Skip to main content

"பன்னீர்செல்வத்தின் ஆர்எஸ்எஸ் பின்னணி... எடப்பாடி பழனிசாமியின் சசிகலா எதிர்ப்பு.." - கொதிக்கும் எம்ஜிஆர் வல்லரசு!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

jkl

 

அதிமுக பொதுக்கூட்டங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ அங்கு யாராவது ஒருவர் எம்ஜிஆர் வேஷம் போட்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் எம்ஜிஆர் வேஷம் போட்டிருப்பதை நம்மால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அசல் எம்ஜிஆரை போலவே வேஷம் போட்டு கட்சிக்காரர்களை ஆச்சரியப்படுத்துபவர் எம்ஜிஆர் வல்லரசு. அவரிடம், "உங்களைப் பார்த்தால் எம்ஜிஆர் வேஷம் போட்ட மாதிரி தெரியவில்லை, எம்ஜிஆர் நேரில் அமர்ந்திருப்பதைப் போல் எம்ஜிஆர் மாதிரியே இருக்கிறீர்களே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உங்களின் அரசியல் என்னவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இருவரையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்ற நம்முடைய தொடர் கேள்விக்கு, அவரின் அதிரடியான பதில் வருமாறு,  

 

"நாங்கள் எல்லாம் எம்ஜிஆரின் தீவிர விஸ்வாசிகள். அப்படித்தான் எப்போதும் இருந்துவருகிறோம். அவரை பார்த்து அரசியலுக்கு நாங்கள் வந்தோம். எனவே அவரின் சாயல் எங்கள் உள்ளத்தில் எப்போதும் இருக்கும். அம்மாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் யாரும் இவர்கள் இருவரையும் ஆதரிக்கவில்லை. தீபா அவர்களை ஆதரித்தோம். தமிழ்நாடு முழுவதும் அவரை ஆதரித்து சுற்றுப்பயணம் செய்தோம். எம்ஜிஆர் வல்லரசு என்றால் அனைவருக்கும் தெரியும். நான் உண்மையை மட்டும்தான் கூறுகிறேன். பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் உடையவர், பிஜேபியை ஆதரிப்பவர். கை முழுவதும் தாயத்து கட்டுபவர். இதுதான் திராவிட சித்தாந்தமா? எம்.ஜி.ஆர். கோயிலுக்குப் போயிருக்கிறார். தன் மனைவிக்காகப் போயுள்ளார். 

 

இவர்களைப் போல் அவர் எப்போதும் இல்லை. சசிகலா அவர்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்தால், அவர் கிணற்றில் போட்ட கல் போன்று இருக்கிறார். இவர்கள் இருவரும் பால் போட்டால் நீங்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நீங்கள் தொடர்ந்து அவுட்டானால் என்ன செய்ய முடியும். மிக நீண்ட மவுனத்தில் அவர்கள் இருக்கிறார்கள். சட்டப் போராட்டத்தில் அவர்கள் எப்போது வெற்றிபெறுவார்கள் என்ற உத்தரவாதம் இருக்கிறதா? எம்.ஜி.ஆர். மன்றங்கள் என்ற ஒன்று முன்பொரு காலத்தில் மிக வலிமையாக இருந்தது. அதை அம்மா அவர்கள் டிஸ்மேன்டில் செய்தார்கள். பார்ட் பார்ட்டாகப் பிரித்தார்கள். அதை தற்போது சரி செய்துவருகிறோம். மன்றங்களைச் சேர்ந்தவர்களை அண்ணன் கே.சி.பி., ஓம்பொடியார், நான் உள்ளிட்டவர்கள் இணைத்துவருகிறோம். கட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் அண்ணன் ஓம்பொடியாருக்கு நடந்த நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள். அவரை அடித்தது என்பது கடைக்கோடி தொண்டனை, எம்ஜிஆரை அடித்ததற்கு சமம். கடைக்கோடி தொண்டனும் அதிமுக தலைவராகலாம் என்று முதலில் கூறியது யார், எடப்பாடி பழனிசாமி. கொடி பிடிக்கும் தொண்டனும் கோட்டைக்குப் போகலாம் என்று கூறியவர் அவர்தானே. இன்றைக்கு கோட்டைக்கு அல்ல, கட்சி அலுவலகத்துக்குச் செல்லக் கூட அவர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை. 

 

கேட்டால் உறுப்பினர் அட்டை வைத்துள்ளீர்களா என்று கேட்கிறார்கள். உங்களிடம் உறுப்பினர் கார்டை வாங்கினால், அவர்கள் உங்களிடம் சரண்டர் என்று அர்த்தம் வந்துவிடாதா? உங்களைத்தான் எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என்று சொல்கிறார்களே! உங்களின் தலைமையைத்தான் அவர்கள் ஏற்க மறுக்கிறார்களே! உங்களின் வள்ளல்தன்மை தெரிந்துதான் உங்களை சொல்லக் கூடாத வார்த்தைகளை எல்லாம் கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் பேசுகிறார்களே! இதை எதிர்த்து இதுவரை யாராவது பேசியிருக்கிறார்களா? இவர்களால் எதையும் செய்ய முடியாது, எதிர்த்து யாரையும் கேள்வி கேட்க முடியாது. எங்களைப் பார்த்து நாய்கள் என்று கூறுகிறார்கள், கடைக்கோடி தொண்டனைப் பார்த்து திண்டுக்கல் சீனிவாசன் நாய் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். இன்றைக்கு டாஸ் வைத்து நிர்வாகிகளைத் தூக்குகிறார்கள். புதிய நிர்வாகிகள் எல்லாம் சங்கிகளாகத்தான் இருப்பார்கள். நீங்கள் பொருத்திருந்து பாருங்கள், இவர்கள் எல்லாம் எப்போதும் அதிமுகவை கரை சேர்க்கப்போவதில்லை, வெறும் வாய்ச்சவடால் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. தொண்டன் அவர்களைப் பார்த்துக்கொள்வான்" என்றார் கொதிப்புடன்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.