Skip to main content

முதல்வர் குரலில் மிமிக்ரி! லட்சங்களை சுருட்டிய திமுக பிரமுகர்! 

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

Mimicry in the Chief Minister's voice! DMK member who rolled millions!
நாகராஜன்

 

சேலம் உடையாப்பட்டி பாலமுருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர், மார்ச் 21-ஆம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தனது தாயார் ஆனந்தி, மனைவி சாந்தி மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் திடீரென்று தீக்குளிக்க முயன்றார்.

 

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், இதைப் பார்த்து அதிர்ந்துபோய், அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த... விசாரணையில் இறங்கினோம்.

 

இது குறித்து அந்த நாகராஜனிடமே நாம் கேட்டபோது, "சேலம் அம்மாபேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறேன். அயோத்தியாபட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் சிலருக்கு சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி 67 லட்சம் ரூபாய் வரை வசூலித்தார். அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்ததாகவும், அதைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு எனக்கும், குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கிறார். அவர் என்னிடம் எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றேன்'' என்றார் நிதானமாக.

 

Mimicry in the Chief Minister's voice! DMK member who rolled millions!

 

இது குறித்து காவல்துறையின் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தபோது, ''ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமாரிடம், இந்த நாகராஜன் கார் ஓட்டுநராக இருந்தார். கிட்டத்தட்ட வலதுகரம் போல செயல்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, மிமிக்ரி ஆர்டிஸ்டை வைத்து, விஜயகுமாரின் செல்போனுக்கு தளபதி ஸ்டாலின் குரலில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு தொப்பி, டீஷர்ட், கரை வேட்டி, சேலைகள், பேட்ஜ்கள் வாங்கித் தர வேண்டும் என்றும் அதற்கான செலவுகளைப் பார்த்துக் கொள்ளுமாறும் பேசியுள்ளார். தளபதியே சொன்ன பிறகு தட்ட முடியுமா? அதனால் மேலே சொன்ன செலவுகளுக்காக 67 லட்ச ரூபாயை ஏற்பாடு செய்து, நாகராஜனிடம் கொடுத்து, அந்த வேலைகளை ஒப்படைத்திருக்கிறார் விஜயகுமார். பின்னர்தான் இது நாகராஜன் நடத்திய நாடகம் என்பது விஜயகுமாருக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் தனது பணத்தைக் கேட்டு நாகராஜனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்'' என்றவர்கள்,

 

"மோசடி செய்வதில் நாகராஜன் ஜெகஜ்ஜால கில்லாடி. பலரையும் பல வகையிலும் ஏமாற்றி பல லட்ச ரூபாய் வரை சுருட்டி இருக்கிறார். இதன்மூலம் சொந்தமாக மூன்று டாரஸ் லாரிகளை வைத்திருக்கிறார். அந்த லாரிகளில் குட்கா, கஞ்சா கடத்தி வந்து உள்ளூரில் விற்பனை செய்வதாகவும் தெரிகிறது. பணம் கொடுத்தவர்கள் அதைக்கேட்டால் தற்கொலை நாடகம் போடுவார். ஏற்கனவே, இரண்டுமுறை இப்படி தற்கொலை நாடகம் நடத்தியிருக்கிறார்'' என்று நம்மை அதிரவைத்தார்கள்.

 

இது குறித்து அயோத்தியாபட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, ''கட்சிப் பெயரைச் சொல்லி என்னிடம் பணம் மோசடி செய்தது நாகராஜன்தான். அவர் எந்த வகையில் ஏமாற்றினார் என்று சொல்ல விரும்பவில்லை. அவர் நடத்தி வந்த பேக்கரி கடையை என்னிடம் விற்பதாகச் சொன்னார். நானும் பேக்கரியைவாங்க ஒப்புக்கொண்டு, அதற்குரிய தொகையான 67 லட்சம் ரூபாயை செட்டில்மெண்ட் செய்தேன். இடத்திற்கான ஆவணங்களை சரிபார்த்தபோது, அந்த இடத்தின் உரிமையாளர் நாகராஜன் இல்லை என்பதும், தி.மு.க. பிரமுகர் செல்வமணி என்பவர் பெயரில் இருப்பதும் தெரிய வந்தது.

 

அதனால், நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டேன். ஆனால் என்னை ஏமாற்றும் நோக்கத்துடன், என் மீதே பொய்யான புகாரைச் சொல்லி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடுகிறார். நாகராஜன் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டதற்கான "புரோ நோட்டு' உள்ளிட்ட எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. அரசியலை வைத்து நான் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் நாகராஜனின் பொய்யான புகாரால் எங்கள் குடும்பமே நிம்மதி இழந்து தவிக்கிறோம்'' என உடைந்த குரலில் சொன்னார்.

 

நாகராஜன் நடத்தி வந்த பேக்கரி கட்டடத்தின் உரிமையாளரான செல்வமணியோ ''என்னுடைய கட்டடத்தில்தான் அவர் பேக்கரி கடையும், கார் சர்வீஸ் ஸ்டேஷனும் நடத்தி வந்தார். இதற்கே அவர் இன்னும் 2.50 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருக்கிறார். எனக்குச் சொந்தமான ஒரு ஜீப், ஒரு சுமோ கார் ஆகியவற்றை சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என்று கூறி வாங்கிச் சென்று, அதை அடகு வைத்து 9 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டார்'' என்றார்.


"அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அறிவாலயத்தில் உள்ள "ஜெயமான' ஒருவர், ஐபேக் டீம் ஆட்கள் சிலருடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக சக கட்சியினரையே நாகராஜன் நம்ப வைத்திருக்கிறார். இந்த வலையில் அயோத்தியாபட்டணம் விஜயகுமாரும் வீழ்ந்ததுதான் ஆச்சரியம்'' என்கிறார்கள் கட்சியினர்.

 

Mimicry in the Chief Minister's voice! DMK member who rolled millions!
கணேசன்


இதற்கிடையே, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக நாகராஜனை சஸ்பெண்ட் செய்திருக்கிறது தி.மு.க. இந்த வழக்கை விசாரித்து வரும் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசனிடம் கேட்டபோது, "விஜயகுமார் மிரட்டியதாக நாகராஜனிடம் இருந்து இன்னும் எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. விஜயகுமார் உள்ளிட்ட சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீதுதான் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து உதவி கமிஷனர் நேரடியாக விசாரித்து வருகிறார்'' என்றார்.


தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குரலிலேயே மிமிக்ரி செய்து, அக்கட்சியின் ஒன்றியச் செயலாளரிடமே பணம் சுருட்டப்பட்ட விவகாரத்தால், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வே பரபரத்துக் கிடக்கிறது.
 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.