Skip to main content

என் மீது வழக்கு தொடர்ந்தால் சட்ட ரீதியாக சந்திக்கத் தயார்! திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

 


தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினோ வண்ணாரப்பேட்டையில் போலீஸார் வன்முறையில் இறங்கியதை கண்டித்து பேசினார். அதற்க்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரோ அந்த போராட்டத்தை தூண்டி விட்டதே லியோனிதான் குற்றம் சாட்டினார். அதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
.       
 

இந்த குற்றச்சாட்டு பற்றி கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணை தலைவரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனியிடம் கேட்டபோது, கடந்த  12ம் தேதி வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் தொடர்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான்தான்  தூண்டிவிட்டதாக அமைச்சர்  ஜெயக்குமாரின் குற்றச்சாட்டிற்கு முழமையாக மறுக்கிறேன்.


 

dindigul i leoni - minister D. Jayakumar




அந்த கூட்டத்தில் இந்துக்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் அருகருகே வேறுபாடின்றி அமர்ந்து இருந்தனர். இந்த மண்ணிலிருந்து இஸ்லாமியர்களை பிரிக்க முடியாது. இந்திய மண்ணோடு கலந்தவர்கள் இஸ்லாமியர்கள். இன்று பாரதப் பிரதமர் கொடியேற்றும் செங்கோட்டை உஸ்தாத் என்ற இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது.
 

மதசார்பின்மைக்கு ஆதரவாகுவும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் நடத்தப்படுகின்ற போராட்டம் குறிப்பிட்ட சமூகத்தை தூண்டிவிட்டு நடத்துகிற போராட்டம் அல்ல. தூண்டிவிடுவதே பாரதிய ஜனதா தான். மோசமான பொருளாதாரம், வேலையின்மை, விலை உயர்வு இதிலிருந்து திசை திருப்புவதற்கு, இந்த குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி இன்றைக்கு இந்தியா முழுவதும் போராட்டம் நடப்பதற்கு பாஜக தான் காரணம்.
 


பாஜகவின் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்தது அதிமுக தான். இது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் செய்த மிகப்பெரிய துரோம். அந்த துரோகத்தை கண்டித்து தான் 12ம் தேதி நடைபெற்ற வண்ணாரப்பேட்டை கூட்டத்தில் பேசினேன். அதனால் இது போராட்டத்தை தூண்டிவிடுவது இல்லை. அன்று நடந்தது தன்னெழுச்சியாக நடந்த போராட்டம். அமைச்சர்  ஜெயக்குமார் எப்பொழுதுமே ஒரு விஷயத்தை சுலபமாக திசை திருப்பி விடுவார். 
 


வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் பெண்கள் மீதெல்லாம் காவல் துறை தாக்குதல் நடத்தியது பற்றி கேட்டதற்கு, காவல் துறை மீது என்ன தவறு நடந்தது என்று அதற்கு பதில் சொல்லாமல், தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்  ஐ. லியோனி கூட்டத்தில் பேசினதுனாலதான் இந்த போராட்டமே தூண்டி விடப்பட்டது என்ற தவறான தகவலை பதிவு செய்திருக்கிறார். இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். 


 

 

அமைச்சர்  ஜெயக்குமார் எந்த பிரச்சினைக்கும் இது மாதிரிதான் பதில் சொல்வார். உதாரணத்திற்கு ஜெயஸ்ரீ என்ற பெண் மீது பேனர் விழுந்து இறந்த சமயத்தில்  இந்த இடத்தில் அந்த பெண் கிராஸ் பண்ணுச்சு அதனால் தான் விழுந்துச்சு. இந்த மாரி தான் எல்லா நேரத்தில் பதில் சொல்லுவார். அது மாதிரி இந்தியா முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடந்துக்கிட்டு இருக்கு. பல்கலை கழகத்தில் போலீசார் மாறுவேடம், முகமுடி அணிந்து போய் தாக்கியிருக்கிறார்கள் என்பது  நேரடியாக நிருபிக்கப்பட்டிருக்குது. 

 

இப்படி இந்தியா முழுவதும் நடந்துகிட்டு இருக்கிற போராட்டத்தை சென்னை வண்ணாரப்பேட்டையில லியோனி கூட்டத்தில் பேசி தூண்டிவிட்டதாக பேசி திசை திருப்புகிற செயல் வேற எதுவும் இருக்காது. ஜெயலலிதா அம்மையார் உயிரோடு முதல்வாரக இருந்தபோது, அமைச்சர்  ஜெயக்குமார் வாய் திறந்து ஒருநாளும் பேசினதே கிடையாது. அந்த அம்மையார் இறந்த பிறகுதான் ஒரு நாளைக்கு மூன்று  தடவ பேட்டி கொடுக்கிறார். எல்லாத்துக்கும் பதில் சொல்லிக்கிட்டு இருக்கார். 

 

பாறைக்கு அடியில் இருக்கிற தவளை, வெயில் காலத்தில அதுபாட்டுக்கு இருக்கும், அது இருக்கிற இடமே தெரியாது. லேசா மழை பெஞ்சதுமே தவளை மேல ஈரம் பட்டுவிடும். பட்டவுடனே சத்தம் கொடுக்க ஆரம்பச்சிடும். அந்த சத்தத்தை எல்லாமே கேட்டிருப்போம், தவளை சத்தத்தை கேட்டு பக்கத்தில இருக்க பாம்பு பார்க்கும் இவளோ நாள் இங்கதான் இருந்தியானு சொல்லி லபக்குன்னு தவளையை கவ்விடும். அமைச்சர்  ஜெயக்குமாருக்கு இந்த உதாரணத்தைதான் சொல்லுவேன்.


ஜெயலலிதா அம்மையார் இருக்கும்போது வாயே திறக்கதாத நீங்க, இப்ப ஆட்சி அதிகாரம் என்ற ஈரம் பட்ட உடன் தவளை மாதிரி பேசிட்டே இருக்கீங்க. ஜனநாயகம் என்கிற பாம்பு உங்களை கவ்வ ரொம்ப நாளாகாது. வண்ணாரப்பேட்டையில் மத ஒற்றுமைக்காவும், மத சார்பிண்மைக்காவுதான் கூட்டத்தில் பேசுனேன். மூன்று மத பாடல்களையும் பாடி காண்பித்தேன். பாரதிய ஜனதா இப்போது தனிப்படுத்தி, இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தி திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதுதான் குடியுரிமை திருத்தச்சட்டம். இதனை இஸ்லாமியர்கள் அமைதியாக ஜனநாயகப்படி போராடி வருகிறார்கள். எந்த இடத்திலும் ஒரு அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. 
 

15ம் தேதி ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டர்கள். அதில் 10 ஆயிரம் பேர்கள் வரை இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மணி நேரம் பேசினேன். அப்போது ஒரு விசில் சத்தம் கூட இல்லை. ஏனா கையில் தேசிய கொடியை வைத்திருந்தார்கள். அப்படியொரு ஜனநாயக பூர்வமாக நடந்து கொண்டார்கள்.
 

வண்ணாரப்பேட்டையில் நடந்தது கொடுரா ஜனநாயக தாக்குதல் அதற்கு பதில் சொல்லறதுக்கு வழியில்லாமல், திண்டுக்கல் லியோனி மீது பழியைப் போட்டு தூண்டிவிட்டதா சொல்கிறார். கூட்டத்தில் நான் பேசியது, பாபர் மசூதி தீர்ப்பு வந்த சமயத்தில், அகில இந்திய ஜமாத்திலிருந்து இந்தியாவிலிருக்க கூடிய அனைத்து இஸ்லாமிய தலைவர்களும் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்றனர். அவர்கள் ஏற்றுக்கொண்டது இந்திய இறையான்மைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நாங்கள் வேறு இடத்தில் கூட பாபர் மசூதியை அமைத்துக் கொள்வோம் என்று சொன்னார்கள். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெரிய அளவில் கிளர்ச்சி ஏற்பட்டு போராட்டத்தை நடத்த என்ன காரணம். நாங்கள் மசூதியை நேசிப்பதை விட இந்த மண்ணை நேசிக்கிறோம். மார்க்கத்தை விட இந்த மண் தான் முக்கியம். இந்தியாவிடம் இருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது என்று நாட்டு பற்றுடன் இஸ்லாமியர்கள் நடத்துகின்ற மதச்சார்பிண்மைக்கு ஆதரவான போராட்டம்.
 

இந்த போராட்டமானது இஸ்லாமியர்கள் மட்டும் நடத்த வேண்டிய போராட்டம் அல்ல. இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டிய போராட்டம். மூன்று இஸ்லாமியர்கள் குடியரசு தலைவர்களாக இந்தியாவை அலங்கரிச்சு இருக்காங்கனா இந்தியாவிடமிருந்து அவர்களை யாரும் பிரித்து விட முடியாது. இந்த கருத்தை வலியுறுத்தி தான் கூட்டத்தில் பேசினேன். 


காந்தியின் சுதந்திர போராட்டம் எப்படி வெற்றி பெற்றதோ, அண்ணாவின் மொழி போராட்டம் எப்பட வெற்றி பெற்றதோ, அது போல் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான, மதசார்பிண்மைக்கு ஆதரவான இந்த போராட்டம் வெற்றி பெறும் என்ற அந்த கூட்டத்தில் பேசினேன். இதுல வந்து நான் தூண்டிவிருறதுக்கு ஒன்னுமே இல்லை. 
 

 

இந்தியாவின் மத ஒற்றுமையை பாதுகாப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகம் எடுத்திருக்கிற கையெழுத்து இயக்கம் எப்படி வெற்றிகரமாக நடந்தது என்கிறதையும் கூட்டத்தில் பேசினேன். இதனை காரணம் காட்டி அமைச்சர் ஜெயக்குமார், தங்களது தவறுகளை மறைப்பதற்கு இதனை பயன்படுத்திருக்கார். இதை தமிழக மக்கள் நல்ல உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள். நான் வண்ணாரப்போட்டை கூட்டத்தில் பேசியதை யூடியுப் வழியாக ஒரே நாளில் நாலரை லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். மக்கள் நியாயம் என்று ஏற்றுக் கொண்ட இந்த கருத்து,  ஜெயக்குமாருக்கு மட்டும் தூண்டிவிடுவதாக தெரிகிறது.
 

இதிலிருந்து அவர்கள் செய்யும் தவறுகளை மறைக்கு செய்யும் முயற்சி என்று தெரிகிறது. அதனால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது போன்ற திசை திருப்பிற முயற்சியில் ஈடுபட வேண்டாம்.  இந்த குடியுரிமை சட்டம் அமல் படுத்தியதிலிருந்தே இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நான் தூண்டியதாக சொல்வது பொய்யான குற்றச்சாட்டு. அதோடு வன்முறையை  தூண்டுபவர்கள் மேல் வழக்கு தொடர்வோம் என்று  கூறியிருக்கிறார்கள். அப்படி என் மீது வழக்கு தொடர்ந்தாலும் அதை  சட்டரீதியாக சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார். 




 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...

Next Story

“பா.ஜ.கவினருக்கு எதையும் நேரடியாக சொல்லும் பழக்கம் கிடையாது” - மாணிக்கம் தாகூர்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Congress candidate Manikam Tagore says What does Nirmala Sitharaman know in interview for loksabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 10 தொகுதியில் ஒன்றான விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி பின்வருமாறு...

காங்கிரஸ்காரர்கள் பா.ஜ.கவை பற்றி மக்களிடத்தில் ஒரு பொய்யான பயத்தை உருவாக்குகிறார்கள் என்று பிரதமர் மோடி சொல்கிறாரே?

“திருடப் போகிறவர்களை பிடித்தால் அவர்களிடம் எந்த மாதிரியான பதற்றம் உருவாகுமோ அந்த மாதிரியான பதற்றம் தான் மோடியிடம் இருக்கிறது. குஜராத் மாநிலத்திற்கு சென்றால் அங்கு சிறுபான்மையினர் மக்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 25 வருடமாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம்பி கூட அங்கு கிடையாது. அங்கு 9 சதவீத சிறுபான்மையின மக்கள் இருக்கிறார்கள். ஒரு அமைச்சர் கூட இல்லாமல், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் ஒரு கட்சி நடத்த முடியுமா?.ஆனால் அங்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரையில் இதனைத் தொழிலாக வைத்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் இதை அவர்களுடைய கொள்கையாக வைத்திருக்கிறது. சிறுபான்மை மக்களை ஓரங்கட்டி, அவர்களை நிராயுதபாணியாக ஆக்க வேண்டும், அவர்களை கேவலப்படுத்த வேண்டும், அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும். இதுதான் பா.ஜ.க.வின் வேலை”.

தென்மாநிலங்களில் வெற்றி பெறும் காங்கிரஸ் கூட்டணி வட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஏன் வெற்றி பெற முடியவில்லை?

“காங்கிரஸினுடைய மொத்த அரசியலுமே ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. ஆனால் பாஜக, ஆங்கிலயேர்களுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் எல்லாம் முகலாய படையெடுப்புகளை மையமாக வைத்து தான் அவர்களுடைய அரசியல் இருந்திருக்கிறது.  வட மாநிலங்களில் ஆங்கிலேயர்கள், இந்து - முஸ்லிம்  மக்கள் இடையே பல காலமாக விரிசலை கொண்டு வந்தார்கள். இந்து - முஸ்லிம் கலவரங்கள் நிறைய நடந்திருக்கிறது. இதனை மையப்படுத்தி தான் பா.ஜ.க.வும் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து வருகிறது.

100 வருடத்திற்கு முன்பாக இந்து மக்களை மையப்படுத்தி தான் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து வந்தது. அதற்கேற்றார் போல் இந்தியா- பாகிஸ்தான் பிரிகிறது. அப்பொழுது இங்கு இருக்கக்கூடிய இந்து மக்கள் அகதிகளாக அங்கு செல்கிறார்கள். அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள் இங்கு அகதிகளாக வருகிறார்கள். இந்த அரசியல் களம் அவர்களுக்கு நல்ல களமாக அமைந்துவிட்டது.

ஆனாலும் 1947 இல் இருந்து 1967 வரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியில் நடந்த உட்கட்சி பூசலால் அங்கிருந்த முக்கிய தலைவர்கள் அங்கிருந்து பிரிந்து புதிதாக கட்சி தொடங்கினர். அந்தக் கட்சியோடு சேர்ந்து ஜன சங்கம் என்ற கட்சியை ஆர்.எஸ்.எஸ் தொடங்கி உள்ளே நுழைந்து ஆட்சி அமைத்து எழுபதுகளில் முதல் தடவையாக பாஜக அரசியலில் வருகிறது. அரசாங்கத்தில் அவர்கள் நுழைந்தவுடன் அனைத்தையும் கண்ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை பொருத்தவரை மாநிலக் கல்வி துறைகளில் மிகப்பெரிய ஊடுறவுகள் வந்திருக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதி வந்திருக்கிறார்கள். வரலாற்றை மாற்றுவதை அவர்கள் பலகாலமாக முயற்சி செய்து வருகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, திருவள்ளுவருக்கு திடீரென்று காவி கலரை போட்டுவிட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, வரலாற்றை திரித்து சொல்வது தான். அவர்கள் வடமாநிலங்களில் மத துவேசத்தை நார்மல் செய்து விட்டார்கள். பாஜக காரனுக்கும் ஆர்.எஸ்.எஸ் காரணுக்கும் என்றைக்குமே அவர்களுடைய கருத்தை நேரடியாக சொல்கிற பழக்கமே கிடையாது. எடப்பாடி பழனிசாமி மூலமாகவோ, ஜெயலலிதா மூலமாகவோ தான் வருவார்கள். மற்றவர்களின் தோளில் ஏறி நான் நல்லவன் என்ற கதையைச் சொல்லிதான் வருகிறார்கள்”.

காங்கிரஸ் செய்த தவறுகளை 10 வருடத்தில் நாங்கள் சரி செய்து விட்டோம் என்று கூறுகிறார்களே? 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம் என்றும் கூறுகிறார்களே?

“ஒரு சிலரை மட்டும் பணக்காரர்களாக்கி மொத்த ஊர்களையும் ஏழ்மையாக்கி வைத்திருக்கிறார்களே. கடந்த வருட டேட்டாவை எடுத்துப் பார்த்தால் 62% வேலையாக கொண்டாட்டம் இந்தியாவில் இருக்கிறது என்று கூறுகிறது. இதற்கு யார் காரணம்? அதானியையும், அம்பானியையும் மட்டும் பணக்காரர்களாக உருவாக்கி இந்தியா வளர்ச்சி அடைந்து விட்டது என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை”.

வளர்ச்சி.., வளர்ச்சி...,வேண்டும் மீண்டும் மோடி என்று சொல்லி பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் இந்த மாதிரியான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது?

“அவர்கள் சொல்கிற வளர்ச்சி, அதானியுனுடைய வளர்ச்சியை மட்டும்தான் அவர்கள் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி அதானி, வளர்ச்சி அம்பானி என்பதுதான் அவர்களது உண்மையான கொள்கை. விவசாயிகள் பிரச்சனையில் இருக்கிறார்கள். விவசாயிகளின் நிலைமை மிகவும் கொடுமையாக இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் தலை விரித்து ஆடுகிறது. சிறுகுறு தொழில்கள் ஜிஎஸ்டி வரியினால் அழிந்து போய்விட்டது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து”.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பும், பின்பும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து தி.மு.க.வையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? களம் எப்படி இருக்கிறது?

“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல தேர்தல் வரும் முன்னே மோடி வருவார் பின்னே என்ற கதைதான். எப்போது தேர்தல் வருமோ, அப்போது தமிழ்நாட்டுக்கு ஓடி வருவார். வந்து வாயில் வடை சுடுவார்.  அனைத்து கதையும் சொல்லிவிட்டு போய்விடுவார். சென்னை வெள்ளம் வந்த போதும் தென்மாநிலங்களில் நிகழ்ந்த வெள்ளத்தின் போதும் என்ன செய்தார்? முதலில் அவர் காது கொடுத்து கேட்டாரா?. அந்தச் சமயத்தில் நிதியமைச்சரை அனுப்புகிறார்கள். நிதியமைச்சருக்கு என்ன தெரியும், பாவம். நிர்மலா சீதாராமனை பார்த்தால் பாவமாக தெரிகிறது” என்று கூறினார்.