Skip to main content

’’அன்றாடம்காச்சி என்ன செய்வான்? அவனுக்கு நஷ்ட ஈடு கொடுங்க..’’- மன்சூர் அலிகான் 

Published on 23/03/2020 | Edited on 23/03/2020
m

 

கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபடி மக்களும் அதன்படியே நடந்தனர்.   மேலும், பல மாவட்டங்கள் வரும் 31ம் தேதி முடக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

 

இந்த நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான், மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அவர், ’’வல்லரசுன்னு சொல்லுறாங்க. டிஜிட்டல் இந்தியான்னு சொல்லுறாங்க. சைனாவுல பரவி எவ்வளவு நாளாச்சு.  ஏர்போட்டிலேயே இந்த வைரசை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. உள்ளே ஏன் விடுறீங்க?


கொரோனா கொரோனான்னு சொல்லி வருமுன் காப்போம் நடவடிக்கை எடுக்குறாங்க.  அன்றாடம் காச்சி என்ன செய்வான்? அவனுக்கு நீங்க நஷ்ட ஈடு கொடுக்கணும். இன்னைக்கு உழைச்சாத்தான் அவனுக்கு காசு. பிரதமர் சொல்லிட்டாரு எல்லாரும் வீட்டுல  உட்கார்ந்துக்கோங்கன்னு.   


கை கொடுத்தா கொரோனா வருதுன்னு சொல்றீங்க.  தொட்டா தீட்டுங்குற நிலைமையை கொண்டு வந்துட்டீங்க.   கட்டுப்புடிச்சு ஆரத்தழுவி உட்கார வைப்பதுதான் நம்ம பண்பாடு.   கை கொடுத்தாலே கொரோனா வருதுன்னு சொன்னா....எச்சிலை தொட்டு தொட்டு ரூபா நோட்டை எண்ணுறோமே.. பணத்தை எரிச்சுடுறோமா என்ன? இல்லை பணத்தை கழுவி எடுக்கிறோமா? அப்படி பார்த்தா வீட்டுக்கு வீடு கொரோனா பரவி இன்னைக்கு கோடிக்கணக்கான பேர் செத்திருக்கணுமா இல்லையா?  ஏன் பீதியை கிளப்புறீங்க..? சிஏஏ, என்பிஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை தடுப்பதற்காகவே கொரோனாவை வைத்து அரசியல் செய்யுறீங்க.

 

சளி பிடிச்சா காய்ச்சல் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.  கொரோனாவுக்கான உண்மையான அறிகுறி என்ன? அதைச்சொல்லுங்க. அதுக்கு இன்னும் மருந்தும் கண்டுபிடிக்கல.

ஏழை, எளிய மக்கள் 15 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராம இருக்கனும்னு சொன்னா அவன் என்ன பண்ணுவான்? அவனுக்கு 15 லட்சம் கொடுக்க வேண்டாம்.  ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயிரம் இரண்டாயிரமாவது கொடுங்க.   

 

ஏற்கனவே வேலை வாய்ப்பு இல்ல. பல பேர் திருட ஆரம்பிச்சுட்டான்.  பேங்குல பணம் போட்டா அதையும் திருடிட்டு போயிடுறீங்க.   பிழைக்க வழி இல்லேன்னா அவன் என்ன செய்வான்?’’என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Next Story

''த்ரிஷாவிடம் நான் மன்னிப்பே கேட்கவில்லை'' - ரிவர்ஸ் கியர் போட்ட மன்சூர் அலிகான்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

அண்மையில் நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ காட்சி ஒன்று வைரலானது. இதற்கு த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

 

நடிகையும், பாஜகவின் பொறுப்பாளர்களில் ஒருவரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான மன்சூர் அலிகான் இது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

 

அதற்கு அடுத்த நாளே திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக நடிகர் மன்சூர் அலிகான் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் 'தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வ குணம்' என பதிவிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் மன்சூர் அலிகானிடம் பிரச்சனை தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்டபிறகும் பலர் மீது மான நஷ்டஈடு வழக்கு போட்டுள்ளீர்களே காரணம் என்ன என்ற கேள்விக்கு, ''நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை. என்னுடைய பி.ஆர்.ஓ வை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'அடக்க நினைத்தால் அடங்க மறு; திரை கதாநாயகி த்ரிஷாவே என்னை மரணித்துவிடு' என்றுதான் சொன்னேன். ஆனால் அவர் மன்னித்துவிடு எனப் புரிந்து கொண்டு வெளியிட்டு விட்டார். அந்த நேரத்தில் மீண்டும் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்து விட்டேன். நான் சொன்னது இதுதான். இந்த அதிர்ச்சியில் இருந்து நானே இன்னும் வெளிவரவில்லை'' என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

 

 

 

Next Story

மன்சூர் அலிகானிடம் விசாரணை நிறைவு 

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Mansoor Ali Khan who tried to speak; Stopped by the police

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எனத் தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்து வந்தது. பின்பு மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் கொடுத்தனர். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று ஆஜராகவில்லை எனக் குறிப்பிட்டு நாளை ஆஜராக அனுமதி வழங்க காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

 

இந்தநிலையில் திடீரென்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார் மன்சூர் அலிகான். மேலும் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் பேசுகையில் ‘போலீசார் விசாரிச்சாங்க. நான் நடந்ததை சொன்னேன். நான் தனிப்பட்ட த்ரிஷா கிருஷ்ணனை விமர்சிக்கல. அவங்கள நடிகையா ரொம்ப ரெஸ்பெக்ட் பண்றேன்' என பேச தொடங்கினார். அதற்குள் காவல்துறை அதிகாரிகள் 'சார் உங்களுக்கான வண்டி வந்துவிட்டது. நீங்கள் கிளம்புங்கள்' என அறிவுறுத்திய நிலையில் அங்கிருந்து நடிகர் மன்சூர் அலிகான் கிளம்பினார்.