Advertisment

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி

elec

Advertisment

பாஜக அரசுக்கும் உண்மைக்கும் ரொம்ப தூரம் என்பது கடந்த நான்கு ஆண்டுகால செயல்பாடுகளைப் பார்த்தாலே தெரியும்.

ஆம், வருகிற மே 15 தேதியுடன் மோடி பிரதமராக பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த நேரத்தில் அவரும் அவருடைய அரசும் கடந்துவந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், மயக்கம்தான் வருகிறது.

Advertisment

உலகை மூன்றுமுறை சுற்றிவருகிற தூரத்துக்கு அவர் வெளிநாட்டுப் பயணங்கள் அமைந்திருக்கின்றன. பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கு வெளிநாட்டு பயணத்தை தந்திராமாக பயன்படுத்தும் முதல் பிரதமர் இவர் என்று தெரிந்துவிட்டது. பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்காத, நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு பதில் அளிக்காத பிரதமராக இவர் இருந்திருக்கிறார்.

தான் பேசிய பிறகு யாரும் பேசாத சமயத்தில் மட்டுமே பேசுவதும், பேசும்போது யாரும் குறுக்கீடு செய்ய முடியாது என்ற உறுதி இருந்தால்தான் இவர் வாயைத் திறப்பார். அதுவும் கைகளை ஆட்டிக்கொண்டு வித்தாரம் பேசுவார்.

ஆனால், அவர் எப்போதும் தற்பெருமை பேசுவதே இல்லை. அதாவது, தற்பெருமை பேசுவதற்கு இவரிடம் பெருமைப்படத்தக்க விஷயங்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான, தனக்கு முன் பொறுப்பில் இருந்தவர்களின் குறைகளை மட்டுமே பேசி நாட்களைக் கடத்தும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்.

இதுவரை இந்தியாவுக்கு பிரதமராக பொறுப்பேற்ற அனைவரும் இருக்கிற இந்தியாவை பொலிவேற்ற தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். ஆனால், இவரோ, இருக்கிற இந்தியாவை சேதப்படுத்தினாலும், இல்லாத பல இந்தியாக்களை பெற்றுப் போடுவதில் கவனமாக இருந்தார்.

அப்படி இவர் பெற்றுப்போட்ட தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிடல் இந்தியா போன்றவற்றின் வளர்ச்சி பாவகரமாய் கிடக்கின்றன. இவை போக, அவர் அறிவித்த பல திட்டங்கள் மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கின்றன.

இவருடைய அரசு பெட்ரோல் விலையை தினமும் உயர்த்தும் முறையை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் பெட்ரோல்விலை கண்ணுக்குத் தெரியாமல் பைசா பைசாவாக ஏற்றப்பட்டு இப்போது லிட்டருக்கு 75 ரூபாய் ஆகிவிட்டது.

எரிவாயு சிலிண்டர் மானியத்தை நேரடியாக தருவதாகச் சொல்லிவிட்டு, இப்போது சிலிண்டர் விலையையும் மாதாமாதம் ஏற்றத் தொடங்கிவிட்டது.

கார்பரேட்டுகளின் கண்ணசைவுக்கு செயல்படும் மோடி அரசு, விவசாயிகளை கோவணத்துடன் டெல்லி வீதியில் அலையவிட்டதுதான் மிச்சம்.

மோடி 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது எனக்கொரு 60 மாதங்கள் வாய்ப்புத் தாருங்கள் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டுகிறேன் என்று ஆவேசமாக பேசினார். தன்னிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். அதன்படி இந்நேரம் 4 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வேலையற்றோர் எண்ணிக்கையைத்தான் கோடிக்கணக்கில் அதிகமாக்கி இருக்கிறார்.

நீங்கள் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் பற்றி கூற முடியுமா என்றால், பக்கோடா விற்பதுகூட வேலை வாய்ப்புதான் என்று கூறுகிறார். இப்போது அவரை இளைஞர்கள் பகோடா பிரதமராக்கி விட்டார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 9 சதவீதம் ஆக்குவேன் என்றார். மன்மோகன்சிங் காலத்தில் எட்டப்பட்டிருந்த 8 சதவீத வளர்ச்சியை 6.8 சதவீதமாக குறைத்ததுதான் இவருடைய இதுவரையான சாதனையாக இருக்கிறது. கேட்டால், 7.5 சதவீதம் ஆக்கிவிடுவோம் என்று சால்ஜாப்பு சொல்கிறார்.

மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இந்தியாவை பாகிஸ்தானுக்கும் பின்னால் 62 ஆவது இடத்துக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறார்.

இவர்தான் இப்படி இவர் பேச்சை நம்பிப் பேசிய மின்துறை அமைச்சர் ரொம்பப் பாவம்.

2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புக் கொடுத்துவிடுவோம் என்றார். அவர் சொன்னதில் தமிழகம் ஏற்கெனவே அந்த இலக்கை எட்டிவிட்டதால், மிச்சமுள்ள இந்தியா மட்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாவம், அவர் அடுத்தடுத்த ஆண்டுகளும் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். இதுவரை கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை கிராமங்களுக்கு மின் இணைப்புக் கொடுத்தார்கள் என்பதையும் சொல்லமாட்டேன் என்கிறார். யாரும் அவரிடம் குறிப்பிட்டு கேட்கவும் மாட்டேன் என்கிறார்கள்.

அதுபோலத்தான், 2018 மே மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுத்துவிடுவோம் என்றார். அடுத்து, 2019 ஆம் ஆண்டுக்குள் கொடுத்துவிடுவோம் என்றார். இப்போது என்னடாவென்றால், 2022 ஆம் ஆண்டுக்குள் கொடுத்துவிடுவோம் என்கிறார்.

அதாவது, இன்னொரு 60 மாதம் கொடுங்கள் என்று கேட்கிற லெவலுக்கு வந்திருக்கிறார்கள். முதலில் 60 மாதங்களில் நீங்கள் சாதித்ததை சொல்லுங்கள், பிறகு பார்க்கலாம்.

நான்கு ஆண்டுகளிலேயே வெற்றுப் பில்டப்புக்களால் உருவாக்கப்பட்ட மோடியின் பிம்பம் சிதறத் தொடங்கிவிட்டது. அவர் கத்துகிற கூச்சல் காது கிழிகிறது. இன்னொரு ஐந்தாண்டு தாங்காதுடா சாமீ என்று மக்கள் தெறிக்கிறார்கள்!

மோடி பக்கோடா pakkoda employment aadar piyush modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe