Skip to main content

கத்திப் பேசினால் உண்மையாகிடுமா மோடி?

Published on 11/02/2018 | Edited on 12/02/2018

இந்திய நாடாளுமன்றத்தில் இப்படியோர் பிரதமர் இதுவரை கத்திப் பேசியதில்லை. அந்த அளவுக்கு பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல, தொண்டை கிழிய கத்தியிருக்கிறார். இது அவருடைய விரக்தியை வெளிப்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறும் அளவுக்கு சென்றுள்ளது.

 

modi

 

தனது அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை அடுக்கடுக்காக அடுக்கி, எதிர்க்கட்சிகளை திணறடிக்க வேண்டிய பிரதமர், தனது இயலாமையை மறைக்க தொண்டையை பெரிதாக்கியிருக்கிறார்.

 

மெதுவாக பேசினாலே எல்லோர் காதுக்குள்ளும் தெளிவாகக் கேட்கும் வகையில் நாடாளுமன்றத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, மோடி ஏன் இப்படி கத்துகிறார்? பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசினால்தான் அவருக்கு பேச்சு வருமா என்று இன்றைய இளம் தலைமுறையினர் கிண்டல் செய்யும் அளவுக்கு அவர் தன்னைத்தானே கேலிப் பொருளாக்கிக் கொண்டுள்ளார்.

 

சரி அவர் பேசியதில் முக்கியமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

 

குடியரசுத்தலைவரின் பேச்சு ஒரு கட்சிக்கு சொந்தமானதல்லஅதை மதிக்கவேண்டும்எதிர்க்க வேண்டும் 

என்பதற்காக அதை எதிர்க்கக்கூடாது. நேருவால் இந்தியாவுக்கு ஜனநாயகம் கிடைத்தது என்று நம்ப வைக்க முடியாது. பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரத்திலும், தேசத்திலும் இந்தியாவில் ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்கிறார் மோடி. 

மோடி சொல்வதை உண்மை என்று ஏற்றாலும், இதற்கு முன் பாஜக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் உரையை எப்படி மதித்திருக்கிறது என்பதை இந்த நாடு பார்க்கவில்லையா? மோடி அப்போது முதல்வராக இருந்ததால் தனக்கு தெரியாது என்பாரா?

 

அதுபோகட்டும், நேருவால் ஜனநாயகம் கிடைக்கவில்லை என்கிறார். அதுவும் உண்மைதான். ஆனால், இந்தியாவில் மக்களை சாதியால் பிரித்து, அதையே தர்மம் என்று பெயர்சூட்டியதைத்தான் ஜனநாயகம் என்று சொல்ல வருகிறாரா மோடி? படிக்க உரிமையற்று, சில தெருக்களில் நடக்க உரிமையற்று, மேலாடை அணிய உரிமையற்று இருந்தனரே அதைத்தான் ஜனநாயகம் என்கிறார் மோடி? விலங்குகளுக்கு கிடைத்த உரிமைகூட மக்களுக்குக் கிடைக்காமல் செய்தார்களே பார்ப்பனர்கள், அதைத்தான் ஜனநாயகம் என்கிறாரா மோடி?

 

அடுத்து இன்னொரு விஷயத்தை சொல்கிறார் மோடி. அதாவது, சர்தார் வல்லபபாய் படேல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தமாக இருந்திருக்கும் என்கிறார். இது நடந்திருக்குமா? காஷ்மீர் என்பது இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்ததா? என்பதையெல்லாம் பார்த்தால் மோடி, தனது விருப்பத்துக்கு அள்ளி விடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

சற்று விவரமாக பார்த்தால் இந்தியாவுக்கு பிரிட்டிஷ்காரர்கள் விடுதலை கொடுக்கும்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் சொந்தமில்லாமல், 565 சமஸ்தானங்கள் இருந்தன. இவை சுதந்திரமானவை. சத்ரபதி, மகாராஜா, ராஜா, ராஜே, தேஷ்முக், நவாப், என்று பல்வேறு ஆட்சியாளர்களின் தலைமையில் இந்த சமஸ்தானங்கள் இருந்தன. இவை, இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ தாங்கள் விரும்பும் எந்த நாட்டுடனும் இணைந்துகொள்ளலாம்.

விடுதலை ஆடைந்த மூன்று மாதங்களில் பாகிஸ்தானுடன் தாமாகவே சில சமஸ்தானங்கள் இணைந்தன.

ஆனால், இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்த வல்லபபாய் படேல், ராணுவத்தை கையில் வைத்துக்கொண்டு அந்த சமஸ்தானங்களை மிரட்டினார் என்பதுதான் வரலாறு. பிரிட்டிஷ் ராணுவ பலத்தை நம்பியிருந்த சமஸ்தானங்கள் இப்போது, இந்தியாவின் மிரட்டலை சந்திக்க வேண்டியிருந்தது என்பதுதான் உண்மை. பிரிட்டிஷ்காரன் கொடுத்திருந்த சுதந்திரத்தைக்கூட விடுதலை பெற்ற இந்தியா கொடுக்கவில்லை என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும்.

 

modi

 

இப்படித்தான் இஸ்லாமியர்களை அதிகமான ஜனத்தொகையைக் கொண்ட காஷ்மீரின் மன்னராக இந்து மதத்தைச் சேரந்த ஹர்சிங் என்பவர் இருந்தார். அவர், இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைய விரும்பவில்லை என்று முடிவெடுத்தார். அவருடைய முடிவை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டது. ஆனால், படேல் காஷ்மீரை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்தே, பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. காஷ்மீரின் பாதிக்குமேற்பட்ட பகுதியை அது கைப்பற்றியது. படேல் பிரதமராக இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். பாவம் மோடி, அவருக்குத் தெரிந்த வரலாறும் பொய்களால் வரையப்பட்டதுதானே. இப்படித்தான் பேசுவார்.

 

இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியிருந்தால், அதற்கேற்ற திட்டங்களை தீட்டியிருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும் என்கிறார் மோடி. அதேசமயம், முந்தைய அரசுகளின் பங்களிப்பால்தான் இந்த நாடு இவ்வளவு உயரத்துக்கு வந்திருக்கிறது என்று அவரே பதிலும் சொல்லிக் கொள்கிறார்.

 

ஆர்எஸ்எஸ்சைப் போல, பாஜகவைப் போல, மக்களை பிரி்த்து, அவர்களுக்கு இடையே சாதி மத மோதல்களை ஏற்படுத்தி, அந்த வெப்பத்தில் குளிர்காயும் கட்சிகள் இருக்கும்வரை அரசுகள் எந்தத் திட்டத்தையும் உருப்படியாக செய்ய முடியாது.

 

அணைகளைக் கட்டவும், மின் திட்டங்கள் கட்டவும் பொறியாளர்கள் தேவை, ஏழை மக்களுக்கும் மருத்துவம் கிடைக்க மருத்துவர்கள் தேவை என்று நேரு அறைகூவல் விடுத்தார். ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் பாபர் மசூதியை இடிக்க கரசேவகர்களைக் கேட்டது. ரயில்பெட்டியில் தீ வைத்துவிட்டு, அப்பாவி முஸ்லிம்களை வெட்டிக் கொன்றது. இன்றுவரை பசு மூத்திரத்தை மருந்து என்றுதானே பாஜக சொல்கிறது.

 

மக்கள் எந்த உணவை உண்ணவேண்டும் என்ற உரிமையைக்கூட மக்களுக்குத் தர விருப்பமில்லாத மோடி அரசு ஜனநாயகம் பற்றி பேசலாம்? மாடுகளை விற்கவோ, வாங்கவோ, கறியாக்கி உண்ணவோ தனி மனிதனுக்கு உரிமையுண்டு என்பதைக்கூட ஏற்காத காட்டுமிராண்டிகளுக்கு வக்காலத்து வாங்கும் அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது?

 

இன்றைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத கையாலாகாத அரசாக இருந்துகொண்டு, தொண்டை கிழிய கத்திப் பேசுவதால், பேசுகிற அனைத்தும் உண்மையாகிவிடும் என்று நினைக்கிறாரா மோடி?

 

ஆதார் கார்டு திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாரென்றால், நேர்மையில்லாதவர்களும், ஊழல் செய்பவர்களும், இடைத்தரகர்களும்தான் எதிர்க்கிறார்கள் என்று மோடி சொல்கிறார்.

 

இதே மோடிதானே, முதல்வராக இருக்கும்போது ஆதார் கார்டு திட்டத்தை எதிர்த்தார். 2014 தேர்தல் வாக்குறுதியிலேயே ஆதார் திட்டத்தை நிறுத்துவோம் என்றுதானே கூறியிருந்தார்கள். அந்தத் திட்டத்தில் இவர்களுக்கு ஏதோ லாபம் இருப்பதால்தான் அதைத் தொடருகிறார்கள் என்று பொதுமக்களே ரொம்பநாளா பேசிக் கொள்வது இவர்களுக்கு தெரியாதா என்ன?

 

உண்மைகள் வெளிப்படும்போது உதறல் எடுப்பதும், உதறலை மறைக்க உரக்கப் பேசுவதும் மனிதர்களின் இயல்புதானே. பாவம் மோடிக்கு இப்போதே 2019 மக்களவைத் தேர்தலை நினைத்து உதறல் எடுக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டார்.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.