Skip to main content

மோடி பாபாவும் 40 அமைச்சர்களும்!

Published on 26/09/2018 | Edited on 26/09/2018

மோடி அறிவிக்கும் திட்டத்தால் ஏற்படும் சிரமங்களையும் பாதிப்புகளையும் சொன்னால், நம்மை ஆண்டி இண்டியன் என்றும் தேசவிரோதி என்றும் பாஜகவினர் ஏசுவார்கள். எல்லையில் ராணுவ வீரர்கள் படும் கஷ்டத்தைவிடவா நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்று மிகப்பெரிய தேசபக்தர்களாக மாறி சீறுவார்கள்.

 

narendra modi



தேசபக்தி என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தமான பொருள் என்பதைப்போல பொங்கும் அவர்கள்தான், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையைத் தகர்க்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான காரணமாக இருப்பார்கள். மாடுகளைவிட மனித உயிர்களை இழிவாக கருதுவார்கள்.

1998 முதல் 2004 ஆம் ஆண்டுவரை வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் கார்கில் போரில் இந்திய வீரர்கள் உயிரைக் கொடுத்து பெற்ற வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றி அரசியல் செய்தார்கள். அந்தப் போர் முடிந்தபிறகுதான் இறந்த வீரர்களை அடக்கம் செய்வதற்காக வாங்கிய சவப்பெட்டியில்கூட பாஜக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலமாகியது.

பொதுவாகவே காங்கிரஸ் மற்றும் வேறு அரசுகள் ஆட்சியில் இருக்கும்போது பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அத்துமீறல்களை பாஜக பூதாகரமாக்கி பிரச்சாரம் செய்வது வாடிக்கை. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய ராணுவத்தை பலம்பொருந்தியதாக மாற்றி இரண்டு நாடுகளும் பயந்து நடுங்கச் செய்யமுடியும் என்று மார்தட்டுவது வழக்கம்.

ஆனால், 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபிறகுதான் காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவுக்கு கலவரம் அதிகரித்தது. இந்திய சீன எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

 

modi anil ambani



இந்நிலையில்தான், இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி செய்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது. அதைத்தொடர்ந்து, இதுவரை எந்த பிரதமருக்கும் இல்லாத வகையில், எனது பிரதமர் ஒரு திருடர் என்ற அர்த்தப்படும்படி, “மேரா பிஎம் சோர் ஹே” என்ற ஹேஸ் டேக்கில் மோடிக்கு எதிரான பதிவுகளைப் போட்டு உலக அளவில் ட்ரெண்டிங் செய்தனர்.

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டியதை ஒப்புக்கொள்ளும்வகையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே ஒரு பேட்டியளித்தார்.

பிரான்சிடமிருந்து மோடி அரசு வாங்க முடிவு செய்த ரஃபேல் போர் விமானங்களைப் பராமரிக்கவும், உதிரிபாகங்களை உற்பத்தி செய்யவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யவும்,  அனில் அம்பானிக்கு சொந்தமான  ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்க ஒப்பந்தத்தில் வகைசெய்யப்பட்டிருந்தது. பிரான்ஸ் அரசு தேர்வு செய்வதற்கு வசதியாக இரண்டு நிறுவனங்களை இந்திய அரசு குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தது என்று ஹோலண்டே கூறியிருந்தார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் விமானத் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத, 10 நாட்களுக்கு முன் வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் அவசரமாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை மோடி அரசு பிரான்ஸுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இதைத்தான் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்க்வா ஹோலண்டே அம்பலப்படுத்தி இருக்கிறார்.

 

francois hollande

பிராங்க்வா ஹோலண்டே



இதன்மூலம் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுவரை எழுப்பிய சந்தேகங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் உண்மை என்று ஆகியிருக்கிறது. ஹோலண்டே இப்படி பேட்டி கொடுத்ததும் நிதியமைச்சர் ஜெட்லியும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கொந்தளிக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு எதிராக வெளிநாட்டுடன் சதி செய்கிறது என்று ஜெட்லி கூறினார். ராகுலும் ஹோலண்டேயும் கூடிப்பேசி பாஜக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள் என்று நிர்மலா சீத்தாராமன் கூறினார். பிரான்ஸுக்கே சென்று இதுதொடர்பாக போராடப் போவதாக நிர்மலா கூறினார். ஒப்பந்தம்போடும்போது அதிபராக இருந்தவர் ஹோலண்டே. அவரே, நடந்த உண்மையைச் சொல்கிறார். பொய் சொல்வதில் புகழ்பெற்ற பாஜக அமைச்சர்களோ ஹோலண்டே சொல்வதை பொய் என்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் உண்மைக்கு மாறாக பேசியது நிரூபிக்கப்பட்டால் அவருடைய எதி்ர்காலம் என்னாகும் என்பது ஹோலண்டேவுக்கு தெரியும். அங்கு மீடியாக்கள் இந்திய மீடியாக்களைப் போல ஆளும் அரசின் காலடியில் வாலாட்டிக் கொண்டிருப்பவை அல்ல என்பது நிர்மலாவுக்கு புரியாதது அல்ல. ஹோலண்டே சொன்னது குறித்து தற்போதைய அதிபர் மேக்ரானும் மறுப்பு சொல்லவில்லை. இப்போதும் பொய்களால் பூசிமெழுகவே பாஜக அரசு முயற்சி செய்கிறது.

ஆனால், ராகுல் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. இதே ரஃபேல் போர் விமானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் இந்திய விமானப்படைக்காக வாங்க முடிவெடுத்து விலை பேசியிருந்தது. அப்போது, ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் அரசு விலை பேசியதாகவும், அதே விமானத்தை மோடி அரசு 1,570 கோடி ரூபாய் விலைக்கு வாங்க முடிவு செய்தது ஏன் என்று ராகுல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக ராகுல் மீது உரிமைமீறல் பிரச்சனையை பாஜக கொண்டுவந்தது. அதையும் மீறி, புதிதாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு பராமரிப்பு மற்றும் உதிரிபாக உற்பத்தி உரிமையை பெற்றுக் கொடுத்தது ஏன் என்று பொதுக்கூட்டத்தில் பேசினார் ராகுல். அதைத்தொடர்ந்து 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் ராகுல் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது.
 

rahul gandhi



இப்போது, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட அதிபரே உண்மையைச் சொல்லும்போதும், ராகுலின் கேள்விகளுக்கு பதில் சொல்வதை மோடி தவிர்க்கிறார். மோடி மவுனம் சாதித்தாலும், ராகுல், மோடியின் அனைத்து தில்லுமுல்லுகளையும் திருட்டுகளையும் அம்பலப்படுத்தி நீதியைப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

“ரஃபேல் ஒப்பந்தத்தில் இப்போதுதான் வேடிக்கை தொடங்கியிருக்கிறது. இனிமேல்தான் விஷயம் சுவாரஸ்யமாகப் போகிறது. விஜய் மல்லையா விவகாரம், லலித் மோடி விவகாரம், நீரவ் மோடி விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல்படுத்திய விவகாரம் என்று எல்லாவற்றிலும் மோடியின் திருட்டுகள் அம்பலமாகும். மோடி நாட்டின் பாதுகாவலர் அல்ல. கொள்ளைக்காரர் என்பதை ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவருவோம்…

பழுத்த அனுபவம்மிக்க இந்திய அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தைத்தான் காங்கிரஸ் அரசு பிரான்ஸ் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த நிறுவனத்தின் மரியாதையையும், இந்திய விமானப்படை அதிகாரிகளின் மரியாதையையும் திருட முயற்சி செய்த மோடியிடமிருந்து நீதியைப் பெற்றே தீருவோம்” என்று ராகுல் உறுதியளித்திருக்கிறார்.

இதனிடையே, அலிபாபாவும் 40 திருடர்களையும் போல, மோடி பாபாவும், அவருடைய 40 அமைச்சரவை சகாக்களும் ரஃபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான கேள்விகளுக்கு எப்போது பதில் சொல்வார்கள் என்று காங்கிரஸ் கட்சியும் கேட்டிருக்கிறது. 2019 தேர்தலில் மக்கள்தான் மோடிக்கு பதில் சொல்லக் காத்திருக்கிறார்கள்.

மாய பிம்பத்தை உருவாக்கி பிரதமரான மோடி, இப்போது நிஜமான ஊழல் வலைக்குள் சிக்கிவிட்டார்.

 

 

 

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.