Skip to main content

"முகிலனை நாயை விட்டு கடிக்க வைத்துள்ளார்கள்" பகீர் கிளப்பும் மன்சூர் அலிகான்!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த சமூக ஆர்வலர் முகிலன் 140 நாட்களுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் காணாமல் போனதில் இருந்து அவருக்காக தொடர்ந்து குரல்கொடுத்து கொண்டிருந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். முகிலன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக அவரிடம் கேள்வியை முன்வைத்தோம். இதோ அவரின் அனல் கக்கும் பதில்கள்...     


முகிலன் 140 நாட்களுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் காணாமல் போனபோது அவருக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தீங்க. இப்போது எப்படி உணர்கிறீர்கள்?   

 

நேற்று காலையில் ஒரு ரெண்டு, மூன்று மணிக்குதான் நக்கீரனில் அந்த வீடியோவை பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனை இழுத்துட்டு போற மாதிரி அவரை போலீஸ் இழுத்துட்டு போறாங்க. அவரை சித்தரவதை பண்ணியிருக்காங்க. என்ன செஞ்சாங்கன்னு தெரியலை. ஆனா அணு அளவும் அந்த உத்வேகம் குறையாம, கூடங்குளத்தில் அணுக்கழிவை கொட்டக்கூடாது, ஏழு தமிழர்களை விடுதலை செய்யனும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சொல்லிக்கிட்டே போனார். அதை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம் பார்த்தால், அவரை நாயை விட்டு கடிக்க வச்சி இருக்காங்க. 200, 300 பிச்சை காச வாங்கிட்டு ஓட்டு போட்டால் இதான் நடக்கும். ரொம்ப வேதனையா இருக்கு.

 

mansoor speak about mugilan issue

 

 

ஒரு பெண் கொடுத்த பாலியல் வழக்கி்ல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மனைவி இந்த குற்றச்சாட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இதை நீங்க எப்படி பாக்குறீங்க?

 

இந்த நாட்டுக்காக, மண்ணுக்காக, கர்ப்பிணி பெண்களின் குழந்தைகள் ஊனமா பிறக்கக் கூடாது, காற்று மாசுபடுது, தண்ணீரை உறிஞ்சுறாங்கன்னு சொல்லி அதை எதிர்த்து போறாடுற ஆளு அவரு. அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சி. அப்புறம் அவர் யார் கூட வாழ போறாரு. என்ன பாலியல் பலாத்காரம், வெங்காய பலாத்காரம். அவரு என்ன ஆயிரம் கோடி பணத்தை வச்சிக்கிட்டு ஆடி காருல வந்துகிட்டு இருக்காரா?  காவல்துறைக்கு மனசாட்சி இல்ல, எம்.எல்.ஏ, எம்.பி எல்லாம் என்ன பண்ணிகிட்டு இருக்காங்க. ஆனாவூனா பாலியல் பலாத்காரம்.  நாட்டு மக்கள் பாத்துக்கிட்டுதான் இருக்காங்க, தமிழ்நாடு ஒட்டுமொத்தமா கொதிச்சி போய் கிடக்குது. சினிமாவில் மட்டும் தான் நாங்க ஏழை பாழைகள் பக்கம் இருப்போம்னு நினைக்காதீங்க. ஒட்டுமொத்த சினிமா, ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டத்துல குதிக்கும். இந்த அநியாயத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வையுங்க. அவ்வளவுதான் உங்களை எச்சரித்து கொள்கிறேன். என்ன பாலியல் பலாத்காரம், அந்தம்மா பேரை பத்திரிகையில போட்டு இருக்காங்களா? நாட்டுல எல்லா மந்திரியும் ஏமாத்திகிட்டு சுத்திகிட்டு இருக்கான், மினிஸ்டர் எல்லாம் ரேப் பண்ணிட்டு, கொள்ளையடிச்சிட்டு இருக்கான். மொள்ளமாறித்தனம் பன்னி, ஓட்டு மிஷின்ல மோசடி செய்து ஆட்சியில     உட்கார்ந்துகிட்டு இருக்காங்க. அவுங்க காலை நக்கிட்டு ஒரு கூட்டம் சுத்திகிட்டு இருக்கு. வெக்கம், மானம், சூடு, சுரணை எதுவுமே இல்லையா?  வழக்கு போடுறானுங்களாம், வெங்காயம். மனசாட்சி இருக்கா இல்லையா. 13 பேரை சுட்டு கொன்னவங்க மீது வழக்கு போடு. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க எங்க மண்ணுதான் கிடைக்குதா? தொலைத்து விடுவோம். அமைதியா இருக்கோம்னு பாக்காதீங்க.

 

நீட் தேர்வை ஆதரித்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு இருக்கிறாரே?

 

விஜயகாந்த் நீட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டாரா? எப்ப சொன்னாரு? அவரு சொன்னாரா இல்ல பிரேம லதா சொன்னாங்களா, அவரு மச்சான் சுதீஷ் சொன்னாரா, அவரை வெளியில் வந்து நாலு வார்த்தை பேச சொல்லுங்க, நான் நம்புறேன். வாங்குன காசுக்கு கூவ வேணாம். ஜெயிக்கத்தான் முடியில அதான் இப்படி பன்றாங்க.

 

நீட் தேர்வை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்னு அறிக்கையில் கூறி இருக்காங்களே?

 

என்ன அரசியல் ஆக்க வேணாமா? இது அரசியல் இல்லாம இது என்னய்யா வெங்காயம், நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை செருப்பால் அடித்து விரட்டுவோம். நீங்க ஒழுங்கா பேலட் பேப்பரில் தேர்தலை நடத்துங்க. அப்புறம் பார்ப்போம், யாரு ஜெயிக்குறாங்கன்னு. ஏ.பி,சி,டி தெரியலை அவங்க எல்லாம் நார்த்துல டீச்சரா இருக்காங்கன்னு வாட்ஸ் அப்பில் வீடியோ வெளிவருது. நீங்க எங்க பசங்களுக்கு படிப்பை சொல்லிக் கொடுக்கிறீங்களா? வெக்கமா இல்லை... முகிலனை முதல்ல வெளியில் கொண்டுவரச் சொல்லுங்க, பெரியார், பெரியார்னு அவர் படத்த போட்டுக்கிட்டு ஊரை ஏமாத்திகிட்டு இருக்கானுங்க. இலங்கையில நூற்றுக்கணக்கான பெண்களை ராணுவம் வன்புணர்வு செஞ்சாங்களே, அதை கேட்க துப்பில்லாத அரசாங்கம், மக்களுக்காக போராடுறவங்க மேல பாலியல் வழக்கு போடுறாங்க, இதுதான் ஒரு அரசாங்கத்தோட வேலையா? இதை நாங்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.


 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.