Skip to main content

அரசு அதிகாரிகளை திணறடிக்கும் நவீன கொள்ளையர்கள்

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

 

விழுப்புரம் - கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் தினசரி கொள்ளை சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் கொள்ளையர்கள் திருடும் வீடுகள் அனைத்துமே அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், கார் வைத்துள்ள பெரிய வீடுகளை மட்டுமே நோட்டமிட்டு கொள்ளையடித்து வருகிறார்கள்.

 

home



கடந்த 4ஆம் தேதி முதல் இன்று வரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையர்கள் விளையாடியுள்ளனர். விழுப்புரத்தில் டாக்டர் இனியவன், டாக்டர் சுந்தரராஜன் வீடுகளில் 60 பவுன் நகை பணம் கொள்ளை, புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மினி தொழிற்சாலையில் 12 லட்சம் பணம், நகை கொள்ளை, மஞ்சு நகர் பகுதியில் குடியிருக்கும் நடமாடும் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வீட்டில் 70 பவுன் தங்க நகை, 11 கிலோ வெள்ளி மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளை, புதுக்கோட்டையில் மாவட்டக் கல்வி அதிகாரியாக உள்ள விஜயலட்சுமி என்பவரின் விழுப்புரம் வீட்டில் பணம் நகை கொள்ளை, இந்த வீடு மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ளது.

 

home

                                                               சுரேஷ், ஜெயக்குமார், மோகன்



உளுந்தூர்பேட்டையில் ஆறாம் தேதி இரவு மட்டும் அன்னை தெரசா நகரிலுள்ள ஹரி கிருஷ்ணன் வீட்டில் சுமார் 100 பவுன் தங்க நகைகள், 50 லட்சம் மதிப்புள்ள வெள்ளிபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவர் சேலம் மாவட்டத்தில் முதுநிலை வணிக மேலாளர் பணியில் உள்ளவர். இவரது அடுத்த வீட்டில் உள்ளவர் சார்பதிவாளர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சேகர். இவரது வீட்டிலும் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவர் வீட்டையடுத்து உள்ள பாலாஜி டிரைவிங் ஸ்கூல் நடத்தும் ராஜராஜன் வீட்டிலும் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் பிரமுகர் வீட்டிலும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே இரவில் உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் மிக சாவகாசமாக பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த நகை பணம் என கோடிக்கணக்கில் அள்ளி சென்றுள்ளனர். 
 

இப்படி தொடர் கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனி போலீஸ் கிரைம் டீம் இருந்தும் கொள்ளையர்களை பிடிபடவில்லை. இது ஒரு பக்கம் என்றால் கொள்ளையர்கள் மிகச்சரியாக கார் வைத்துள்ள, சிசிடிவி கேமரா பொருத்தி உள்ள வீடுகளாக பார்த்து பார்த்து கொள்ளையடிக்கிறார்கள். மேலும் கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள பதிவுகளையும் கையோடு கழட்டி எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். இப்படி தடயமே இல்லாமல் மிக சாமர்த்தியமாக தைரியமாக கொள்ளை வேட்டை நடத்துகிறார்கள். காவல்துறை தடுமாறுகிறது என்கிறார் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார்.
 

குறிப்பாக இதுபோன்ற கொள்ளையர்கள் சாதாரண கொள்ளையர்கள் இல்லை. இவர்கள் கார் போன்ற வாகனங்களில் வந்து சாவகாசமாக கொள்ளையடித்து செல்கிறார்கள். ஆனால் காவல்துறை, அப்பாவிகள் சிலரை பிடித்து இவர்கள் கொள்ளையர்கள் என போட்டோவுக்கு போஸ் கொடுத்து கணக்கு காட்டுகிறது. உண்மையான கொள்ளையர்களை பிடிக்காததால் தொடர் கொள்ளையில் திணறுகிறது விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் என்கிறார் சுரேஷ்.

 

home


 

பொதுவாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்தால் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அதன் மூலம் விரைவில் கண்டுபிடித்துவிடலாம் என்று காவல்துறை உட்பட எல்லோரும் நம்புகிறோம். ஆனால் அந்த நவீன முறையையும் உடைத்து எறிகிறார்கள் கொள்ளையர்கள். சிசிடிவி கேமரா உள்ள வீடுகளிலும் கார் போன்ற வசதி படைத்தவர்கள் வீடுகளையும் மட்டுமே நோட்டமிட்டு அவர்கள் வெளியூர் செல்வதை உறுதிப்படுத்திக்கொண்டு கொள்ளையடித்து செல்கிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருந்தும் பயன் இல்லாத நிலை உருவாகி வருகிறது. காவல்துறை குற்றவாளிகளை பிடிக்க பல நவீன முறைகளை கையாண்டு வரும் நிலையில், அதையும் உடைத்தெறிந்து தடயங்கள் இல்லாமல் கொள்ளை சம்பவங்களை நடத்துகிறார்கள் நவீன கொள்ளையர்கள் என்கிறார் மோகன்.

மேலும் அப்பாவிகளை பிடித்து கொள்ளையர்களாக சித்தரித்து காண்பிக்காமல் காவல்துறைக்கு சவால் விடும் இந்த உண்மையான கொள்ளையர்களை காவல்துறையினர் எப்போது பிடிப்பார்கள் என்கிறார் மோகன்.
 

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் கொள்ளைபோன அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் காவல் துறையில் கொள்ளை போன நகை பணம் மதிப்புகளை குறைத்து சொல்கிறார்கள். இதில் சிலர் போலீஸிடம் புகார் கொடுக்கவே தயங்குகிறார்கள். காரணம் தாங்கள் முறைகேடாக சம்பாதித்த பணம் விவரம் வெளியே தெரிந்துவிடும் அதை வைத்து அமலாக்கத்துறை உள்ளே புகுந்து குடைய ஆரம்பித்து விடும் என்று மிரண்டு போய் பயப்படுகிறார்கள்.


 

 

கொள்ளை போன வீடுகளுக்கு சென்று பத்திரிகை  மீடியாக்கள் படம் எடுத்த பிறகு கொள்ளை நடந்த விவரம் பற்றி கேள்வி கேட்டால் நாங்களெல்லாம் காவல்துறையிடம் சொல்லிக் கொள்கிறோம் நீங்கள் புறப்படுங்கள் என்று துரத்துகிறார்கள். இதையெல்லாம் நன்றாக யோசித்து விசாரித்து விட்டுதான் கொள்ளையர்கள் அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் பற்றி விவரமாக தெரிந்துகொண்டே அவர்கள் வீடுகளாக பார்த்து பார்த்து கொள்ளையர்கள் துணிந்து கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் பிடிபட்டாலும் கூட கொள்ளை போன பணம் நகைகளின் உண்மை மதிப்பு காவல்துறையினர் வெளியே காட்டமாட்டார்கள். கொள்ளையர்களை காவல்துறை பிடித்தாலும் கூட அவர்களிடம் ரெக்கவரி செய்யும் பணம் நகைகள் உண்மையான கணக்கை வெளியே காட்டாமல் அவர்களே ஆட்டையபோடும் நிலையும் உள்ளது. 


 

 

விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கிரிமினல் குற்றவாளிகளை புலனாய்வு செய்து பிடிப்பதில் கைதேர்ந்தவர். ஆனால் அவருக்கே டாட்டா காட்டுகிறார்கள் இந்த நவீன கொள்ளையர்கள். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்பி ஜெயச்சந்திரன் கொள்ளையர்களை பிடிப்பதில் இனிமேல்தான் தீவிரம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். முதலில் கொள்ளையர்களை இவர்கள் பிடிப்பதற்கு முன்பு ஏற்கனவே குற்றவாளிகளை பிடிப்பதற்கு என்று மாவட்ட அளவில் தனி கிரைம் டீம் உள்ளது. அவர்கள் மீது பொதுமக்களின் சந்தேகப் பார்வை பலமாக திரும்பியுள்ளது. 
 

காரணம். அந்த டீமில் உள்ள ஒவ்வொருவரும் கார், பங்களா போன்ற வீடுகள் என ஆடம்பரமாக வாழ்கிறார்கள். சாதாரணமாக கிரேடு 1, கிரேடு 2 என்ற காவலர் நிலையில் உள்ளவர்கள் கூட கார் பங்களா என வாழ்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. முதலில் இந்த டீமில் உள்ளவர்களை காவல்துறை தீவிர விசாரணை செய்து, இவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து நேர்மையான காவல்துறையினரை நியமித்து இந்த நவீன கொள்ளையர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்களில் சிலர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.