Skip to main content

சாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: நிர்மலா பெரியசாமி ஆவேசப் பேட்டி

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
rape


சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காது கேட்காத சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே குடியிருப்பில் பணியாற்றும் லிப்ட் ஆப்ரேட்டர், செக்ரியூட்டிகள் உள்பட 17 பேர் அவரை 7 மாதங்களாக பாலியல் வன்முறை செய்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

 

 

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து நக்கீரன் இணையதளத்தில் கருத்து தெரிவித்தார் நிர்மலா பெரியசாமி. 
 

''இந்த செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனம் கொதிக்கிறது. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத சம்பவமாக இருக்கிறது. அதுவும் அந்தக் குடும்பம் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே இந்த சம்பவம் 7 மாதங்களாக நடந்திருக்கிறது என்றால் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்று அந்த பெற்றோர்கள் நினைத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை அவர்களுடைய வேலைக்காரர்களே பயன்படுத்தி இந்த செயலை செய்திருக்கிறார்கள்.
 

rapenirmala periyasamy

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேருக்கும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. வழக்கறிஞர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். யாரும் இவர்களுக்கு ஆதரவாக வரக்கூடாது. போக்சோ சட்டப்பிரிவில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். வழக்கறிஞர்கள் இந்த குற்றவாளிகளை நீதிமன்றத்திலேயே தாக்கியது சரிதான். குற்றவாளிகளை தாக்கியதில் தவறில்லை. 
 

நீதிமன்றம் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். இனி யாரும் இந்த தவறுகளை செய்ய முடியாத அளவுக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். கொடூரமான தண்டனை வழங்க வேண்டும். சாகும் வரை தூக்கிலிட வேண்டும். இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். 
 

 

 

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 பேரின் குடும்பத்தினரும் அவர்களை கைவிட வேண்டும். இப்படிப்பட்டவர்களை கணவர் என்று சொல்லாதீர்கள், மகன் என்று சொல்லாதீர்கள், உறவினர்கள் என்று சொல்லாதீர்கள். 17 பேருக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று 17 பேரின் உறவினர்களே சொல்ல வேண்டும்.
 

பொதுவாக பெற்றோர்களுடைய கவனம் பிள்ளைகள் மீது இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் தோழமையாக, அன்பாக பழகினால் அனைத்து பிரச்சனைகளையும் உங்களிடம் தெரிவிப்பார்கள். இந்த பிரச்சனையை அம்மாவிடம் சொல்லலாம், இந்த பிரச்சனையை அப்பாக்கிட்ட சொல்லலாம் என்று பிள்ளைகளுக்கு நம்பிக்கை கொடுத்து வளர்க்க வேண்டும். பிரச்சனைகள் பெரியதாகாமல் ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து''. 



 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.