Skip to main content

முகிலனை அசிங்கப்படுத்தி பத்திரிகையாளர்கள் முன்பு நியாயம் கேட்பேன்...

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

முகிலன் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், குளித்தலையில் ஒரு மகளிர் விடுதியில் தங்கி யிருக்கிறார். முகிலனுக்கும் அவருக்கும் நடுவில் என்னதான் நடந்தது? அவரையே சந்தித்து கேட்டோம். ""சின்ன வயசுல இருந்தே இயற்கை மீது ஈடுபாடு. எம்.சி.ஏ. படிச்சிருக்கேன். திருச்சி, சென்னை, சிங்கப்பூரில் வேலைசெய்திருக்கேன். 2015-ல் அரசியல் மாற்றம் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எல்லோரும் தமிழகம் முழுவதும் சகாயம் ஐ.ஏ.எஸ். அரசியலுக்கு வரவேண்டும் என்று பேரணி நடத்தியபோது பங்கேற்றேன். பிறகு "பனைமரம்' சம்பந்தமான போராட்டத்தில் முதன்முதலாக முகிலனோடு கலந்துகொண்டேன். அறிமுகம் ஏற்பட்ட பின், நான் அவர் அழைத்துச்செல்லும் எல்லா போராட்டத்திலும் கலந்து கொண்டேன். முகிலன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு, பத்திரிகை செய்திகளுக்கு நான்தான் அழைப்புக் கொடுப்பேன். இந்நிலையில் ஒருநாள் கட்டாயப்படுத்தி என்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார். நான் எதிர்ப்பு தெரிவித்தேன். 

 

girl

"என் மனைவிக்கும் எனக்குமான தொடர்பு குறைந்துபோனது. உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்'’ என்று வாக்குறுதி கொடுத்து சமாதானம் செய்தார். இதற்கிடையில 1 வருடம் சிறையில் அடை பட்டுக் கிடந்தபோது அவருக்கு சிறையில் நடந்த கொடுமைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தினேன். அவர் வெளியே வந்தவுடன் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினேன். எங்கள் நெருக்கத்தால், என்னை முகிலன் கடத்திவிட்டார் என என் அம்மா காவல் துறையில் புகார் கொடுக்குமளவுக்குப் போனது. அதனை மறுத்து, நான் வீட்டை விட்டு வெளியேறி முகிலன் ஆதரவில் அவர் நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். எங்கள் நெருக்கத்தைப் பார்த்தவர்கள் முகிலனிடம் கேட்க ஆரம்பிக்கவும் அவர் என்னை தவிர்க்க ஆரம்பித்தார். அது எனக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது.


  mukilan



அப்போதுதான் முகிலனுக்கு நன்கு தெரிந்த அரசியல்கட்சி மற்றும் தோழர்கள் அனைவரிடமும் முறையிட்டேன். அச்சமயம் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து இரண்டாம் முறையாக பிரஸ்மீட் தேதி அறிவித்தார். அப்போது முகிலனின் நண்பரிடத்தில் "எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் அந்த பிரஸ் மீட்டில் கலந்துகொண்டு முகிலனை அசிங்கப்படுத்தி பத்திரிகையாளர்கள் முன்பு நியாயம் கேட்பேன்' என்று தகவல் அனுப்பினேன். அதற்குப் பயந்த முகிலன் வேறொரு நண்பர் மூலம் பிரஸ் மீட்முடிந்த இரண்டு நாள் கழித்து சந்திப்பதாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார். அதைப் பார்த்தவுடன் கொஞ்சம் அமைதி ஆனேன். அந்த பிரஸ்மீட்டில்தான் "நான் கடத்தப்படலாம், உன் உயிருக்கு ஆபத்து' என்றெல்லாம் பேசிவிட்டு மறைந்தார்.


சி.பி.சி.ஐ.டி. போலீஸ் என்னை விசாரணைக்கு அழைத்த போது முகிலனை தொடர்புபடுத்தி எதுவும் சொல்லக் கூடாதென முகிலனின் நண்பர்கள் நிர்பந்தப் படுத்தினார்கள். ஆனால் என்னி டமிருந்த ஆதாரங்கள் அனைத் தையும் ஒப்படைத்தேன். நானும் போராளிதான் ஆனால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத்தான் அவரிடம் போராடி வருகிறேன். தமிழகத்திற்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். போராட வரும் இளம் பெண்களுக்கு எனக்கு நேர்ந்த அநீதி ஒரு முன்னுதாரணமாக அமையும்'' என்று அனைத்தையும் விவரித்துமுடித்துவிட்டுதான் ஓய்ந்தார்.
 

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.