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் எங்களின் அகதி என்ற சொல்லை மாற்றத் தான். இன்னும் சில நாளில் (அக்டோபர் 18) என் பயணம் நிறைவு பெறும். அன்று எங்களுக்கான சுதந்திரம் கிடைக்கும் என்ற கனவோடு அனைத்து வலிகளையும் பொறுத்துக் கொண்டு பயணிக்கிறேன்.

 

18 ஆம் தேதி எங்கள் சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கான்பரா பாராளுமன்றம் நோக்கி வருகிறார்கள். பல ஆயிரம் பேர் வர முடியாவிட்டாலும் அந்தந்த இடங்களில் இருந்தே எங்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ஊடகங்களும் எங்களுக்காக குரல் கொடுங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்” என்றார்.

 

நிரந்தர விசா கோரிக்கை பயணம் வெற்றி பெற வாழ்த்துகளைக் கூறினோம்.

 

 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மீண்டும் ஒரு ஐசிசி கோப்பை; தொடரும் மஞ்சள் படையின் ஆதிக்கம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
An ICC trophy again; The continued dominance of the yellow army!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் வில்லோமூரே பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கொன்ஸ்டாஸ் ரன் ஏதும் எடுக்காமல் இந்திய அணியின் லிம்பானியின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கேப்டன் வெய்ப்கென் உடன் சேர்ந்து டிக்சன் நிதானமாக ஆடத் தொடங்கினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் வெய்ப்கென் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். டிக்சனின் 42, ஹர்ஜாஸ் சிங்கின் 55, ஆலிவர் பீக்கின் 46 ரன்கள் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் லிம்பானி 3 விக்கெட்டுகளும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளும், சாவ்மி, முக்‌ஷீர் கான் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அர்ஷினை ஆரம்பத்திலேயே 3 ரன்னில் வெளியேற்றி ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட் முஷீர் கானும் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமற்றினார். அடுத்து வந்த கேப்டன் சஹரனும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அரையிறுதியில் சிறப்பாக ஆடிய சச்சின் தாஸ் 9 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த மோலிய 9 ரன்களுக்கும், அவனிஷ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுபக்கம் பொறுமையாக ஆடிய ஆதர்ஷ் சிங் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் அபிஷேக் மட்டும் 42 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸி.யின் பீடர்மேன், மேக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளும், விட்லர் 2 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் மற்றும் ஸ்ட்ரேக்கர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ஆவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளது. பீடர்மேன் ஆட்டநாயகனாகவும், மாபகா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2021 முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள ஐசிசி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022 டி20 உலகக்கோப்பையை இங்கிலந்து அணி வென்றது. அதைத் தவிர்த்து 2021 டி20 கோப்பை, 2022 மகளிர் டி20 கோப்பை, 2023 மகளிர் உலகக்கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஆண்கள் உலகக்கோப்பை தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை என 6 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2023 இல் 3 ஐசிசி கோப்பைகள், 2024இல் தற்போது என தொடர்ச்சியாக 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி 1999 ஸ்டீவ் வாக் கேப்டன்சியில் இருந்து 2007 ரிக்கி பாண்டிங் கேப்டன்சி வரை தொடர்ச்சியாக 3 உலகக்கோப்பைகளை வென்றிருந்தது. ஒரு பத்தாண்டுகளுக்கும் மேல் அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது. பின்னர் இந்திய அணியில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் ஆஸ்திரேலிய அணியின் சாம்ராஜ்யம் சற்றே ஆட்டம் கண்டது. அதன் முதல் படியாக 2007 இல் டி20 அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் அடி கொடுத்த்து. 2008இல் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் நடந்த காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரின் மூன்று இறுதி ஆட்டங்களில் இரண்டை வென்று  ஆஸ்திரேலியாவின் வெற்றி சாம்ராஜ்யத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தது. 2011 உலகக்கோப்பை காலிறுதி என மூன்று முக்கிய ஐசிசி போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சாய்த்தது. 2019 உலகக்கோப்பையில் ஆஸி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்திய அணியின் கேப்டசியில் இருந்து தோனி விலகியதில் இருந்து ஆஸ்திரேலிய அணி மீண்டும் எழத் தொடங்கியது. இந்திய அணிக்கு கோலி, ரோஹித் என கேப்டன்களை மாற்றி மாற்றியும் ஐசிசி தொடர்களில் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது 4 ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி விஸ்வரூபம் எடுத்து வெற்றிகளைக் குவித்து தோற்கடிக்க முடியாத அணி எனும் அந்த பழைய பெயரை மீண்டும் பெற்றுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நேற்றைய மேற்கு இந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் மேக்ஸ்வெல் 5 ஆவது முறையாக சதமடித்து டி20 போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் ரோஹித்தின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வெ.அருண்குமார்