Skip to main content

தவறாக கணித்த அமித்ஷா, மோடி... பாஜகவிற்கு செக் வைக்கும் அரசியல் மூவ்... வீழ்த்திய சரத் பவார்!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

"அரசியல் சாணக்கியர்' என வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவின் திட்டங்கள் மகாராஷ்டிராவில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. மோடி- அமித்ஷாவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணையாத சூழலில், மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் அந்த ஒற்றுமையை இனி கொண்டுவரும் என்கிறார்கள் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸார்.
 

politics


மகாராஷ்ட்ராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்த கூட்டணியை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க ஜனாதிபதி ஆட்சியையும் அதன்பிறகு பா.ஜ.க.வின் ஆட்சியையும் அமல்படுத்தினார் பிரதமர் மோடி. இது, தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கும், நீதிபதிகள் கொடுத்த உத்தரவும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமலே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், துணைமுதல்வர் அஜித்பவாரும் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

 

film


இதனால், சட்டமன்ற ஜனநாயகம் மீண்டும் உயிர்ப்பித்தது. சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே தலைமையிலான, மாநிலத்துக்கான மேம்பாட்டு முன்னணி ‘தங்களது கூட்டணி ஆட்சியை அமைத்தது. மகாராஷ்ட்ரா முதல்வராக பதவியேற்றார் உத்தவ்தாக்கரே. இந்த விழாவில் கலந்துகொள்ள தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தெலுங்கு தேசம், சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருந்தார் தாக்கரே. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அவரை வாழ்த்தியிருக்கின்றன. விழாவில் கலந்துகொள்ள மும்பை சென்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். மாநில கட்சிகளின் தலைவர்கள் பலரும் விழாவில் பங்கேற்றனர்.
 

politics



இது குறித்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசியபோது, "மோடி அமித்ஷாவின் அதிகாரமும் திட்டமும் பா.ஜ.க.வின் இறுமாப்பும் மகாராஷ்ட்ராவில் வீழ்த்தப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு உத்தவ்தாக்கரேவின் பதவியேற்பு விழா அச்சாரமாக இருக்கும்'' என்கிறார். சோனியாவும் ராகுல்காந்தியும் தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென விரும்பிய தாக்கரே, சோனியாவை தொடர்பு கொண்டு பேசினார். அந்த பேச்சு 20 நிமிடங்கள் நீடித்திருக்கிறது.

அது குறித்து நாம் விசாரித்தபோது, "தனது அமைச்சரவையை பற்றி சோனியாவிடம் விவரித்திருந்தார் தாக்கரே. அப்போது, "பா.ஜ.க.வோடு இணைந்து இதுவரை ஆட்சி செய்தீர்கள். யாரை எதிர்த்து நீங்கள் மக்களிடம் வாக்கு சேகரித்தீர்களோ அவர்களோடு இணைந்து முதன் முதலாக உங்கள் தலைமையில் தற்போது ஆட்சி அமைக்கிறீர்கள். அதனால், பா.ஜ.க. ஆட்சியை போலில்லாமல் சிறந்த ஆட்சியை மக்களுக்கு கொடுங்கள்' என சொல்லியிருக்கிறார் சோனியா. அவரது அட்வைஸை ஏற்றுக்கொண்ட தாக்கரே, கடந்த கால நிகழ்வுகள் குறித்து வருத்தமான குரலில் பேசியதுடன் "ஒரு நல்ல ஆட்சியை மராத்தாவில் நிலை நிறுத்துவேன், பா.ஜ.க.வின் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவதும் எனது கடமை' என்றிருக்கிறார். மேலும், "பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதும் முக்கிய பொறுப்பாக உணர்கிறேன்' எனவும் சொல்லியுள்ளார் அவர்'' என்கிறார்கள் தங்களின் காங்கிரஸ் மேலிடத்தோடு தொடர்புடைய தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.


முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் கட்சிகளின் தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் அவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடவும் ஏற்பாடு செய்தார் தாக்கரே. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினின் வருகை மிக முக்கியமானது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மோடியும் அமித்ஷாவும் உற்றுக் கவனிக்கத் துவங்கியிருப்பதாகச் சொல்லும் அரசியல் ஆய்வாளர்கள், அறுபது ஆண்டுகால அரசியல் சாணக்கியரான சரத்பவாரின் மூவ்களை மோடியும் அமித்ஷாவும் தவறாக எடை போட்டதும், அஜித் பவாரின் பின்னணி பலத்தை யோசிக்காமல் அதிகம் நம்பியதும் பா.ஜ.க.வின் சறுக்கல்களுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்ததும், அது நள்ளிரவில் விலக்கிக்கொள்ளப்பட்டதும் அவசரம் அவசரமாக தேவேந்திரபட்னாவிஸை முதல்வராக பதவியேற்க வைத்ததும், தேசியவாத காங்கிரசை உடைக்க நினைத்த முயற்சியும் மோடி, அமித்ஷாவின் வியூகங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதுடன் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வழி வகுத்திருக்கிறது. அத்துடன், அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகளும் வாபஸ் ஆகியுள்ளன.

இதற்கிடையே, சிவசேனாவின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் தாக்கரேவுக்கு ஆட்சியை சுமுகமாக நடத்திச் செல்வது பெரிய சவால்தான். வலிமையான அரசியல் அனுபவம் கொண்ட சரத்பவாரை சமாளித்து ஆட்சியை நகர்த்துவதில் இருக்கிறது தாக்கரேவின் அரசியல். அதனால், தங்களின் ராஜதந்திரம் தோற்றுப் போனதில் அப்செட்டான மோடியும் அமித்ஷாவும், தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி முறையின் அடுத்த கட்டத்தை கவனித்து அதற்கேற்ப காய்களை நகர்த்த காத்திருக்கிறார்கள். கர்நாடகாவில் பதுங்கி பாய்ந்தது போல மகாராஷ்ட்ராவுக்கும் காலம் வரும் என காத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை!


 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.