Skip to main content

தோசை சுட்டுத் தருவீங்களா??? -கிருஷ்ணகிரி பெண்ணிடம் கேட்ட மோடி 

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

"நான் சிறுவனாக இருந்தபோது பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள்  மட்டுமே சமையல் எரிவாயு அடுப்புகளை பயன்படுத்தி வந்தனர். அவர்களெல்லாம் எங்களைப் போன்ற ஏழைகளிடம் உங்கள் வீடுகளில் சமையல் எரிவாயு பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்றனர். பிறகு ஏன் உங்கள் வீடுகளில் மட்டும் சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர்களிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை". இவ்வாறு உஜ்வாலா திட்டத்தால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பற்றி பயனாளிகளிடம் பேசியபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

ujwala

 

 

 

மேலும், உஜ்வாலா திட்டத்தால் பல்வேறு பட்டியல் இன மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தோர் வகுப்பை சார்ந்தவர்கள் உட்பட பலரும் பயனடைந்திருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு வரை வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ள 13 கோடி மக்களே சமையல் எரிவாயு திட்டத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளில் இவ்வளவு மக்களுக்குதான் இந்த சமையல் எரிவாயு திட்டம் சென்றிருக்கிறது. ஆனால், 2014 ஆம் ஆண்டு எங்களது ஆட்சிக்கு பின்னர் உஜ்வாலா திட்டத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பத்து கோடி மக்களுக்கு புதிய எரிவாயு இணைப்பை அளித்துள்ளோம். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். சமுதாயம் அதிகாரம் பெறச் செய்வதில் இத்திட்டம் முக்கியப் பங்காற்றுகிறது, என்றார்.
 

பின்னர், இந்தியாவிலுள்ள மாநிலங்களில் ஏழு மாநிலங்களை தேர்ந்தெடுத்து, அதில் ஏதேனும் ஒரு மாவட்டத்தை தேர்தெடுத்து உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு திட்டத்தை பயன்படுத்தும் பெண்களிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸில் கலந்துரையாடினார். அந்த வீடியோ கான்பிரன்ஸில் ஏழு மாநிலங்களில் ஒரு மாநிலமாக தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து, அதில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ருத்ராம்மா, ஈஸ்வரி மற்றும் சந்திரா ஆகிய பெண்களிடம் பேசினார்.
 

"இத்திட்டம் உங்களுக்கு எவ்வாறு உதவியாக இருக்கிறது", என்றார் மோடி.
 

ருத்ரம்மா அதற்கு, " முன்பெல்லாம் விறகுகட்டைகளில் தான் சமைப்பேன். அதனால் என்னுடைய வாழ்நாளில் பாதி நேரங்கள் சமையல் வேலைபார்ப்பதிலேயே செலவழிந்தது. தற்போது எந்த சமையலாக இருந்தாலும் ஒரு மணிநேரங்களில் முடிந்துவிடுகிறது. என் குழந்தைகளுடனும் என் நேரங்களை செலவு செய்ய முடிகிறது", என்றார்.    
 

krishanagiri ujwala


அதனைத்தொடர்ந்து மோடி, " நான் அடுத்த முறை தமிழகம் வந்தால் எனக்கு தோசை சுட்டுத்தருவீர்களா", என்று கேட்டார்.
 

அதற்கு அந்த பெண்கள், "கண்டிப்பாக வாருங்கள்", என்றனர். பிறகு மோடிக்கு தமிழில் "வணக்கம்" என்று கலந்துரையாடலை முடித்துக்கொண்டார்.  
 

 

 

தமிழக பெண்களிடம் பேசியவர், இதுவரை தமிழகத்தில் ஸ்டெர்லைட் பிரச்சனையால் இறந்த பதிமூன்று உயிர்களுக்கும், கலவரத்தில் காயமான மக்களுக்கும் ஆறுதலாக ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று  மற்ற மாநிலங்களை விட,  இந்தியாவில் தமிழகம்தான் அடிப்படை தேவைகளான மின்வசதி, சமையல் எரிவாயு போன்ற வசதிகளில் முன்னேறி வந்திருக்கிறது. இந்த இலவச எரிவாயு திட்டம் என்பது தமிழகத்தில் முந்தைய ஆட்சிகளில் இருந்தே ஒரு திட்டமாக இருந்துள்ளது. தற்போது வந்து தமிழகத்தில் எரிவாயு அடுப்பில் தோசை சுட்டு தர முடியுமா? என்கிறீர்களே...

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.