Skip to main content

அமித் ஷாவா... சந்தான பாரதியா... - மீண்டும் ட்ரெண்டான மீம் கிரியேட்டர்களின் சேட்டை!  

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

கடந்த ஏப்ரல் மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இராணுவ கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பிரதமர் மோடிக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை அடுத்து அவரது கருப்புக் கொடி காட்டி கண்டனத்தை தெரிவித்தனர். இதிலிருந்து தப்பிப்பதற்காக மோடியின் பயணத்திட்டம் சென்னைக்குள்ளேயே தரைவழியில் அல்லாமல் வான் மார்க்கமாக அமைக்கப்பட்டது. அப்படியும் விடாமல் பிரம்மாண்ட கருப்பு பலூனை மேலே அனுப்பியது திமுக. அன்று ட்விட்டரில் #gobackmodi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக இருந்தது. அது கடைசியில் உலகலெவலில் பேமஸானது. இது பலதரப்பில் விவாதத்தை ஏற்படுத்தவும் செய்தது. 

தற்போது பாஜகவின் தேசிய தலைவரான அமித் ஷா, தமிழக பாஜகவின் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வுக்காக சென்னைக்கு வந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகைக்கு ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தது போல, தற்போது அமித் ஷாவின் வருகைக்கும் இந்திய அளவில் #gobackamitsha என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

 

 


பாஜக தலைவர் அமித் ஷாவின் தோற்றத்தின் அடிப்படையில் 'அம்மன்' திரைப்படத்தில் நடித்த நடிகர் நாகிரெட்டியுடனும் 'குணா', 'மகாநதி' ஆகிய படங்களை இயக்கிய நடிகர் சந்தான பாரதியுடனும் ஒப்பிட்டு மீம்ஸ்களை பரப்பினர். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருக்கும் அமித் ஷாவை தமிழக மீம் கிரியேட்டர்கள் வளைத்து வளைத்து மீம்ஸ் போட்டு நகைக்கின்றனர்.

தமிழ் படம் 2.0 வில் சிவாவின் நண்பர்களாக வரும் இளைஞர் பட்டாளத்தில் ஒருவராக நடித்திருக்கிறார் சந்தான பாரதி. வழக்கமான தோற்றத்திலிருந்து மாற்றமாக நிறைய முடியுடன் மாடர்ன் உடையுடன் சந்தான பாரதியின் தோற்றம் பார்க்கவே செம கலாயாக இருக்கிறது. முகம் எல்லாம் தாடி, தலையில் நீண்ட முடி என்று டீக்கடையில் சிவாவுக்கு அட்வைஸ் செய்வார். இந்த ஒரு டெம்பிளேட்டையும் இந்த #gobackamitshaவில் இணைத்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றனர். சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகியிருக்கும் சில மீம்ஸ்கள் இங்கே...

                        

amit shah

 

 

 

amit shah memes

 

amit memes

 

amit mishramodi amit

 

 

 

 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.