Skip to main content

மேகதாது அணையின் பின்னே மிகப்பெரிய சதி!

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
mekedatu

 

காவிரியின் குறுக்கே இனியொரு அணை கட்டக்கூடாது என்ற விதியை மீறி, மிகப்பெரிய அணையை மேகேதட்டு என்ற இடத்தில் கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

 

மத்திய அரசு அனுமதிக்கு முதல்நாள் ஒரு முக்கியமான சந்திப்பு நடந்திருக்கிறது. கர்நாடக அரசியலில் சண்டைக்கோழிகள் என்றும் இரு துருங்கள் என்றும் கூறப்படும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமாரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் சந்தித்து 1 மணிநேரம் பேசியிருக்கிறார்கள். அந்த ஊர் நாளிதழ்களில் இந்தச் செய்தி துருவங்கள் சந்தித்தன என்று வெளியானது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்தே மேகதாது அணை கட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல் வழங்கியது என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கிவிட வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு குறியாக இருக்கிறது. அம்பானி, அதானி, வேதாந்தா குழுமங்களின் வேட்டைக்காடாக டெல்டா மாவட்டங்களை மாற்றி, இந்த மாவட்ட மக்களை நிலமற்றவர்களாக்கி விரட்ட மறைமுகமாக சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

 

காவிரி நீர் பங்கீடுக்கா காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு ஆடிய நாடகமே அதற்கு சாட்சியாக இருந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டத்துக்கு எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காமல் காலந்தள்ளிய மோடி அரசு, எதிர்ப்பையும் மீறி வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க அனுமதி வழங்கியது.

 

இப்போது கஜா புயலால் கடலோர மாவட்டங்கள் தரைமட்டமாகியுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளும் மந்தகதியில் நடைக்கிறது. சிலை வைக்க 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தவர்கள், 6 மாவட்ட பேரழிவை சீரமைக்க 353 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறார்கள்.

 

இப்படிப்பட்ட நிலையில்தான் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அங்கு பாஜக அரசு இல்லையென்றாலும், காங்கிரஸ், மஜத கூட்டணி அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ எதிர்க்கட்களும் ஆளுங்கட்சியும் எதிர்ப்பு உணர்வைக்கூட சிதறடிக்கின்றன. தமிழகம் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே மேகதாது அணை அபாயத்தைத் தடுத்து, டெல்டா மாவட்ட விவசாயத்தை பாதுகாக்க முடியும்.

 

“கர்நாடகா பகுதியில் விளைநிலங்களின் பரப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் முன்பு 25 லட்சம் ஏக்கராக இருந்த விளைநிலப் பரப்பு, இப்போது 15 லட்சம் ஏக்கராக சரிந்துள்ளது” என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

 

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவில்லை என்பதால், கர்நாடகாவில் இருக்கிற ஆதரவை தக்கவைப்பதற்காக மத்திய மோடி அரசு மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.