Skip to main content

எங்கு தொடங்கி எங்கு வந்திருக்கிறார்... மோடியின் தேர்தல் பயணம்!

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

நரேந்திர மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகினார். அதற்கு முன்பாக மோடி குஜராத்தில் 13 வருடங்கள் ஆட்சி செய்திருக்கிறார். 2001ஆம் ஆண்டில் அப்போது பாஜகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த எல்.கே.அத்வானி மோடியை குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கவனித்துக்கொள்ளுமாறு கூறி பொறுப்பாளராக நியமித்தார். 
 

narendra modi

 

 

நரேந்திர மோடியின் செயல்திறன் அவரை கவர்ந்தது. 2001ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பாஜக ஆட்சி பாஜக தலைமைக்கு அதிருப்தியை உண்டாக்க, அந்த ஆண்டில் அக்டோபர் 7ஆம் தேதி  நரேந்திர மோடி முதன் முறையாக குஜராத்தின் இடைக்கால முதலமைச்சராக பாஜகவால் தேர்வு செய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மணிநகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதுதான் முதன் முறையாக நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட்டது, வெற்றி பெற்றது.
 

அடுத்து 22ஆம் தேதி டிசம்பர் 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மணிநகரில் போட்டியிட்ட நரேந்திர மோடி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக குஜராத் முதலமைச்சராக பதவியேற்றார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட மோடி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக குஜராத்தின் முதலமைச்சரானார். இதையடுத்து 2012அம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டவர் நான்காவது முறையாக முதலமைச்சராகினார். குஜராத்தின் வளர்ச்சி பிம்பம் இந்தியா முழுவதும் மோடியை அறியச் செய்தது. இதனால் பாஜகவால் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார் மோடி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்து 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். 
 

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். ஆனால், அவர் படுதோல்வியடைந்தார். 2019 தேர்தலில் வாரணாசியில் வெற்றியை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கிறார். மீண்டும் பிரதமராக பதிவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.