Skip to main content

"வாக்குப்பதிவு நாளன்று மோடி ரோடு ஷோ போகிறார்; நேர்மையாகத் தேர்தல் நடந்திருந்தால் குஜராத்தில் பாஜக தோல்வி அடைந்திருக்கும்.." - திமுக புகழேந்தி பேச்சு

Published on 10/12/2022 | Edited on 11/12/2022

 

பக

 

குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் குஜராத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள பாஜக, இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாகக் காங்கிரஸ் இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து திமுகவின் இள.புகழேந்தி அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

குஜராத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றிபெற்றிருக்கிறார்கள், குஜராத்தில் தோல்வி அடைந்தால் தான் ஆச்சரியம்,வெற்று பெறுவது ஆச்சரியம் இல்லை என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாம் கூறி வருகிறார்கள். இந்த தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

முதலில் இந்தத்தேர்தலோடு உ.பியில் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் யோகி ஆதித்தியநாத் முதல்வராக உள்ள உ.பி மாநிலத்தில் நடைபெற்ற இந்தத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. சமாஜ்வாதி கட்சி அபார வெற்றிபெற்றுள்ளது. இதை நாம் எளிதில் கடந்து போக முடியாது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த தோல்வி பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தத்தோல்வி நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் அங்கு எதிரொலிக்கும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

 

குஜராத் என்பது மோடி அமித்ஷாவின் சொந்த ஊர், இந்த தேர்தலில் அவர்கள் வெற்றிபெற என்னவெல்லாம் செய்தார்கள் என்று சொல்லித்தெரியவில்லை. வாக்களிக்க வந்த பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் ரோட்டில் ரோட் ஷோ செல்கிறார், ஏன் இவ்வாறு வழிமுறையை மீறிச் செல்கிறீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.  இன்னும் சொல்லப்போனால் மோடி தேர்தல் நாள் அன்று நடைப்பயணம் மேற்கொண்ட அந்த தொகுதியில் தேர்தலையே நிறுத்தியிருக்க வேண்டும். அதுதான் சரியான ஜனநாயகமாக இருந்திருக்கும். ஆனால் தேர்தல் ஆணையம் அவ்வாறு நடந்துகொள்ளாது என்பது அனைவருக்கும் தெரியும். 

 

இப்போது கூட யாராவது வழக்குப் போட்டால் மோடி அவர்கள் சட்ட விதிகளை மீறியிருக்கிறார் என்று கூறி அந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தலையே தடை செய்திருப்பார்கள். அதையும் தாண்டி இந்த இரண்டு மாதங்களில் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகளை அங்கு விதிகளை மீறிக் கொண்டு சென்றார்கள் என்று பார்க்க வேண்டும். இரண்டு லட்சம் கோடிக்கு அதிகமாக முதலீடுகள் அங்கே சென்றுள்ளது. இது அனைத்தும் தேர்தலுக்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட நாடகம். எல்லா மாநிலத்துக்கும் மத்திய அரசு தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு இதே மாதிரி நிதி ஒதுக்குமா?தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு இவர்கள் சென்றுள்ளார்கள். 

 

இது நிச்சயம் தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். இவர்கள் இன்றைக்கு இல்லை என்றாலும் ஒருநாள் மக்கள் முன் அம்பலப்பட்டுப் போகப்போகிறார்கள் என்பது மட்டும் நிஜம். அதற்கான சூழ்நிலைகள் நிச்சயம் வரும்.அப்போது மக்கள் இவர்களுக்கு நல்ல முடிவைப் பரிசளிப்பார்கள். அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும் குஜராத்தில் தேர்தலில் மக்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் வாக்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் என்ன ஆனது. அங்கே இவர்கள் எதையும் செய்யவில்லை, தோல்வி அடைந்தார்கள். இவர்கள் தேர்தலை ஒழுங்காக நடத்தினாலே அங்கு பாஜக தோத்துவிடும். எனவே தேர்தல் நடைபெறும் முறைதான் மிகமுக்கியமான அம்சமாக இருக்கிறது. மக்களை விலைக்கு வாங்கி பழக்கப்பட்ட பாஜக இந்த வெற்றியையும் விலை கொடுத்து வாங்கியுள்ளது. 


 

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.