Skip to main content

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி

Published on 12/02/2018 | Edited on 13/02/2018

 

elec

பாஜக அரசுக்கும் உண்மைக்கும் ரொம்ப தூரம் என்பது கடந்த நான்கு ஆண்டுகால செயல்பாடுகளைப் பார்த்தாலே தெரியும்.

ஆம், வருகிற மே 15 தேதியுடன் மோடி பிரதமராக பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த நேரத்தில் அவரும் அவருடைய அரசும் கடந்துவந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், மயக்கம்தான் வருகிறது.

உலகை மூன்றுமுறை சுற்றிவருகிற தூரத்துக்கு அவர் வெளிநாட்டுப் பயணங்கள் அமைந்திருக்கின்றன. பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கு வெளிநாட்டு பயணத்தை தந்திராமாக பயன்படுத்தும் முதல் பிரதமர் இவர் என்று தெரிந்துவிட்டது. பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்காத, நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு பதில் அளிக்காத பிரதமராக இவர் இருந்திருக்கிறார்.

தான் பேசிய பிறகு யாரும் பேசாத சமயத்தில் மட்டுமே பேசுவதும், பேசும்போது யாரும் குறுக்கீடு செய்ய முடியாது என்ற உறுதி இருந்தால்தான் இவர் வாயைத் திறப்பார். அதுவும் கைகளை ஆட்டிக்கொண்டு வித்தாரம் பேசுவார்.

ஆனால், அவர் எப்போதும் தற்பெருமை பேசுவதே இல்லை. அதாவது, தற்பெருமை பேசுவதற்கு இவரிடம் பெருமைப்படத்தக்க விஷயங்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான, தனக்கு முன் பொறுப்பில் இருந்தவர்களின் குறைகளை மட்டுமே பேசி நாட்களைக் கடத்தும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்.

இதுவரை இந்தியாவுக்கு பிரதமராக பொறுப்பேற்ற அனைவரும் இருக்கிற இந்தியாவை பொலிவேற்ற தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். ஆனால், இவரோ, இருக்கிற இந்தியாவை சேதப்படுத்தினாலும், இல்லாத பல இந்தியாக்களை பெற்றுப் போடுவதில் கவனமாக இருந்தார்.

அப்படி இவர் பெற்றுப்போட்ட தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிடல் இந்தியா போன்றவற்றின் வளர்ச்சி பாவகரமாய் கிடக்கின்றன. இவை போக, அவர் அறிவித்த பல திட்டங்கள் மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கின்றன.

இவருடைய அரசு பெட்ரோல் விலையை தினமும் உயர்த்தும் முறையை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் பெட்ரோல்விலை கண்ணுக்குத் தெரியாமல் பைசா பைசாவாக ஏற்றப்பட்டு இப்போது லிட்டருக்கு 75 ரூபாய் ஆகிவிட்டது.

எரிவாயு சிலிண்டர் மானியத்தை நேரடியாக தருவதாகச் சொல்லிவிட்டு, இப்போது சிலிண்டர் விலையையும் மாதாமாதம் ஏற்றத் தொடங்கிவிட்டது.

கார்பரேட்டுகளின் கண்ணசைவுக்கு செயல்படும் மோடி அரசு, விவசாயிகளை கோவணத்துடன் டெல்லி வீதியில் அலையவிட்டதுதான் மிச்சம்.

மோடி 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது எனக்கொரு 60 மாதங்கள் வாய்ப்புத் தாருங்கள் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டுகிறேன் என்று ஆவேசமாக பேசினார். தன்னிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். அதன்படி இந்நேரம் 4 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வேலையற்றோர் எண்ணிக்கையைத்தான் கோடிக்கணக்கில் அதிகமாக்கி இருக்கிறார்.

நீங்கள் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் பற்றி கூற முடியுமா என்றால், பக்கோடா விற்பதுகூட வேலை வாய்ப்புதான் என்று கூறுகிறார். இப்போது அவரை இளைஞர்கள் பகோடா பிரதமராக்கி விட்டார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 9 சதவீதம் ஆக்குவேன் என்றார். மன்மோகன்சிங் காலத்தில் எட்டப்பட்டிருந்த 8 சதவீத வளர்ச்சியை 6.8 சதவீதமாக குறைத்ததுதான் இவருடைய இதுவரையான சாதனையாக இருக்கிறது. கேட்டால், 7.5 சதவீதம் ஆக்கிவிடுவோம் என்று சால்ஜாப்பு சொல்கிறார்.

மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இந்தியாவை பாகிஸ்தானுக்கும் பின்னால் 62 ஆவது இடத்துக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறார்.

இவர்தான் இப்படி இவர் பேச்சை நம்பிப் பேசிய மின்துறை அமைச்சர் ரொம்பப் பாவம்.

2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புக் கொடுத்துவிடுவோம் என்றார். அவர் சொன்னதில் தமிழகம் ஏற்கெனவே அந்த இலக்கை எட்டிவிட்டதால், மிச்சமுள்ள இந்தியா மட்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாவம், அவர் அடுத்தடுத்த ஆண்டுகளும் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். இதுவரை கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை கிராமங்களுக்கு மின் இணைப்புக் கொடுத்தார்கள் என்பதையும் சொல்லமாட்டேன் என்கிறார். யாரும் அவரிடம் குறிப்பிட்டு கேட்கவும் மாட்டேன் என்கிறார்கள்.

அதுபோலத்தான், 2018 மே மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுத்துவிடுவோம் என்றார். அடுத்து, 2019 ஆம் ஆண்டுக்குள் கொடுத்துவிடுவோம் என்றார். இப்போது என்னடாவென்றால், 2022 ஆம் ஆண்டுக்குள் கொடுத்துவிடுவோம் என்கிறார்.

அதாவது, இன்னொரு 60 மாதம் கொடுங்கள் என்று கேட்கிற லெவலுக்கு வந்திருக்கிறார்கள். முதலில் 60 மாதங்களில் நீங்கள் சாதித்ததை சொல்லுங்கள், பிறகு பார்க்கலாம்.

நான்கு ஆண்டுகளிலேயே வெற்றுப் பில்டப்புக்களால் உருவாக்கப்பட்ட மோடியின் பிம்பம் சிதறத் தொடங்கிவிட்டது. அவர் கத்துகிற கூச்சல் காது கிழிகிறது. இன்னொரு ஐந்தாண்டு தாங்காதுடா சாமீ என்று மக்கள் தெறிக்கிறார்கள்!

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.