Skip to main content

மெரினாவில் சிறப்பு பாதை! இது நிரந்தரமாக அமையுமா?(படங்கள்)

Published on 04/12/2019 | Edited on 04/12/2019
m

 

சென்னை மெரினா கடற்கரை மணலில் நடந்து அலையில் கால்வைப்பது என்பது முதியோர்களுக்கும், மாற்றுதிறனாளிகளுக்கும் ஒரு சவாலாகவே இருக்கிறது.  சாதாரணமானவர்கள் மணலில் நடப்பது என்பதே சிரமமாகத்தான் இருக்கிறது. இதில், மாற்றுத்திறனாளிகள் அந்த மணலில் வண்டியை ஓட்டிச்செல்ல முடியாது.

 

m

 

இந்நிலையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அலையில் நனைந்து மகிழ சில தன்னார்வ அமைப்புகள் உதவின.  கடற்கரை மணலில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக மணலில் சிறப்பு பாதை உருவாக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு அமைப்பினர் சர்க்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளிகளை அமரவைத்து அலையின் அருகே அழைத்து சென்றனர்.   பாதை ஏதுவாக இருந்ததால் முதியோர்களும் இதில் நடந்து சென்று கடல் அலையில் நனைந்து மகிழ்ந்தனர்.   

 

m

 

தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பாதை நிரந்தர பாதையாக அமைந்தால் முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் எல்லாக்காலங்களிலும் இங்கு வந்து போக ஏதுவாக இருக்கும்.  சென்னை மாநகராட்சியும், தன்னார்வ அமைப்புகளும் இதை கவனித்தில் கொண்டு அதற்காக நடவடிக்கை எடுத்தால் நல்லது என்று எதிர்பார்க்கிறார்கள் மெரினா ஆர்வலர்கள்.

 

mmmmmm

 

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினாவில் சீறிப் பாய்ந்த சொகுசு கார்கள்! மடக்கி பிடித்த போலீஸ் 

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

Luxury cars in the marina! The police who got wrapped up

 

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டதாக அதிநவீன சொகுசு கார்களை சென்னை போக்குவரத்து போலீஸார் பிடித்து அபராதம் விதித்தனர்.  

 

சென்னையைச் சேர்ந்த தனியார் கார் பராமரிப்பு நிறுவனம் தனது நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சிக்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்த சொகுசு கார்களை சென்னைக்கு எடுத்துவந்தது. அந்த கார்களின் அணிவகுப்பு இன்று காலை சென்னை ஈ.சி.ஆரில் நடந்தது முடிந்தது. அதன்பிறகு அதில் ஆறு சொகுசு கார்கள், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சீறிப் பாய்ந்தன. இதனைக் கண்ட காமராஜர் சாலையில் போக்குவரத்து கண்காணிப்பில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தி பிறகு அனைத்து கார்களுக்கும் அபராதம் விதித்தனர். 

 

பிடிப்பட்ட கார்களை காவல்துறையினர் காமராஜர் சாலையில் வரிசையாக நிறுத்தி வைத்தனர். இதனைக் கண்டு அங்கிருந்த மக்கள் அந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

 

 

Next Story

பரவிய வதந்தி... மெரினாவில் போலீசார் குவிப்பு!

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

Re-mortem of the student's body... Police gathering in Marina!

 

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தனியார் பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம் போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இந்த சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 329 பேரில் 108 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளி தரப்பில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள், தாளாளர், செயலாளர், ஆசிரியைகள் உள்ளிட்ட ஐந்து பேரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

மாணவி உயிரிழப்பு தொடர்பாக  தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் மறு  பிரேதப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது இதற்காக மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் கீதாஞ்சலி (விழுப்புரம்), கோகுலநாதன்( சேலம்), ஜூலியான ஜெயந்தி (திருச்சி), ஓய்வுபெற்ற தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக வதந்திகள் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் பாதுகாப்பிற்காக 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.