Skip to main content

ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்ததை நினைத்து எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார்! - அதிமுக முன்னாள் எம்எல்ஏ சவுந்தரராஜன்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

hj


தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின் முதல்வராக நேற்று பொறுப்பேற்ற நிலையில், அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில், அதிமுகவின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கேள்விகளுக்கு அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜனிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது இருந்த அதிமுகவையும், தற்போது இருக்கின்ற அதிமுகவையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? 


எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக என்பது அண்ணாவின் கொள்கைகளை அப்படியே தாங்கி உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். அதனால், தான் அண்ணாவின் அரசியலை எம்ஜிஆர் தொடர்ந்து கொடுத்துவந்தார். இன்னும் சொல்லப்போனால் அண்ணா என்ன நினைத்தாரோ அதைச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அண்ணாவின் பெயரையே தன்னுடைய கட்சிக்கு அவர் வைத்தார். அண்ணாவின் படத்தைக் கொடியில் வைத்து மரியாதை செய்தார். எம்ஜிஆர் இருந்த வரையில் அதிமுக சரியாக இருந்தது என்றாலும் ஜெயலலிதாவின் வருகைக்குப் பிறகு அதிமுக சிறிது மாற ஆரம்பித்தது. இதனால் அப்போது நான் எம்ஜிஆரிடம் சென்று சண்டையிட்டேன். உங்களுக்குத் திரைத்துறையில் எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாம் அண்ணா, பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துகிறோம். அதில், நமது கொள்கைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒரு ஆளை இங்கே கொண்டு வருவது மிகவும் தவறு, அது நம் கட்சியையே சீரழித்துவிடும் என்று கூறினேன். 


இதற்கு எம்ஜிஆரின் பதில் என்னவாக இருந்தது, நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டாரா? 
 

இதற்குப் பதில் சொல்லக்கூடிய மன நிலையில் அவர் இல்லை. அவர் ஒரு மயக்கத்தில் இருந்தார், என்னிடம் வாதாட அவர் விரும்பவில்லை. நான் கேட்கும் கேள்விகள் எல்லாம் நிஜமானது. இந்த இயக்கம் ஆரம்பிக்கும் போது எம்ஜிஆர் என்னை அழைத்து 10 மணி நேரம் பேசினார். அவருடைய வரலாறு, திமுக செய்கின்ற தவறுகள், அண்ணாவின் எண்ணங்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை நேருக்கு நேராக என்னிடம் பேசினார். இதை ஜெயலலிதா வருகைக்குப் பிறகு நான் அவரிடம் எடுத்துச் சொன்னேன். என்னிடம் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு எவ்வளவோ எடுத்துக் கூறிவிட்டு, தற்போது இவர்களைக் கட்சியில் கொண்டு வருகிறீர்களே என்றேன். அவரிடம் பதில் இல்லை. பின்னாளில் உங்கள் புகழுக்குக் கூட களங்கம் வரும், நீங்கள் வருத்தப்படக் கூடும் என்றேன். ஆனால் அதனால் அப்போது எந்தப் பயனுமில்லை. 


பின்னாளில் எம்ஜிஆர் இது குறித்து உங்களிடம் வருத்தப்பட்டது உண்டா?


நிறைய வருத்தப்பட்டிருக்கார். நக்கீரன் பதிப்பகத்தில் வெளிவந்த 'வணக்கம்' புத்தகத்தில் எம்ஜிஆர் இதனால் அழுதிருக்கிறார் என்று வலம்புரி ஜான் பதிவு செய்திருக்கிறார். அதுவும் 1984ம் ஆண்டு ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கிய பிறகு எம்ஜிஆரை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தினார் அந்த அம்மையார். எம்ஜிஆர் எதற்காக அந்த அம்மையாரை கட்சிக்குக் கொண்டு வந்தாரோ அது 84ம் ஆண்டுக்குப் பிறகு நிறைவேறவில்லை. அதனால் பின்னாளில் அவர் வருந்தியிருக்கிறார், அழுதிருக்கிறார். இது எல்லாம் நடந்தது என்பது மட்டும் உண்மை. 

 

2021 தேர்தலுக்கு முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினீர்கள். அதில் அதிமுக பாஜக கூட்டணி வைக்கக் கூடாது, அப்படி அமைந்தால் அது தற்கொலைக்குச் சமம் என்று தெரிவித்திருந்தீர்கள். தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 

நான் என்ன சொன்னேனோ அதுதான் தற்போது நடைபெற்றுள்ளது. அதனை பன்னீர்செல்வம், எடப்பாடி இருவரும் தற்போது உணர்கிறார்கள். அதைத்தான் நான் முன்கூட்டியே சொல்லியிருக்கிறேன். ஆகையால் அதிமுகவுக்கு பாஜகவால் அழிவு என்பதுதான் தற்போது ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி போவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பாஜக கூட்டணி என்பது மிக முக்கியக் காரணமாக அமைந்தது. தமிழக மக்களுக்கு மன்னித்து விடும் மனநிலை உண்டு. ஆனால் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்கள் நம்மை அழித்துவிடுவார்கள் என்று நினைத்ததால், இந்த தோல்வி அதிமுகவுக்கு வந்து சேர்ந்துள்ளது. 


 


 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.