Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ''நாளைய முதல்வர்'' பட்டம் கொடுத்தவர் கைது!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
vijaya baskar minister




கரோனா தொற்று பரவத் தொடங்குவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நலிவடைந்துள்ள மக்களுக்கு உணவு பொருள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். 


இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வினரும், 5 கிலோ அரிசி அடைக்கப்பட்ட பைகளில் தங்கள் கட்சித் தலைவர்கள் மற்றும் தங்கள் படங்களை அச்சிட்டு விளம்பரங்களோடு கொடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி பிரமுகர்கள் மூலம் முக கவசம் வழங்கி வரும் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது விராலிமலைத் தொகுதியில் நலிவடைந்தவர்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். அந்த பையில் முன்னாள் முதல்வர் ஜெ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் தனது படத்தையும் அச்சிட்டு மண்ணச்சநல்லூா் பொன்னி அரிசி வழங்கினார்.

இந்த நிகழ்வு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் ''நாளைய முதல்வர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்'' என்று அரிசி பையில் கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் செய்து வட்டமிட்டு காட்டிய விஜயபாஸ்கரின் அரிசி பைகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்ணில் படும் வரை பகிருங்கள் என்ற வாசகங்களுடன் பகிர்ந்திருந்தனர்.

 

 


இந்த செய்தியை நக்கீரன் இணையத்தில் முதன் முதலில் “அமைச்சர் விஜயபாஸ்கரை சுற்றிச் சுற்றி வரும் ''நாளைய முதல்வர் கிராபிக்ஸ் வாசகம்” என்ற தலைப்பில் மே 3ந் தேதி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி பல தரப்பிலும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. மேலும் பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுக்க நினைப்பவர்கள் ஏதோ சாதாரண பைகளில் அரிசியை வாங்கி கொடுத்துவிட்டு போகிறார்கள். ஆனால் அ.தி.மு.க வினர் மட்டும் சுய விளம்பரத்திற்காக முன்னாள் முதல்வர், முதல்வர், துணை முதல்வர் படங்களுடன் தங்களின் படங்களையும் அச்சிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். இந்த பை தயாரிக்க கொடுக்கப்படும் செலவில் பல ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வாங்கி கொடுத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் அதிகமாகவே உள்ளது.

 


இந்த நிலையில்தான் நாளைய முதல்வர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் என்ற வாசகம் சென்னை வரை எதிரொலித்த நிலையில், புதுக்கோட்டை அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப பிரிவு நகரச் செயலாளர் குணசீலன் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நாளைய முதல்வர் என்று மார்பிங் செய்யப்பட்ட வாசகத்தை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார். 
 

 

 

vijaya baskar minister



அந்த புகாரின் அடிப்படையில் விஜயபாஸ்கர் பெயரில் இயங்கும் சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு அரிசி கொடுக்கும் முன்பே விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட அரிசி பையில் அமைச்சர் விஜயபாஸ்கர் படத்திற்கு கீழே, பெயருக்கு மேலே நாளைய முதல்வர் என்று மார்பிங் செய்து வெளியிட்டது அ.ம.மு.க மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விழுப்புரம் முத்துக்குமார்தான் என்று புதுக்கோட்டை போலிசார் விழுப்புரம் சென்று முத்துக்குமாரை கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.