Skip to main content

கொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்!

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
mk stalin


மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய பிரிகேட் மைதானத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடி மோடி அரசைத் தூக்கி எறிவோம் என்று சபதம் எடுத்திருக்கிறார்கள்.
 

22க்கு மேற்பட்ட கட்சிகள் தனக்கு எதிராக அணி அமைத்திருப்பதாகவும், அது மக்களுக்கு எதிரான அணி என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதாவது தனக்கு எதிராக அணி அமைத்தால் அது மக்களுக்கு எதிரானது என்றால் அர்த்தம்? மோடி என்றால் மக்கள்… மக்கள் என்றால் மோடி என்று சொல்ல வருகிறாரா?
 

2014 ஆம் ஆண்டு அவர் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மோடியை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் அல்லது ஆண்ட்டி இண்டியன் என்று குற்றம்சாட்டப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அதாவது, மோடி என்றால் தேசம்… தேசம் என்றால் மோடி என்பதைப்போல.
 

இப்படித்தான், 1977 ஆம் ஆண்டுக்கு முன் இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா என்று காங்கிரஸ் தலைவர்கள் ஒரு முழக்கத்தை உருவாக்கினார்கள். ஆனால், அதே இந்திரா தனது தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது.
 

அதே நிலைதான் இப்போதும் இந்தியாவில் நிலவுகிறது. பதவியேற்ற நாளில் இருந்து இன்றுவரை மோடி இந்தியாவில் தங்கிய நாட்களைவிட வெளிநாடுகளில் சுற்றித்திரிந்த நாட்களே அதிகம். அவரை சுற்றுலா பிரதமர் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
 

மக்களுடைய வாழ்வாதாரத்தையும், இந்தியாவின் அடிப்படைத் தன்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டையும் தகர்த்து, மக்களை பிரித்தாளும் முயற்சியிலேயே பாஜக காலத்தை ஓட்டிவருகிறது. கார்பரேட் நிறுவனங்களின் வேலைக்காரரைப் போல மோடி, இந்திய மக்களின் பணத்தை எடுத்து பெருமுதலாளிகளுக்கு தாரைவார்த்து, அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பவிடும் வேலையையும் செய்துவருகிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு, அம்பானிகளும், அதானிகளும் விரும்புகிற வேலையை அவர்கள் விரும்பியபடி நிறைவேற்றித்தரும் நம்பிக்கையான வேலைக்காரராக மோடி செயல்படுகிறார் என்று பகிரங்கமாகவே அவர்மீது குற்றம்சாட்டுகிறார்கள்.
 

அவருக்கு எதிராக எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் எதற்குமே அவர் பதிலளிப்பதில்லை. இது ஒருவிதமான கல்லுளிமங்கன் நிலை என்றும் கேலிசெய்கிறார்கள். நாடாளுமன்றத்தில் 19 நாட்களே இருந்திருக்கிறார். எந்த ஒரு விவாதத்திலும் உறுப்பினர்களின் கேள்விகளை நேரடியாக எதிர்கொண்டு பதிலளிக்கவில்லை. ஒரு விவாதம் நடந்தால், இறுதியாக காட்டுக்கூச்சலாக ஏற்ற இறக்கத்தோடு நீளமாக பேசுவதையே தனது பாணியாக வைத்திருக்கிறார் மோடி. குறுக்கே யாரும் புக முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டே பேசுகிறார்.
 

இப்படிப்பட்ட பிரதமரை இனியும் விட்டுவிடக்கூடாது என்றே, மக்கள் நலன்சார்ந்த சிந்தனையோடு, இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு எதிர்க்கட்சிகள் இணைந்திருக்கின்றன. அவர்கள் நடத்திய கொல்கத்தா கூட்டத்தில் எல்லாத் தலைவர்களுமே தங்களுக்குள் வேற்றுமையை மறந்து, மோடியை தூக்கியெறிய வேண்டியதன் அவசியத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.
 

பங்கேற்ற தலைவர்களில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய பேச்சுதான் மிகவும் வெளிப்படையான, மோடியை முழுவதுமாகத் தோலுரித்த பேச்சாகும். இந்திய அரசை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றிவிட்டார் மோடி என்று கூறிய ஸ்டாலின், நூறு கூட்டங்களில் மோடி பேசிய ஆயிரம்பொய்களை அம்பலப்படுத்தினார். இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்ன பொய்யை நம்பி வாக்களித்த மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தவர். ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று மோடி சொன்ன பொய்யை நம்பி வாக்களித்த இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி, பக்கோடா விற்பதும் ஒரு வேலைவாய்ப்புதான் என்று கேலி பேசியவர் மோடி. கருப்புப்பணத்தை ஒழிக்கப்போவதாக பணமதிப்பிழப்புச் செய்து, நாடு முழுவதும் சிறு, குறு தொழில்களை இழுத்துமூடக் காரணமானவர் மோடி என்று ஸ்டாலின் ஆவேசமாக குற்றம்சாட்டினார்.
 

இப்படிப் பேசியது மட்டுமின்றி, நாடுமுழுவதும் எல்லா மாநிலங்களிலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி மோடியையும் பாஜகவையும் அம்பலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் ஸ்டாலின். அவருடைய பேச்சு இந்திய அளவில் கவனம் பெற்றது. எல்லாக் கட்சிகளும் தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு மோடி தலைமையிலான பாஜக அரசை தூக்கியெறிய வேண்டும் என்று ஸ்டாலின் எழுப்பிய குரல் எல்லாப் பக்கத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

 

 

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.