Skip to main content

திரும்பி வந்த அபிநந்தன்...திரும்பாத 54 வீரர்கள்? மறைக்கப்பட்ட வரலாறு

Published on 01/03/2019 | Edited on 01/03/2019
missing 54


விமானப்படை வீரர் அபிநந்தனை இந்தியாவிடம் இன்று ஒப்படைத்துவிடப்போவதாக பிரதமர் இம்ரான் கான் நேற்று பாக் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதனை அடுத்து இன்று காலையிலிருந்து வாகா எல்லையில் அபிநந்தனை வரவேற்க ஆயிரக்கணக்கில் பொது மக்கள் கூடியிருந்த நிலையில் அபிநந்தன் இந்தியாவின் எல்லை பகுதியான வாகாவுக்கு வந்தடைந்தார்.
 

அபிநந்தனை போல இந்திய ராணுவ மற்றும் விமான படை வீரர்கள் 54 பேரை பிடித்து வைத்திருக்கிறது பாகிஸ்தான் ராணுவம். இவர்கள் காலங்கள் தாண்டி மறக்கப்பட்டவர்களாகவே இன்னும் இருக்கின்றனர். பாகிஸ்தான் பிடியில் இருப்பதாக சொல்லப்படும் இவர்கள்  ‘தி மிஸ்ஸிங் 54’ என்று அழைக்கப்படுகின்றனர்.
 

கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் 54 இந்திய வீரர்கள் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ, இந்திய வீரர்கள் சிறையில் இருப்பதை ஒப்புக்கொண்ட நிலையில் அவரின் பின் பதவிக்கு வந்த வேறு யாரும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூட்டோ ஒப்புக்கொண்டாலும் இன்றைய பாகிஸ்தான் அரசும் இதனை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. ஆனால், இந்திய அரசாங்கம் இந்த 54 பேரும் பாகிஸ்தான் சிறையில் உயிருடன் இருந்ததாகவே நம்பி வருகிறது.
 

1971ஆம் ஆண்டு போரின்போது இந்தியாவிடம் சரணடைந்த 90,000 பாகிஸ்தானிய வீரர்கள் அனைவரையும் போர்க் கைதிகளாக ஏற்றுக்கொண்டது இந்தியா. இதனையடுது 1972ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது அந்த உடன்படைக்கையில் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, பாக் அதிபர் ஜுல்ஃபிக்குர் அலி பூட்டோ ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். ஆனால், பாகிஸ்தான் பிடியில் இருந்த 54 பேரை பாக் அரசாங்கம் விடுதலையே செய்யவில்லை, அதற்கு பதிலாக, அவர்கள் எங்கள் பிடியில் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்தே வந்தது. இதன் பின் பாக் பிடியில் இருந்த 54 பேரின் குடும்பத்தாரும் ஐநா மற்றும் செஞ்சிலுவை சங்கத்தை அணுகிய போதிலும் அவ்விரு அமைப்புகளாலும் அவர்களுக்கு உதவ முடியவில்லை.
 

missing


1989ஆம் ஆண்டு வரை பாக் பிடியில் இருந்த இந்திய வீரர்கள் இருப்பதை அந்நாடு முற்றிலும் மறுத்தது. 1989 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சென்ற இந்திய அதிகாரிகளிடம் அப்போதைய பாக் பிரதமர் பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தானில் 54 இந்திய வீரர்கள் இருப்பதாக கூறினார். இதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம், இஸ்லாமாபாத்தில் பிரதமர் பெனாசிரை அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தபோது, போர்க் கைதிகள் விவகாரத்தை எழுப்பினார். அதற்கு பெனாசிர், இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துவதாக கூறினார். ஆனால், இதனையடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 

இதன் பின்னர் பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஷ் முஷரஃப் இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் இல்லை என்று மறுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் மீண்டும் பழைய நிலைப்பாட்டிற்கே போனது.

 

Next Story

வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Tamil Nadu Chief Minister congratulates Abhinandan on receiving Veer Chakra award

 

2019- ஆம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இராணுவ விமானங்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றன. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார். அதேநேரத்தில் பாகிஸ்தானின் எஃப் 16 விமானம் நடத்திய பதில் தாக்குதலினால் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையில் குதித்த அவரை பாகிஸ்தான் சிறைபிடித்தது. அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன் பின்னர் அபிநந்தனுக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

 

இந்தநிலையில், பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது இன்று (22/11/2021) வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை வழங்கினார்.

 

இந்நிலையில், வீர் சக்ரா விருதை பெற்ற அபிநந்தனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்' என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்து தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் வீர் சக்ரா விருது பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Next Story

"ராணுவத் தளபதிக்குக் கால்கள் நடுங்கிவிட்டன" - அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எதிர்க்கட்சித் தலைவர்...

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

pakistan leader about abinandhan release

 

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிபட்டபோது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சர்தார் அர்யாஸ் சித்திக் நினைவுகூர்ந்துள்ளார். 

 

பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அபிநந்தன் பாகிஸ்தானுக்குள் நுழைந்த சம்பவம் குறித்துப் பேசியுள்ள சர்தார் அர்யாஸ் சித்திக், "எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. இந்திய விங் கமாண்டர் அபிநந்தனைப் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து வைத்திருந்தது. அவரை விடுவிக்க இந்திய அரசு வலியுறுத்தி வந்தது. அதுகுறித்து முடிவு எடுக்க நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொள்ளவில்லை. நான் பங்கேற்றேன். என்னுடன் சேர்ந்து பல்வேறு அமைச்சர்கள், ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

 

அந்தக் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி, “பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ள இந்திய வீரர் அபிநந்தனை நாம் விடுவிக்காவிட்டால், இந்தியா நிச்சயம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும். அதுவும் இன்று இரவு 9 மணிக்கே இந்தியா போர் தொடுக்கலாம். எனவே அபிநந்தனை விடுவிப்பதுதான் சிறந்தது” என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராணுவத் தளபதி ஜாவித் பஜ்வாவின் கால்கள் பயத்தால் நடுங்கின, முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது" எனத் தெரிவித்தார். பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரின் இந்தப் பேச்சு தற்போது இந்தியாவில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.