Skip to main content

 மோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதி! அதிரவைக்கும் சம்பவம்!

Published on 19/07/2019 | Edited on 20/07/2019

மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துகிறார்கள் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இந்த வாக்குப்பதிவில் தேர்தல் ஆணையத்தின் சதிகள் குறித்து இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது மத்திய மோடி அரசு. தேசிய அளவில் நடக்கும் முக்கிய சம்பவங்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை அம்பலப் படுத்துவதற்காக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் 64 பேர் இணைந்து ஒரு அமைப்பை கட்டமைத்திருக்கிறார்கள்.
 

ias



அண்மையில் நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் பிரதமர் மோடி. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. ஜெயிக்கும் என அழுத்த மாகச் சொன்னார் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான அமித்சா. அதேபோல, பா.ஜ.க. மட்டுமே 303 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களையும் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பின எதிர்க்கட்சிகள். குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கேள்விக்குறியாக்கினர்.


இந்த நிலையில், பொதுத்தேர்தலில் நடந்த ஆபத்தான முறைகேடுகள் என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள் இந்திய ஆட்சிப்பணியின் முன்னாள் உயரதிகாரிகள். அந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது மத்திய உளவுத்துறை. தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மீது அந்த அறிக்கை குற்றம்சாட்டுவதால் கடந்த வாரம் டெல்லியில் அந்த அறிக்கையை உள்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாக டெல்லியி லிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்திய ஆட்சிப்பணியின் முன்னாள் பணி யாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான தேவசகாயத் திடம் இது குறித்து நாம் பேசியபோது, ""கடந்த 30 ஆண்டுகளில் நம் நாட்டில் நடந்த தேர்தல்களி லேயே மிகவும் மோசமான, நேர்மையற்ற தேர்தலாக 2019-ல் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இருக்கிறது.

 

 

bjp



இதற்கு முன்பு நெறியற்ற அரசியல்வாதிகளும் கிரிமினல்களும் இணைந்து தேர்தலுக்கு பல வழிகளிலும் இடையூறுகள் ஏற்படுத்தியபோதும், விதிமீறல்கள் நடந்தபோதும் முடிந்தளவுக்கு தேர்தலை நியாயமாக நடத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களாட்சியின் மாண்புகளையும் நெறிமுறைகளையும் பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக, நேர்மையற்ற வழிகளை கையாண்டது ஜீரணிக்க முடியாதது. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் 2004, 2009, 2014-ல் நடந்த தேர்தல்களின் அறிவிப்புகளை அந்தந்த ஆண்டு களின் முறையே பிப்ரவரி-29, மார்ச்-1, மார்ச்-5 ஆகிய தேதிகளில் அறிவித்தது தேர்தல் ஆணையம். அதேபோல, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க விருந்த சட்டமன்றத் தேர்தல்களின் அறிவிப்பினை மார்ச் 5 தேதிக்குள் அறிவித்துள்ளது. ஆனால், 2019 தேர்தலின் அறிவிப்பை மார்ச் 10-ல் அறிவித்தது ஆணையம். இந்த காலதாமதத்திற்கு காரணம் என்ன?

பிப்ரவரி 8 முதல் மார்ச் 9 வரை பிரதமர் மோடியின் முக்கிய நலத்திட்டங்களை அறிவிப்ப தற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு தோதாக இந்த காலதாமதத்தை செய்தனர் ஆணைய அதிகாரிகள். அதேபோல, ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடக்கும் நாட்களின் எண்ணிக்கையை எந்த காரணமும் இல்லாமல் முடிவு செய்திருக் கிறார்கள். அதாவது, எந்த தில்லுமுல்லுகளை செய்தாலும் பா.ஜ.க.வால் ஜெயிக்க முடியாது என்கிற சூழல் இருக்கும் மாநிலங்களில் ஒரே கட்ட மாகவும், மற்ற மாநிலங்களில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்தினர். இந்த பல கட்டத் தேர்தல்கள் பிரதமர் மோடி மிகஇலகுவாக தேர்தல் பிரச்சாரம் செய்யவும், பா.ஜ.க.வின் முறைகேடான தேர்தல் வியூகங்களை நிறைவேற்றவும் பயன்பட்டன. மேலும், பா.ஜ.க.வுக்கு எதிரான சிறுபான்மையின ரின் வாக்குகள் பெரிய அளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனை அம்பலப்படுத்தி ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற போதும் அது குறித்து ஆணை யம் அக்கறை காட்டவில்லை. பா.ஜ.க.வுக்கு சாதக மாக நடந்துகொண்டனர் தேர்தல் அதிகாரிகள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது இனவாத, பிரிவினைவாத பிரச்சாரங்களை வேட்பாளர்கள் செய்வது இந்திய குற்றவியல் சட்டத்தின்படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படியும் தண்டிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், மோடி, அமித்சா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பலரும் வெறுப்பு பிரச்சாரங்களை செய்தபோதும் அதனை கண்டுகொள்ளவில்லை ஆணையம். மாறாக, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற் காக மட்டுமே இச்சட்டங்களை பயன்படுத்தினர். நடத்தை விதிகளை மோடி மீறியபோதும் அவருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பக்கூட தயங்கியது ஆணையம். மோடியின் பிரச்சாரங்களையும் நிகழ்வுகளை யும் ஒலிப்பரப்புவதற்காகவே நமோ டி.வி. துவக்கப் பட்டது மிகப்பெரிய அத்துமீறல். இத்தனைக்கும் முறையான அனுமதியையும் விதிமுறைகளையும் பின்பற்றாமல் துவக்கப்பட்டது இந்த அலைவரிசை. அதன்மீது எந்த நடவடிக்கையும் ஆணையம் எடுக்க வில்லை. மோடியின் கேதார்நாத் பயணத்திற்கான செலவுகள் மோடியின் தேர்தல் செலவில் சேர்க்கப்படவில்லை. அதேபோல, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பணம் கைப்பற்றப்பட்டதால் சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தலை நிறுத்திய ஆணையம், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அத்தகைய உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை.


இவை எல்லாவற்றையும் மிட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடிகள் மிகவும் மோசமானது. இந்த இயந்திரங்களை தயாரிக்க அங்கீகாரம் பெற்ற 2 பொது நிறுவனங்களும் கொடுத்துள்ள எண்ணிக்கையும், தேர்தல் ஆணையத்தால் தரப்பட்ட இயந்திரங்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போகவில்லை. அத னால் அனைத்து இயந்திரங்களின் எண்ணிக்கை யையும் சோதனைக்குட்படுத்த வேண்டும். அதேபோல, யாருக்கு வாக்களித்தோம் என்பதற் குரிய ஒப்புகைச் சீட்டின் எண்ணிக்கையையும் வாக்குப்பதிவான எண்ணிக்கையையும் குறைந்த பட்சம் 50 சதவீதமாவது ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் முன் வைத்த யோசனையை கண்டுகொள்ளாததுடன் அதனை நிராகரிக்கவும் செய்தது ஆணையம். இயந்திரங்களின் தேவையற்ற இடமாற்றமும் அதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் சொல்லாததும் சந்தேகத்தையே ஏற்படுத்தின.

மேலும் வாக்குப்பதிவு எண்ணிக்கையிலும் ஒப்புகை சீட்டு எண்ணிக்கையிலும் பல இடங்களில் வேறுபாடு இருந்தது. இதனையும் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இது மிகப்பெரிய தீமையின் அறிகுறி. இப்படி பல தில்லுமுல்லுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடந்திருக்கிறது. ஆக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீதான குற்றச்சாட்டுகளில் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் 370 தொகுதிகளின் முடிவுகளில் மாற்றங்கள் நடந்திருக்கும். ஆக, மோடியின் வெற்றிக்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டுச்சதியில் இறங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஆணைய அதிகாரிகளின் ரகசிய தில்லு முல்லுகள், முறைகேடுகள் மூலமே மோடியின் இமாலய வெற்றி சாத்தியமாகியிருக்கிறது. மின்னணு இயந்திர வாக்குப்பதிவு முறை தடை செய்யப்பட வேண்டும். இந்த வாக்குப்பதிவு இருக்கும் வரை மோடிதான் பிரதமராக இருப்பார். இந்திய அரசியலமைப்பின் அடித்தளத்தையும் மக்களாட்சி தத்துவத்தையும் தகர்த்துக்கொண்டிருக்கிறது மின்னணு வாக்குப்பதிவு'' என விரிவாக சுட்டிக்காட்டுகிறார் தேவசகாயம்.
 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.