Skip to main content

'கண்ணாடி கூண்டில் இருந்துகொண்டு காங்கிரஸ் கல்லெறிகிறது' மல்லை சத்யா தடாலடி!

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கடந்த 5ம் தேதி வைகோ நாடாளுமன்றத்தில் பேசிய போது காங்கிரஸ் கட்சியை விமர்சித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக பதில் அளித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி அவரை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டு இருந்தது. பதிலுக்கு மதிமுகவும் கடுமையான சொற்களை பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பாக மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,
 

a




தள்ளி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. திமுக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

 

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். முதலில் மதிமுக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறுகிறீர்கள். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலோடு இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருந்தால் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றிருப்பார். ஆனால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால் தற்போது அவர் சற்று குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வெற்றுள்ளார். ஆளும் கட்சியின் அதிகார பலத்தை எதிர்த்து வெற்றிபெரும் போது இத்தகைய இடைஞ்சல்கள் ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான். எப்படி இருந்தாலும் வெற்றி என்பது ஒன்றுதான். அதில் மாற்றமில்லை. 

இந்த வெற்றியில் கூட்டணி கட்சியினருடைய பங்கும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? 

நிச்சயமாக பங்கு இருக்கிறது. அதுதான் உண்மையும் கூட. ஏனென்றால் அப்போது போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் தற்போது இணைந்தே இருக்கிறது. அனைத்து கட்சிகளும் இணைந்தே தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டன. எனவே அனைவரும வெற்றிக்கு உழைத்தார்கள் என்பதே உண்மை.

ஆனால், தற்போது அதில் பிரச்சனை வந்துள்ளதாக தெரிகிறதே, காங்கிரஸ் கட்சியை நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளீர்களே?

நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. எங்களை விமர்சனம் செய்ததால் பதில் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கொள்கை ரீதியாக இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. 10 சதவீத இடஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிராக இருக்கிறது என்பது எங்களின் கருத்து. முதல்வர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூட அதை தெளிவாக பதிவு செய்தோம். ஆனால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதனை ஆதரித்தன. ஆனால், நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இன்றும் எதிர்க்கிறோம். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாஜக கொண்டுவந்த மசோதாவை மதிமுக கடுமையாக எதிர்த்தது. ஆனால், மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா அதனை எதிர்த்தார். காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் அந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தார்கள். எனவே, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருவேறு கருத்துக்கள் இருக்கின்ற போது மதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் கொள்கை ரீதியாகவே மாறுபட்ட கருத்துக்களை கொண்டவை. எனவே கருத்து மாறுபாடுகள் வருவது இயற்கையான ஒன்றுதான். அதை பிரச்சனை என்று சொல்வதிற்கில்லை.

தேர்தலுக்கு முன்பாக ஒன்று பேசுகிறார், தேர்தல் முடிந்த பிறகு ஒன்று பேசுகிறார் என்று உங்கள் தலைவர் வைகோ மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?

அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. 2014ம் ஆண்டு பாஜகவோடு கூட்டணி வைத்தபோது பல்வேறு விஷயங்களை முன்னரே பேசினோம். முந்தைய வாஜ்பாய் அரசு மேற்கொண்ட கொள்கையில் இருந்து பாஜக மாறக்கூடாது என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே நாங்கள் ஒன்று சேர்ந்தோம். எங்கள் கொள்கைகளுக்கு இடைஞ்சல் தரும் வகையில் நாங்கள் எப்போதும் கூட்டணி அமைப்பதில்லை. அதைபோன்றே 2016ம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியை அமைத்தோம். விஜயகாந்தை முதல்வராக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் தலைவர் வைகோ முன்மொழிந்தார். தேர்தல் முடிவில் மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிந்தோம். தேர்தல் முடிவுக்கு பிறகு அந்த கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. ஒவ்வொருவரும் அவர் அவர்களுக்கான நிலைபாடுகளை தனித்தனியாக எடுத்தார்கள். அதன் பிறகு திமுக கூட்டணியில் பயணிக்கின்ற போது, யார் பிரதமராக வரவேண்டும் என்று கேள்வி எழுந்த போது, ராகுல் வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். அதனை மதிமுக ஏற்று தேர்தல் பிரச்சாரங்களை முன் எடுத்தது.

கூட்டணி வைக்கும்போது தெரியவில்லையா இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் என்று?

காங்கிரஸ் கட்சியின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. குறிப்பாக பேரறிவாளன் விவகாரத்தில் அவர்களை சட்ட ரீதியாக விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். எனவே அவர்கள் மாறியிருப்பார்கள் என்ற நோக்கில் ஒன்றாக பயணித்தோம்.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பேச வேண்டிய நிர்பந்தம் என்ன?

நாங்கள் எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் கட்சிதான் கண்ணாடி கூண்டில் இருந்து கொண்டு கல்லெறிகிறார்கள். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசும்போதும் நாடாளுமன்றத்தில் அனைத்து தகவல்களையும் வைகோ சொல்கிறார். 5ம் தேதி பேசி அந்த சம்பவத்திற்கு 8ம் தேதி கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஏவுகணைகளை வீசுவோம் என்று தெரிவிக்கிறார்கள். பாஜகவை நாங்கள் ஆதரிப்பதாக சொல்வதெல்லாம் கட்டுக்கதை. காஷ்மீர் விவகாரத்தில் அந்த மசோதா கொண்டுவந்த போது அது ஜனநாயகத்தின் கருப்பு தினம் என்று நாடாளுமன்றத்தில் வைகோ கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

 

 

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.