Skip to main content

கிராமங்களில் அசத்தும் நடமாடும் ஜவுளிக்கடை!

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
Mobile Textile Shop


காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் - மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக பஸ் வசதிகள் இல்லாத கிராமப்புறங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் சைக்கிள் மற்றும் மொபட் பைக்கில் சென்று ஜவுளி வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர்.
 

அப்போது அவர்களுக்கு ஜவுளிக்காரர் என்ற அடைமொழியுடன் நல்ல வரவேற்பும், வருவாயும் இருந்து வந்தது. காலப்போக்கில் பிரமாண்டமான ஜவுளிக்கடை முதலாளிகள் தங்கள் கடைகளுக்கு வாடிக்கையாளர்களை வரவழைக்க நடிகர்கள், நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்ததால்  கவர்ச்சிகரமாக இத்தொழில் மாறியது. இதனால் சைக்கிள், மொபட் ஜவுளிக்காரர்கள் பாதிக்கப்பட்டு ஜவுளி அதிபர்கள் பலர் உருவாகினார்கள்.

 

​    ​Mobile Textile Shop murugan


இது ஒருபுறம் இருக்க பழைய பாரம்பரியம் குலத்தொழில் காணாமல் போய்விடக் கூடாது என விழுப்புரம், வேலூர், திருக்கோயிலூர், ஆரணி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட ஜவுளிக்காரர்கள் தற்போது அவர்கள் வைத்திருந்த மொபட் பைக்குகளை 3 சக்கரமாக மாற்றி, அதை கடைபோன்று அமைத்து நடமாடும் ஜவுளிக்கடை என்று பெயர் வைத்து மீண்டும் கிராமப் பகுதிகளுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள்.
 

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விழுப்புரம் சின்னசாமி என்பவரிடம் கேட்டபோது, மீண்டும் கல்பாக்கம் மாமல்லபுரம் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளுக்கு ஜவுளிக்காரராக வியாபாரத்துக்கு வந்தேன். பெண்களிடம் நடமாடும் ஜவுளிக்கடை என்ற இந்த வண்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.

 



 

Next Story

பப்ஜி கேமில் மூழ்கிய இளைஞர்; தாய் கண்டித்ததால் எடுத்த சோக முடிவு

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Youth immersed in pubg game; A sad decision taken because of mother's reprimand

மொபைல் போனில் கேம் விளையாண்டதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளில் இளைஞர்கள் சிலர் மூழ்கி கிடக்கும் நிலையில் சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அதுவும் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வெளிநாட்டு வெர்ஷன்கள் மூலம் பதிவிறக்கி விளையாடும் சூழல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரவீன் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து முழுநேரமாக கேம் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டியதால் அவருடைய தாயார் அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவர் பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மீண்டும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

வஸ்த்ரா நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐ.டி ரெய்டு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

nn

 

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

கொச்சின் மற்றும் பெங்களூரில் நிகழ்ந்த சோதனை அடிப்படையில் சென்னை கே.கே. நகரில் உள்ள ஒன்பதாவது செக்டாரில் உள்ள வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நீலகண்டன் வீட்டில் இந்த சோதனை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

 

அதேபோல் சென்னை கோபாலபுரத்தில் ரத்தினம் தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் வினோத்குமாரின் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் சோதனை நடந்து வருகிறது. அதேபோல் தி.நகர் பார்த்தசாரதிபுரம் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள அலுவலகம் ஒன்றில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த அலுவலகம் வஸ்த்ரா டெக்ஸ்டைல் நிறுவனத்தின் உரிமையாளருக்கு தொடர்புடைய இடம் என்று கூறப்படுகிறது. இதேபோல் சென்னை பட்டாளம், வேப்பேரி, மண்ணடி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.