Skip to main content

காங்கிரஸையும், பாகிஸ்தானையும் காட்டியே அரசியல் செய்யப்போகிறாரா மோடி?

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பா.ஜ.க. வென்றதற்கும், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பா.ஜ.க. வென்றதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் சொல்லலாம்? ஒரு வேறுபாடும் இல்லை என்றே சொல்ல வேண்டும். 2014 தேர்தலிலும் காங்கிரஸை குறைசொல்லியே வெற்றி பெற்றார். 2019 தேர்தலிலும் காங்கிரஸை குறைசொல்லியே வெற்றி பெற்றிருக்கிறார். 2014 தேர்தலிலும் சரி, 2019 தேர்தலிலும் சரி எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால்தான் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது.

 

modi



இந்தியா முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் சொன்னாலும் 23 கட்சிகள் கூடிப் பேசியும், கூட்டணி அமையவே இல்லை. காங்கிரஸின் பிடிவாதமும், அது விட்டுக்கொடுத்தாலும் ஏற்காத மாநிலக் கட்சிகளால் மெகாகூட்டணி அமையாமலே போயிற்று.  அதற்கு மாறாக, கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சி களையும் தாஜா செய்து தனது அணி யில் இறுக்கிப் பிடித்து வைத்தது பா.ஜ.க.. மாறாக, எங்கே தனக்கு கட்சி பலம் இல்லையோ, அங்கேயெல்லாம் கட்சிகளை உடைத்து தனது அடித்தளத்தை அமைப்பதில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது.

 

modi



குறிப்பாக, திரிபுராவில் காங்கிரஸ் கட்சியையே மொத்தமாக பா.ஜ.க.வாக்கி, அந்த மாநிலத்தில் இடதுசாரிகளைத் தோற்கடித்து, பா.ஜ.க. ஆட்சியை அமைப்பதில் வெற்றி பெற்றார். மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா காலத்தில் 48 சதவீதம் வாக்குகளுடன் இருந்த இடதுமுன்னணி இப் போது 11 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்திருக் கிறது. மம்தாவை தோற்கடிப்பதற்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் நிலைமைக்கு இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் சென்றதால்தான் இந்தப் பின்னடைவு என்று அரசியல் பார்வை யாளர்கள் கூறுகிறார்கள்.

 

mamta



உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்று காங்கிரஸ் கட்சி அறி வித்தது. ஆனால், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று மாயாவதி சொன்னாரே தவிர, காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்று நிரா கரித்தார். இத்தனைக்கும், காங்கிரஸ் 6 சதவீதம் வாக்குகளை வைத்திருந்தது. 2014 தேர்தலில் 4 தொகுதிகளை ஜெயித்திருந்தது. பகுஜன் சமாஜ் 2014 தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. மாயாவதியும், அகிலேஷும் புறக்கணித்ததால் கோபமடைந்த காங்கிரஸ் தலைவர்கள் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்தார்கள். போதாக்குறைக்கு பிரியங்காவையும் களத்தில் இறக்கி பிரச்சாரம் செய்தார்கள். இதுவே உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாமல் போனது. ஆனாலும் பா.ஜ.க. கடந்த முறை பெற்றிருந்த 71 இடங்களில் 11 இடங்களை இழந்திருக்கிறது. பகுஜன் சமாஜ் 11 இடங்களையும், சமாஜ்வாதி  8 இடங்களையும் பெற்றிருக்கின்றன. அமேதியில் ராகுல் தோல்வி அடைந்திருக்கிறார். கூட்டணி அமைக்கத் தவறியதால் கிடைத்த கைமேல் பலன் இதுதான்.

 

chandrababu



மத்தியபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும், சட்டீஸ்கரிலும் சமீபத்தில்தான் காங்கிரஸ் அரசு அமைத்திருந்தது. ஆனால், அந்த மாநிலங்களிலும் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இத்தனைக்கும் அந்த மாநிலங்களில் பா.ஜ.க. அரசுகள் செய்யத் தவறிய விவசாயக்கடன் தள்ளுபடியை காங்கிரஸ் அரசுகள் பொறுப் பேற்றவுடன் நிறைவேற்றியிருந்தன. அப்படியிருந்தும் தோல்வி ஏன்? இரண்டு மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் பா.ஜ.க. பதித்து வைத்திருக்கும் இந்துத்துவா அரசியல்தான். இரண்டு மாநிலங்களிலும் பாதிக்குப் பாதிகூட வெற்றிபெற முடியாமல் போனதற்கு, காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் மூத்தோர் இளையோர் இடைவெளியும் ஒரு காரணம்'' என்கிறார்கள்.


ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் இந்த முயற்சிக்கு அணைபோட்டு தடுத்துவிட்டார். டெல்லியில் 7 தொகுதியையும் பா.ஜ.க.விடம் இழக்க இது காரணமாக அமைந்துவிட்டது. பா.ஜ.க.வை ஒழிக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்டிருந்த மம்தா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் அவரவர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க தவறிவிட்டனர். இதன் விளைவு மேற்குவங்கத்தில் பா.ஜ.க. 16-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற உதவியிருக்கிறது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததுடன், மக்களவைத் தொகுதிகளையும் ஸ்வீப் செய்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் நடந்த கூட்டணிக் குழப்பங்கள் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கியமான சாட்சி. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பைக் காட்டிலும் மாநிலத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை தவிர்க்க முடியாத தலைவர்களால் ம.ஜ.த. ஆட்சியில் இருந் தும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்வி யைத் தழுவினார். 1972 ஆம் ஆண்டிலிருந்து தோல்வியைச் சந்திக்காத மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக தோல்வி யடைகிறார். மதச்சார் பற்ற ஜனதாதளத்தின் குடும்ப அரசியல் கர்நாடக அரசியலை கேலிக்கூத்தாக்கிவிட்டது'' என்கிறார்கள்.

குடும்ப அரசியல் என்று பார்த்தால், கர்நாடகாவில் தேவ கவுடா, அவருடைய பேரன் நிகில் குமாரசாமி ஆகியோரும், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவும், மத் தியபிரதேசத்தில் ஜோதி ராதித்திய சிந்தியாவும், காஷ்மீரில் முப்தி முகமது சயீதின் மகள் மெஹ்பூபா முப்தியும், தோல்வி அடைந்தனர். இதற்கு மாறாக, தமிழகத்தில் கலைஞரின் மகள் கனிமொழி, காஷ்மீரில் பரூக் அப்துல்லா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராவின் மகன் துஷ்யந்த், மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் கமல்நாத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தத்தில் கடந்த முறை தங்களுடைய ஒற்றுமையின்மையால் பா.ஜ.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த எதிர்க்கட்சிகள், இம்முறையும் கூட்டணி கணக்கில் தவறியதால் மோடியை பிரதமராக்கியுள்ளன. கடந்தமுறையைக் காட்டிலும் கூடுதல் இடங்களுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப்போகும் மோடியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நடந்த குளறுபடிகளின் விளைவு இனிமேல்தான் தெரியவரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தார்கள். அதைச் சரிசெய்வதில் மோடி தனது 2.0 ஆட்சியில் ஆர்வம் காட்டுவாரா? எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளை மோடி எதிர்கொள்வாரா? அல்லது கடந்த காலத்தைப் போல காங்கிரஸையும், பாகிஸ்தானையும் காட்டியே அரசியல் செய்யப்போகிறாரா? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தப்படி செயல்படும் பா.ஜ.க. ஏற்கனவே வகுத்துள்ள இந்துத்வா கொள்கைப்படி இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை நீக்குவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, இந்து-சமஸ்கிருதத்தை வலிந்து திணிப்பது, இந்து நாடாக மாற்றுவது என மோடி அரசின் அடுத்தடுத்த ஆட்டம் ஆரம்பமாவதைக் காண இந்தியா காத்திருக்கிறது.
 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.