Skip to main content

மோடியின் சுற்றுப்பயண செலவுகள் எவ்வளவு கோடி தெரியுமா?

Published on 14/12/2018 | Edited on 14/12/2018
modi

 

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே சிங் நேற்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் விவரம் குறித்து தெரிவித்துள்ளார்.
 

பிரதமர் மோடி மேற்கொள்ளும் வெளிநாடு பயணங்கள் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்களில் தொடங்கி எதிர் கட்சி தலைவர்கள் வரை வெளிநாட்டு பயணங்களை விமர்சிக்கின்றனர். இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினாய் விஸ்வம், மோடி பிரதமராக பதவியேற்று இதுவரை எத்தனை நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளார், அவருடன் எத்தனை எம்பிகள் சென்றுள்ளனர், எத்தனை ஒப்புதல்களில் கையெழுத்திட்டுள்ளார், அவரின் பயணத்திற்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளனர் என்று மாநிலங்களவையில் எம்பி விகே சிங்கிடம் கேட்டிருந்தார்.
 

இதற்கு பதிலளித்த விகே சிங், மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்காக செலவாகிய மொத்த பணம் 2000 கோடி. அதில் ஏர் இந்தியா விமான சேவை மற்றும் அவருடைய பாதுகாப்பிற்காக செலவிடப்பட்டதும் அடங்கும். விமான பராமரிப்பிற்காக ரூபாய் 1,583.18 கோடியும், தனி விமானத்திற்காக ரூபாய் 429.28 கோடியும், பாதுகாப்பிற்காக ரூபாய் 9.12 கோடியும் இதுவரை செலவிடப்பட்டுள்ளது. மே மாதம் 2017 முதல் தற்போதுவரை மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அளிக்கப்பட்ட பாதுகாப்பு செலவுகள் இதில் வழங்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 

முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் வெளியான விவரத்தில், மே மாதம் 2014ல் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து தற்போதுவரை 42 வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஜூன் 15ஆம் தேதி 2014 முதல் ஜூன்10 ஆம் தேதி 2018ஆம் ஆண்டு வரையிலான செலவுகளை இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சுற்றுப்பயணத்தில் 84 நாடுகளுக்கு சென்றுள்ளார். 2015-2016 ஆம் காலகட்டத்தில்தான் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து 2017-2018 ஆம் காலகட்டத்தில் 19 நாடுகளுக்கும், 2016-2017 காலகட்டத்தில் 18 நாடுகளுக்கும், 2014-2015 காலகட்டத்தில் மிகவும் சொற்பமாக 13 நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரதமராக பதவியேற்று முதன் முதலில் ஜூன் மாதம் 2014ல் பூட்டானுக்கு சென்றார். 
 

2018ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கத்திலிருந்து இதுவரை 23 நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷிண்டே அபே ஆகியோரை பலமுறை சந்தித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில்கூட அர்ஜெண்டினா தலைநகரில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு, பிறகு தனியாக ஜப்பான் அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோரை சந்தித்தார். அப்போது மோடி, இந்த மூன்று நாடுகளும் உலக அமைதியை நிலைநாட்டுவது பற்றி கலந்து பேசினோம் என்றார். 

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.