Skip to main content

"விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்... ஆனால், விவசாய சட்டத்தை பற்றி பேசக் கூடாது என்கிறார்கள்.." - முத்தரசன் தாக்கு!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

xj

 

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய கருப்புக் கொடி போராட்டத்தின்போது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை ஒன்பது பேர் இறந்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் மத்தியப் படை பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பதற்றம் குறையாமல் இருந்துவருகிறது. இதனால் அதிகாரத்தில் இருக்கும் மத்திய, மாநில அமைச்சர்கள் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. குறிப்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதல்வர் என யாரும் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் வைத்துவரும் சூழ்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் முத்தரசனிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவர் அளித்த அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள் என்று பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கிடையே லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏறியதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தபோதே விவசாயிகள் அனைவரும் எதிர்த்தனர். எந்த ஒரு சட்டமாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முழு விவாதம் செய்து, அதன்பிறகே நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்தச் சட்டம் தொடர்பாக எந்த ஒரு விவாதத்தையும் நடத்தாமல் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி இதை நிறைவேற்றியுள்ளனர். அப்படியிருந்தும் இந்த சட்டத்தில் கையெழுத்திடாதீர்கள் என்று எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்கள். இருந்தாலும் அதில் அவர் கையெழுத்துப்போட்டார். தற்போது மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அது சட்டமாகிவிட்டது. 

 

விவசாயிகளும் அவர்களால் முடிந்த அளவு எதிர்த்து பார்த்தார்கள். இந்தப் போராட்டத்தை அரசியல் கட்சியினர் தூண்டிவிட்டதாக மத்திய அரசு முதலில் கூறியது. பிறகு அகாலிதள தீவிரவாதிகள் போராடுகிறார்கள் என்று அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தது. எதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதால், அதனை தற்போது அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக கூறுகிறீர்கள். விவசாயிகள் அவர்களிடம் 11 சுற்று பேசினார்கள், அது ஏன் தோல்வி அடைந்தது. ஏனென்றால் விவசாய சட்டத்தை தவிர விவசாயிகளை வேறு விஷயங்கள் பற்றி பேச சொல்கிறார்கள், இதற்கு பேர் பேச்சுவர்த்தையா? பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றலாம் என்று நினைத்து அவர்கள்தான் ஏமாந்து போகப்போகிறார்கள். 

 

இன்றைக்கு அமைதியான முறையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் உ.பி.யில் போராடினார்கள். அங்கே இவர்கள் வன்முறை வெறியாட்டத்தை ஆடியுள்ளார்கள். சுதந்திரத்துக்கு முன்பு ஜாலியன் வாலாபாக்கில் ஆங்கிலேயர்கள், அடைக்கப்பட்ட இடத்தில் இந்தியர்கள் மீது மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தை ஆடினார்கள். அந்த சம்பவத்துக்கு சிறிதும் குறைவில்லாதது இந்த சம்பவம். அமைதியாக சென்றுகொண்டிருப்பவர்களை வேண்டுமென்றே இவர்கள் தாக்கியுள்ளனர். சட்டத்தில் எங்கேயாவது அமைதியான முறையில் போராடக்கூடாது என்று கூறியிருக்கிறதா? காட்டாட்சி தர்பார் நடத்தலாம் என்று இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருபோதும் மற்ற கட்சிகள் இதனை அனுமதிக்காது. 

 

 

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.