Skip to main content

"வள்ளுவனுக்கு இறை நம்பிக்கை இருந்தது உண்மை என்றாலும்..." திருக்குறளின் நிஜத்தை பேசும் சத்தியவேல் முருகனார்!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

திருக்குறள் தொடர்பான விவாதங்கள் கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவிப்பது, அவரின் சிலைக்கு மை அடிப்பது, சிலையை சேதப்படுத்துவது என்று தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திருக்குறள் தொடர்பாகவும், திருவள்ளுவர் தொடர்பாகவும் மு.பெ சத்தியவேல் முருகனார் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். நம்முடையை கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

கடந்த சில நாட்களாக திருக்குறள் பற்றிய சர்ச்சைகள் அதிகம் எழுவதை பார்த்திருப்பீர்கள். தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும், உத்ராட்சை மாலை போட்டும் புகைப்படம் வெளியிட்டு இருந்தார்கள். கடவுள் வாழ்த்து பாடியிருக்கின்ற திருவள்ளுவர், கடவுள் பற்றி பேசியிருக்கின்ற திருவள்ளுவர், அந்த காலத்தில் வேறு எந்த மதமும் இருக்க வாய்ப்பில்லாத நிலையில் அவர் இந்துவாக இருக்கவே வாய்ப்பிருப்பதாக அவர்கள் காரணமாக கூறுகிறார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் திருவள்ளுவரை கொண்டாடுகிறோம் என்று கூறுகிறார்கள். எந்த அடையாளமும் இல்லாத ஒருத்தரை நாங்கள் எங்கள் அடையாளத்தோடு கொண்டாடுகிறோம் என்கிறார்கள். இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இதைவிட ஒரு போலியான வாதத்தை யாராலும் வைக்க முடியாது. அவர்கள் சொல்வது உண்மை போல தெரிகின்ற பச்சையான பொய். அதில் துளியளவு கூட உண்மை இல்லை. வள்ளுவர் எப்படி இருந்தார் என யாருக்கு தெரியும். வள்ளுவர் புகைப்பட நிலையத்திற்கு சென்று ஏதாவது புகைப்படம் ஏடுத்தாரா? நாமாக எதுவும் சொல்லக்கூடாது. எந்த கொள்கைக்கு எதிராக அவர் பேசினாரோ அதற்கு ஆதரவாக நாம் அவரை வைத்து பேசக் கூடாது இல்லையா? அவருக்கு கோயில் இருப்பது இன்னபிற விஷயங்கள் எல்லாம் தங்களுக்கு தோன்றியவாறு அவற்றை உருவாக்கியவர்கள் வகைப்படுத்திக் கொண்டார்கள்.

 

df



திருவள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று தான் தொடங்குகிறார். எனவே அவர் இறை நம்பிக்கையோடும், சமய நம்பிக்கையோடும் அவர் இருந்ததாக ஒருசாரார் கூறுகிறார்களே?

இல்லை, இதில் ஒரு தெளிவு வேண்டும், வள்ளுவருக்கு இறை நம்பிக்கை இருந்தது. ஆனால் சமய நம்பிக்கை இல்லை. சமயம் என்று ஒரு செட் ஆப் பாலிசி. அதில் வள்ளுவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், மனிதனை மீறிய ஒரு சக்தி உண்டு என்று அவர் உறுதியாக நம்பினார். அந்த வகையில் அவருக்கு இறை நம்பிக்கை இருந்ததாக நம்பலாமே அன்றி, சமயநம்பிக்கை இருந்ததாக எங்கும் அவர் சொல்லவில்லை. மயிலாப்பூரில் உள்ள கோயிலில் கூட திருவள்ளுவர் சம்பந்தமான ஆபாச கதைகள் இருக்கிறது. ஆதி பகவன் என்பதற்கு அவர்களுக்கு மனதிற்கு பிடித்தவாறு கதைகளை உண்டாக்கி சமூகத்தில் உலவ விட்டுள்ளார்கள். மேலும் திருவள்ளுவர் பூணூல் போட்டிருந்தார் என்று இட்டுகட்டிய பொய்களை கூறுகிறார்கள். அதுவும் அவருக்கு கலைஞர் துண்டு போட்டு அதனை மறைத்துவிட்டதாகவும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி எல்லாம் எதுவும் இல்லை.

 

Thiruvalluvar



அவரை தவறாக சித்தரிக்க முயல்பவர்கள் கூறும் பொய்கள்தான் இவை. அடுத்து அவர் காவி உடை அணிந்தார் என்று கூறுவது. அது முற்றிலும் தவறான ஒன்று. வள்ளுவர் எப்போதும் காவி உடை அணியவில்லை. ஏனென்றால் காவி தமிழகத்துக்கு எப்போது வந்தது என்று முதலில் பார்க்க வேண்டும். அசோகர், அவருடைய காலத்தில் பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்காக முதலில் இலங்கைக்கு சென்று அங்கு அதனை துவங்க வேண்டும் என்று விரும்பினார்கள். இது முதலாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்ததாக கூறுவார்கள். இதற்காக அவர்கள் தமிழகம் வழியாக இலங்கை சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் காவியை அணிவர்கள். அவர்கள் வழியாகவே இந்த காவி இங்கு வந்தது. அதற்கு முன்னரே வாழ்ந்த திருவள்ளுவருக்கும் இந்த காவிக்கும் சம்பந்தமில்லை.

 

 

 

 

Next Story

திருவள்ளுவர் நாள் விழா‌‌ கொண்டாட்டம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Thiruvalluvar day celebration in Sivagangai!

சிவகங்கையில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டம் முதலாம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவைக் கொண்டாடியது. கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், கவியரங்கம் என மூன்று அரங்கமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாக உலகத்திருக்குறள் கூட்டமைப்பினர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

விழாவிற்கு வந்தோரை மு.சகுபர் நிசா பேகம்  வரவேற்றார், தேசிய நல்லாசிரியர் செ. கண்ணப்பன் தலைமை வகித்தார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டத் தலைவர் சோ.சுந்தர மாணிக்கம், துணைத் தலைவர் மு.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறளை வாழ்வியலாக கொண்டு திருக்குறள் பரப்பும் பெரும் பணியை செய்து வரும் கல்லலைச் சேர்ந்த திருக்குறள் பரப்புநர் சி.முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவருமான நா. சுந்தரராஜன், சிவகங்கை அரிமா சங்கத் தலைவர் க.முத்துக்குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (ஓய்வு) இளங்கோவன், கலைமகள் ஓவியப்பள்ளி ஓவியர் நா.முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை மூத்த வழக்கறிஞர் மு. இராம் பிரபாகர், நல்லாசிரியர் பா.முத்துக்காமாட்சி, மருத்துவத்துறை கண்காணிப்பாளர் இரமேஷ் கண்ணன், ( jci )உலக இளையோர் கூட்டமைப்பு செயலர் ஹரிஹரசுதன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மண்டல பொறுப்பாளர் புலவர் மாமணி ஆறு. மெய்யாண்டவர், க.கீர்த்திவர்சினி, கா.நனி இளங்கதிர், ப.யோகவர்ஷினி, க.முத்துலட்சுமி ஆகியோர் குறளால் பாராட்டு செய்யப்பட்டனர்.

‘வள்ளுவத்தைப் பாடுவோம்’ எனும் பொதுத் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது, இக்கவியரங்கத்திற்கு புலவர் கா.காளிராசா தலைமையேற்று தலைமைக் கவிதை பாடி வழி நடத்தினார். ‘உடுக்கை இழந்தவன் கை போலே’ எனும் தலைப்பில் முனைவர் உஷா, ‘அன்பின் வழியது உயிர்நிலை’ எனும் தலைப்பில் கவிஞர் பீ. பி.எஸ் எட்வின், ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ எனும் தலைப்பில் முனைவர் இரா.வனிதா, ‘எண்னென்ப ஏனை எழுத்தென்ப’ எனும்  தலைப்பில் ஆசிரியர் மாலா, ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்னும் தலைப்பில் கவிஞர் சரண்யா செந்தில், ‘யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் அகமது திப்பு சுல்தான், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் பிரீத்தி அங்கயற் கண்ணி ஆகியோர்கவிதை பாடினர்.

ஆசிரியர் ந. இந்திரா காந்தி, செல்வி கா.நவ்வி இளங்கொடி  நிகழ்வை தொகுத்து வழங்கினர். அரிமா முத்துப்பாண்டியன், லோபமித்ரா, மகேந்திரன்,அந்தோணி பிரான்சிஸ் ஜெயப்பிரியா ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். தவழும் மாற்றுத்திறனாளிகள் தாய் இல்ல ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், பாரதி இசைக் கல்விக் கழக யுவராஜ், தமிழாசிரியர் அயோத்தி கண்ணன் போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டனர், இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புலவர் கா. காளிராசா செய்திருந்தார்,இந்நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் வே.மாரியப்பன் நன்றியுரைத்தார்.

Next Story

'மும்மொழி கொள்கையே திணிப்புதான்'-கவிஞர் வைரமுத்து கருத்து

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
'Three-language policy is an imposition'-poet Vairamuthu interviewed

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது' என ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவிஞர் வைரமுத்து, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திருவள்ளுவர் தமிழர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். மும்மொழி கொள்கை என்பதே திணிப்புதான் என தமிழர்கள் கருதுகின்றனர். அதனாலேயே இந்தி மொழி திணிப்பை வேண்டாம் என்று கூறுகிறோம். மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி மீது எங்களுக்கு என்ன வெறுப்பா. இல்லை. இந்தி மொழி கூடாது என்று நாங்கள் கொடிபிடிக்கிறோம் என்றால் இந்தி மொழியின் திணிப்பு கூடாது என்று நாங்கள் உறுதிபட சொல்கிறோம். இந்தி மொழியின் திணிப்பு எதிர்ப்பதைத்தான் தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள்'' என்றார்.