Skip to main content

"கமல், ஒருத்தரை பார்த்த உடனே ரெண்டு விஷயத்தை கண்டுபிடிச்சுருவார்!" -முரளி அப்பாஸ் சிறப்பு பேட்டி

Published on 07/11/2020 | Edited on 07/11/2020
Murali Abbas

 

 

முரளி அப்பாஸ்... கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் குரலாக தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பவர். கமல் மனதில் நினைப்பதை செய்தியாக்குபவர். தனது சினிமா இயக்குனர் அடையாளத்தை விடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டராக பங்காற்றி வருபவர். கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு பரபரப்பாக இருந்த மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸை அழைத்து சிறிது நேரம் பேசினோம்.  

 

கமல்ஹாசனை நடிகராக சந்தித்தீர்களா? கட்சி தலைவராக சந்தித்தீர்களா? முதல் சந்திப்பு எப்போது?

 

1983ல் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நான், அசிஸ்டெண்ட் டைரக்டர், டைரக்டராக இருந்திருக்கிறேன். 2018 வரையில் கமல்ஹாசனை சந்தித்ததில்லை. நான் ஒரு சினிமா இயக்குநர் என்ற முறையில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வது வழக்கம். பெரும்பாலும் நான் பங்கேற்கும் விவாதம் அரசியல் சார்ந்தவையாக சென்றது. நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்ற விவாதத்தில் வரலாம் என்று பேச ஆரம்பித்தேன். அதனுடைய நீட்சியாக ம.நீ.ம. கட்சியில் இணைந்தேன்.

 

ம.நீ.ம. கட்சி 21.பிப்.2018ல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 15ஆம் தேதி கமலை சந்தித்து இந்த கட்சியில் இணைந்தேன். ஆறு நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்து கட்சியில் இணைந்தேன். ஏறத்தாழ 30 ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் அவரை நான் பார்த்தது இல்லை. ஒரு பொதுநிகழ்ச்சியில் கூட நான் பார்த்தது இல்லை. நான் முதல் முதலில் பார்த்தது 15.பிப்.2018ல்தான். எங்கள் தலைவருடன் சேர்ந்து பயணிக்கத்தான் சென்னைக்கே வந்தேன் என்று இப்பத்தான் தெரிகிறது.

 

கமலுடனான உங்கள் மனதுக்கு நெருக்கமான தருணம் என்று எதை சொல்வீர்கள்?

 

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதால் அதனை தொடர்ந்து கமல் கவனிப்பார். அரசியலில் தெளிவு இருக்கிறது என்பதால் என்னை செய்தித் தொடர்பாளராக நியமித்தார். செய்தித் தொடர்பாளர் என்பது கட்சியின் குரல் போன்றது. அதனால் தலைவரின் கொள்கையை கவனமாக கையாள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அத்தகைய பொறுப்பை உடனே கொடுத்தது என் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை புரிந்து கொண்டேன். அவர் ஏதாவது செய்தி சொல்லிவிட்டு, அதைப் பற்றிய விவாதம் வந்தால் அதை இப்படி சொல்லுங்கள் என்று என்னிடம் இதுவரை சொன்னதே இல்லை. நானும் கேட்டுக்கொண்டதும் இல்லை. அவர் சொன்னதை புரிந்துகொண்டு விவாதங்களில் பங்கேற்பேன்.

 

தினமும் விவாதங்களுக்கு போறீங்களே? உங்க தலைவர் உங்களை பாராட்டுவாரா? என என் மனைவி என்னிடம் ஒரு முறை கேட்டார். பாராட்டியதில்லை. ஆனால் ஏதாவது தவறாக பேசியிருந்தால் ஐந்து நிமிடத்தில் கூப்பிட்டிருப்பார். இதை தவிர்த்திருக்கலாம், அப்படி சொல்லியிருக்கலாம் என்று மற்றவர்களுக்கு சொல்லியதை கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த இரண்டரை வருடத்தில் என்னை அப்படி கூப்பிட்டு சொன்னதில்லை. இதைவிட பெரிய பாராட்டு இல்லை. பிப்ரவரியில் கட்சி தொடங்கப்பட்டது, செப்டம்பரில் இந்த பதவியை எனக்கு கொடுத்தார். மிகச்சிறந்த தேர்வாளர் கமல். 40 வருடத்தில் சினிமாத்துறையில் பல அனுபவங்களை பெற்றவர். ஒரு மனிதரை சீக்கிரம் எடை போட்டுவிடுவார். அவரது பார்வையில் இரண்டு விசயங்களை பிடித்துவிடுவார். ஒன்று திறமை. இன்னொன்று நேர்மை. திறமை கம்மியாக இருந்தால் கூட அதனை தயார் செய்வார். ஆனால் நேர்மை கம்மியாக இருந்தால் அவரிடம் ஒட்ட முடியாது. ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

 

இப்போது உள்ள அரசியல் சூழலில் எந்த நம்பிக்கையில் அவருடன் பயணிக்கிறீர்கள்?

 

நம்பிக்கை எது சார்ந்தது என்பதை பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் சினிமாத்துறையில் நுழைந்ததில் இருந்து அரசியலை கவனித்து வருகிறேன். அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தபோது அரசியல் பேசிக்கொண்டிருப்பேன். அந்த அரசியல் இன்று பயன்படுகிறது. நான் பேசிய அரசியலை பார்த்த எனது நண்பர்கள், இதைத் தவிர வேறு அரசியல் கட்சிக்கு நான் போயிருந்தால் நிச்சயமாக என்னை கேலி செய்திருப்பார்கள், சிரித்திருப்பார்கள். இங்க வந்ததால்தான் என்னை கௌரவமாக பார்த்தார்கள்.

 

நான் எனது கட்சியை விரும்புகிறேன். விரும்புவதற்கு காரணம், ஐம்பது ஆண்டு அரசியலில் இருந்து வேறொரு அரசியல் தமிழ்நாட்டுக்கு வரவேண்டுமென்றால் ஒரே கதவு கமல்தான். 67க்குப் பிறகு திமுக அரசியலை மாற்றியது. தற்போது தமிழகம் மீண்டும் மாற வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டது. ஏனென்றால் அது மிகப்பெரிய பழையதாகப் போய்விட்டது.

 

அரசியல் மாற்றம் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கு கமல்தான் வரவேண்டும். வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வியை நான் பார்ப்பது இல்லை. வரவைக்கணும், வந்தாகணும். எவ்வளவு சாதகமான அம்சங்கள் இருக்கிறது, பாதகமான அம்சங்கள் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். பாதகமான அம்சங்களை பார்த்து நாங்கள் தளரவில்லை. அதனை உடைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் தலைவர் சொல்லுவார் 'என்னுடைய மிச்ச காலம் மக்களுக்காக' என்று. நான் தெளிவாக சொல்கிறேன், என்னுடைய மிச்ச காலம் அவருக்காக பிரச்சாரம் செய்வதுதான். நான் என்னுடைய அனுபவத்தில் இவ்வளவு நேர்மையான மனிதரை சந்தித்தது இல்லை. தைரியமான மனிதரை பார்த்திருக்கலாம், திறமையான மனிதரை பார்த்திருக்கலாம். இந்த மூன்றையும் ஒன்றாக நான் அவரிடம் பார்க்கிறேன்.

 

இந்த நேர்மை நம்ம அரசியலுக்கு தேவைப்படுகிறது. இந்த திறமை தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது. இந்த தைரியம் இன்று ரொம்ப அவசியமாக தேவைப்படுகிறது. பிராந்திய மாநிலத்தில் இருந்து சென்ட்ரலில் மோதி காரியம் சாதிக்க வேண்டுமென்றால் தைரியம் தேவைப்படுகிறது. பயன்படுத்திக்கொண்டால் தமிழ்நாட்டுக்கு அதிர்ஷ்டம். பயன்படுத்தாமல் விட்டால் துரதிருஷ்டம். இந்த கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதே எங்களது நோக்கம். அதனைத் தவிர வேறு எதுவும் நாங்கள் சிந்திக்கவில்லை.

 

 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.