Skip to main content

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு யாருகிட்ட பர்மிஷன் வாங்கணும் -திருமுருகன் காந்தி

Published on 14/05/2018 | Edited on 15/05/2018

வரும் ஞாயிறு (மே 20) அன்று நடைபெற இருக்கும் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் குறித்து திருமுருகன்காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பு 

 

தமிழன் இனப்படுகொலைக்கான நினைவேந்தலை தமிழர் கடலில் நாங்கள் அனைவரும் இணைந்து கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். இந்த ஆண்டு வருகின்ற மே மாதம் 20 தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை கண்ணகி சிலைக்கு பின்புறம் தமிழர் கடலோரத்தில் மெரினா கடற்கரையில் நிகழ இருக்கிறது. என்பதை தெரிவிப்பதற்காகதான் இந்த செய்தியாளர் சந்திப்பு.

 

இதன் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு நாங்கள் தெரிவிக்க இருப்பது தமிழ் இனத்தில் நடந்தது இனப்படுகொலை. அந்த இனப்படுகொலையை இந்தியா, அமெரிக்கா, இலங்கை, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மூடி மறைத்துவிட முடியாது என்பதை உலகிற்கு அறிவிக்கும் விதமாகதான் இந்த இனப்படுகொலை நினைவேந்தலை நடத்தி வருகிறோம். இனப்படுகொலைக்கான விசாரணை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் இங்கு இருக்ககூடிய அனைத்து ஜனநாயக இயக்கங்களுடைய ஒத்த கோரிக்கையாக இருக்கிறது. இந்த இனப்படுகொலைக்கான நினைவேந்தலை வருகின்ற மே மாதம் 20ம் தேதி கடற்கரையில் நடத்தும் பொழுது அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும். இறந்தவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கும். அரசியல் நிகழ்ச்சிக்கு தான் அனுமதி கேட்க வேண்டும். இது அரசியல் நிகழ்ச்சி அல்ல. இது அரசாங்கம் நடத்த வேண்டிய நிகழ்ச்சி. நீங்கள் வந்து ஜெயலலிதா அம்மையார் நினைவிடத்தில் போய் மரியாதை செலுத்தவோ அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்றவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவோ நீங்கள் எந்த அனுமதியும் வாங்குவதில்லை. வாங்க தேவையும் இல்லை. அதை போல்தான் இந்த நிகழ்வும் நடக்கிறது.
 

May 20th is definitely happening on the occasion - Tirumurugan Gandhi

 

 

 

இதை ஒரு அரசியல் நிகழ்ச்சியாக, போராட்டமாக சித்தரிக்கின்ற ஒரு முயற்சி நடப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஆகவே அமைதியான முறையில் நடந்துகொண்டிருந்த ஒரு நிகழ்வை நீங்கள் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லி தலையிட்டு நிறுத்துவதுதான் சட்ட விரோதமானது. ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்து அதை தடுத்து நிறுத்தினிகளா? இல்ல அதை நடப்பதற்கு உங்கிட்ட அனுமதி வாங்குறாங்களா அப்படி எதுவும் நடப்பது இல்லை. அப்பொழுது ஏன் இதற்கு மட்டும் அனுமதி வாங்குறதோ அல்லது காவல்துறை அனுமதித்தால் மட்டும் நடக்க வேண்டும் என்பதோ இதற்கு மட்டும் தடை எங்கிருந்து வருகிறது. இதற்கு தடை எங்கும் கிடையாது. கடற்கரையில் நீங்க மரியாதை செலுத்துவதற்கான உரிமை காலகாலமாக இருந்து வருகிறது. அதை நிறுத்துவதற்குகான உரிமை யாருக்கும் கிடையாது.

 

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு யாருகிட்ட பர்மிஷன் வாங்கணும் அப்படி எதுவும் சட்டத்தில் கிடையாது. காவல்துறை மூலமாக மத்திய அரசு தலையிடுவதை நாங்கள் எதிர்க்கின்றோம். இந்த நிகழ்ச்சியை தடுக்க நினைப்பது மத்திய அரசு, அதற்கு துணையாக தமிழக அரசும் இருக்கிறது. இதைதான் மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் அவங்க போய் மரியாதை செலுத்துவதை இலங்கை அரசு தடுத்தது. ஐ.நாவின் மனித உரிமை கமிஷனில்கூட அனைத்து நாடுகளும் அதை  கண்டித்து தீர்மானம் போட்டது. அதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். ஐ.நா.வினுடைய கமிஷனரும் இதை குறிப்பிட்டு இருக்கிறார். இலங்கையிலேயே இந்த நிலைமை. இன்று இலங்கையிலேயே முள்ளிவாய்க்காலில் மரியாதை செலுத்துகின்றபொழுது சுதந்திர நாடு, ஜனநாயக நாடு, நாங்கள் மனித உரிமை மதிக்கிறோம் என்று சொல்லக்கூடிய நாட்டில் இறந்தவருக்கு மரியாதை செலுத்திகின்றபோது அதை தடுகின்ற தேவை ஏன் இந்திய அரசுக்கு வருகிறது. இலங்கையில் அனுமதிக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சனை.

 

சர்வதே அளவில் இந்தியாவின் பெயர் கெட்டு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நீங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியது. ஒன்று நினைவேந்தல் நிகழ்ச்சி அடிப்படை உரிமை அதை தடுத்து நிறுத்திருக்கிறார்கள் என்ற குற்றசாட்டு சர்வதேச அளவில் முன் வைக்கப்படுகிறது. அதில் அமைதியான முறையில் பங்கு எடுத்தவர்கள் மீது பொய்யான வழக்கு பதிந்தது இரண்டாவது குற்றசாட்டாக வைக்கப்படுகிறது. மூன்றாவது குற்றசாட்டு அரசியல் உள்நோக்கத்திற்காக அவர்கள் குண்டர் சட்டத்தின் மூலமாக கைது செய்து சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டது என மூன்று குற்றசாட்டுகளை ஐ.நா. மனித உரிமை கமிஷன் முன்வைத்தது. இத்தனை கெட்ட பேரும் இந்திய அரசுதான் சம்பாதித்ததுதான். காவல்துறை சொல்வதில் இருக்க கூடிய நியாயம் என்னவென்றால் போராட்டங்களுக்கு மாற்று இடம் உண்டு. ஆனால் இது போராட்டம் கிடையாது. ஒரு அரசியல் இயக்கம் செய்வதால் எல்லாமே போராட்டம் கிடையாது. சமூக இயக்கங்கள் பல்வேறு விஷயங்களை செய்யக்கூடாதா? அதற்கு உரிமை இருக்கா, இல்லையா? பிரதமரோ, முதலமைச்சரோ செய்யக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்வாகவே பார்க்கிறாகளா, இல்லை.

 

 

 

ராஜபக்சேவுக்கு ஆதரவாக எடப்பாடி அரசு இருக்கிறதா, இல்லையா என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய நிகழ்ச்சிதான் இது. நினைவேந்தல் நடந்தால் ஜெயலலிதா அம்மையார் என்ன தீர்மானம் ஏற்றி அவர்கள் ஆட்சி காலத்தில் என்ன நிறைவேற்றினார்களோ அதை இந்த அரசு மறுக்கிறது என்ற அர்த்தத்தில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவோம். அதற்காக நீங்கள் என்னை கைது செய்தாலும் சரி, அல்லது தாக்கினாலும் சரி அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆகவே இந்த அரசு மக்களுக்கு ஆதரவாக இருக்கிறதா, இல்லையா? ஜெயலலிதா அம்மையார் எடுத்த கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறார்களா, இல்லையா? என்று இந்த அரசு அம்பலப்படபோகிற நாள் மே 20. எங்க போகிறோம், வருகிறோம் என்பதை காவல்துறை பின் தொடர்ந்து வருகிறது. நாங்கள் பஸ்ஸில் போகின்றோமா, இரயில் போகின்றோமா என்பதை கண்டுபிடிக்ககூடிய காவல்துறை எஸ்.வி.சேகரை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

Next Story

இட ஒதுக்கீட்டைப் பறித்த மோடியைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன்? - திருமுருகன் காந்தி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Thirumurugan Gandhi question Why didn't  pmk   struggle against Modi for taking away reservation

சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல்.  இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.  

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா?  கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.  

மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை.  ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.  

Next Story

“இதை மறைக்கவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா...”  -  திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Thirumurugan Gandhi | Women Reservation Bill

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பா.ஜ.க. வின் ஆட்சியில் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றம் என்பது இல்லை. அவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் பார்வையில் பெண்கள் வீட்டில் இருக்கவும், கணவனின் பணியாளாக இருக்கவே நினைப்பார்கள். மேலும், பெண்கள் வேலை செய்வதால் ஆண்களுக்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறினர். எனவே, நாடாளுமன்ற மசோதா பெண்கள் முன்னேற்றத்திற்கு கொண்டுவரவில்லை. மாறாக, இதனை 2029ல் தொகுதி மறுபங்கீடு செய்த பிறகு அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தான் ஏன்? வருகிற தேர்தலில் இதனை அமல்படுத்தவில்லை என எதிர்கட்சியினர் கேட்கின்றனர். இதிலும் ஒ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஓவைசி அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு இடமில்லை என எதிராக வாக்களித்துள்ளார்.

 

பா.ஜ.க. மணிப்பூர் விவகாரத்தை முறையாக கையாளவில்லை. இதனால், பெண்களிடம் ஏற்பட்ட களங்கத்தை மறைக்க இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவருகிறார்கள். மேலும், பெண்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் இடத்தில் வெற்றி பெறுவதாலும் இது போன்று செயல்படுகிறார்கள். இதில் கவனத்தில் கொள்வது, " தொகுதி மறுவரை செய்வது" தான். ஏனென்றால், இவர்கள் மக்கள் தொகையை வைத்து தொகுதி எண்ணிக்கையை தீர்மானிக்க உள்ளனர். இதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிப்படையும். மாறாக, வடமாநிலங்கள் கூடுதல் எம்.பி. இடங்களை பெறும். ஏற்கனவே, மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குறைந்த நிதியை பெறுகிறது.

 

ஆனால், காங்கிரஸ் அரசு 1971ல் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் வழங்கி வந்த நிதியை, பா.ஜ.க. அரசு 2011 கணக்கெடுப்பு படி மாற்றிவிட்டது. தென்னிந்தியாவின் நிதிகள் குறைந்ததற்கு முக்கிய காரணம் இதுதான். உதாரணமாக, தமிழ்நாடு 1 ரூ வரி செலுத்தினால் 0.40 பைசா திருப்பி செலுத்தப்படுகிறது. ஆனால், உ.பி. 1ரூ கொடுத்து, 2ரூ பெறுகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை செய்தால் மேலும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதற்கு மறைமுகமாகத் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்கின்றனர். இதையொட்டி தான் புதிய நாடாளுமன்றத்தின் இருக்கைகளை 843 ஆக அதிகப்படுத்தினர்.

 

தற்போதுள்ள கேரளா,தமிழ்நாடு,கர்நாடக,ஆந்திரா,தெலங்கானா, கோவா வில் 132 எம்.பி.க்கள் இருகின்றனர். மறுசீரமைப்பில் 167 எம்.பி. தொகுதியாக இது உயரும். இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு 25% சதவிதம் வரை கூடும். ஆனால், உ.பி.யில் 80ல் இருந்து 143 ஆக உயரும். இதனடிப்படையில், ஹிந்தி பேசும் மாநிலங்களின் எம்.பி. எண்ணிக்கை 439ஆக உயர்ந்து, நமக்கு சட்டம் இயற்றுவதில் சிக்கல் உருவாகும். எனவே, வரும் காலங்களில் இந்தியாவை ஹிந்தி பேசும் மாநிலங்கள் தான் ஆளப்போகிறது.  இதுமாதிரி தொகுதி மறுபங்கீடு செய்தால் பா.ஜ.க. தான் தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கும். இதே போன்ற செயல் தான் இலங்கையில் நடந்து தமிழர்களின் இடங்கள் பறிபோனது. இந்தநிலையில், சட்டமன்ற தொகுதிகளையும் மாற்றியமைத்தால் மாநிலத்தின் அதிகாரங்கள் சிதைந்து விடும். எனவே, பெண்கள் இட ஒதுக்கீடு அல்ல அவர்களின் நோக்கம். 

 

தென்னிந்தியா முழுவதும் சேர்ந்தே பிரதிநிதித்துவம் இல்லை என்றால் தமிழ்நாட்டின் உரிமை எப்படி இருக்கும். மேலும், இவர்கள் மக்கள் தொகை கணக்கெடுத்து மறுசீரமைப்பு செய்யவுள்ளனர். நாங்கள் கேட்கிறோம் 1971 சென்சஸ் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாமே. ஏறக் குறைய ஆண்கள் பெண்கள் விகிதம் பாதியளவு தான் இருக்கும். இந்திக்காரர்களின் தேசியமாக இந்தியாவை மாற்றுவது தான் இவர்களின் நோக்கம்.  மேலும், தொகுதி பங்கீடு குறித்த ஆய்வும் வெளிவந்துள்ளது. இதைவைத்து தான் இவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தின் குரல் கேட்பது அரிது. தற்போது, கூடுதலாக எம்.பி. இடங்கள் குறைகிறது. இந்த மாதிரியான அடிமைநிலையில் நாம் வாழவேண்டும் என்பதற்கே பெண்கள் மசோதாவை கொண்டுவருகின்றனர். இதனை எங்கள் பத்திரிக்கையில் ஒரு வருடமாக சொல்லி வருகிறோம். ஆனால், வேறு பத்திரிகையில் பேச வாய்ப்பு அமையவில்லை. தற்போது நக்கீரனில் தான் தெரிவிக்கிறேன்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...