Skip to main content

மலேசியாவின் தந்தை மகாதீர்!

Published on 12/05/2018 | Edited on 12/05/2018
mahathir-mohamad


92 வயதில் உலகின் மிக வயதான பிரதமராக உலக சாதனை படைத்து பதவியேற்றிருக்கிறார் மகாதீர் முகமது. சீரழிந்த மலேசியாவை சீரமைக்க மகாதீரை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது.

இப்போதை ஆளுங்கட்சிதான் மகாதீரின் கட்சியும். ஆனால், இன்றைய பிரதமர் நஜீப்பும் அவருடைய மனைவியும் மலேசியாவை சின்னாபின்னப் படுத்திவிட்டதாக மக்கள் கொந்தளித்திருந்தனர்.

குறிப்பாக நஜீப்பின் மனைவி ரோஸ்மா மன்சோர் 7 பில்லியன் டாலர் அளவுக்கு கொள்ளையடித்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் உத்தரவின் பேரில் நடைபெற்ற கொலைகளுக்கு கணக்கே இல்லை என்கிறார்கள். மலேசியாவின் தொழில்களை நாசப்படுத்தி, மக்களை வாட்டும் பல முடிவுகளை எடுக்க காரணமாக இருந்திருக்கிறார். மலேசியா முழுவதும் சாலைகளில் டோல்கேட்டுகளை அமைத்திருக்கிறார்கள். 7 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் விலை 2.20 வெள்ளிக்கு விற்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 40 ரூபாய் ஆகும்.

நஜீப் தலைமையிலான இந்த அட்டூழிய ஆட்சிக்கு முடிவுகட்ட எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன. அவை தங்களுக்கு தலைமையேற்று மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் முன்னாள் பிரதமர் மகாதீரை தேர்வு செய்தனர். சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் அன்வரின் மனைவி, மகள் ஆகியோரும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
 

najib


உலகமயக் கொள்கைகள் அமலான சமயத்தில் ஆசிய நாடுகள் பல பொருளாதார சீரழிவைச் சந்தித்தன. அந்தச் சமயத்தில் பிரதமர் மகாதீர் மலேசியாவை சீரழிவில் இருந்து காப்பாற்றினார். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தப்பின.

ஆனால், இப்போது அதைக்காட்டிலும் மிகப்பெரிய சீரழிவை மலேசியா சந்திக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு வழிகாட்ட மகாதீர் வந்திருக்கிறார். அவர் பிரதமராக பொறுப்பேற்றாலும் எதிர்க்கட்சிகளுக்கு மிகச்சிறந்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

“நாம் மக்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். எனக்கு 92 வயது ஆவதால் அதிக நேரம் உழைக்க முடியாது. 100 நாட்கள் தினமும் அமைச்சரவை கூட வேண்டும். நான் 15 முதல் 20 நிமிடங்கள் அதில் பங்கேற்பேன். சின்னதாய் அமைச்சரவை இருக்க வேண்டும். இளைஞர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கவேண்டும். முதலில் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறு அளித்தபடி பெட்ரோல் விலையை 2.20 வெள்ளி என்பதிலிருந்து 1.5 வெள்ளியாக குறைக்க வேண்டும். இதன்மூலம் மலேசியாவில் தற்போது இந்திய மதிப்பில் 40 ரூபாயக இருக்கும் பெட்ரோல், 22 ரூபாயாக குறையும். அதுபோல நஜீப் அரசு விதித்த 7 சதவீத ஜிஎஸ்டியை முற்றாக ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சுமையாக இருக்கும் டோல்கேட்டுகளை மூட வேண்டும்” என்றெல்லாம் மகாதீர் யோசனை தெரிவித்திருக்கிறார்.

இதற்கு அனைத்துக் கட்சிகளும் முழமனதுடன் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே, தேர்தல் முடிவு வெளிவந்தவுடன், முன்னாள் பிரதமர் அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மன்னரிடம் கோரிக்கை விடுத்தனர். மன்னர் அதை ஏற்றுக்கொண்டார். இயல்பாகவே அன்வர் தண்டனை முடிந்து ஜூன் 8 ஆம் தேதி விடுதலையாகிறார்.

அன்வர் விடுதலையானால் ஏதேனும் காலியாக உள்ள தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆவார் என்று கூறப்படுகிறது. அப்படி ஆனால், மகாதீர் விலகி அன்வர் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

anwar


தற்போது மூன்று மலேசியர், மூன்று தமிழர், மூன்று சீனர் அடங்கிய அமைச்சரவையை மகாதீர் அமைத்திருக்கிறார். இதில் அன்வரின் மனைவி வான் அஜிஷா துணை பிரதமராக இருக்கிறார். மகாதீரிடம் நிதித்துறை இருக்கிறது. சீனர் ஒருவரிடம் பாதுகாப்புத்துறை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சரவையில் பேசிய மகாதீர், “எனக்கு வயதாகிவிட்டது. இளைஞர்கள்தான் பொறுப்பாக செயல்பட வேண்டும். எனக்கு எந்த நேரத்திலும் எதுவும் நேரலாம். முடிந்த அளவுக்கு என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

நஜீப் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று மகாதீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மகாதீர், உரிய புகார்கள் கிடைத்தால், ஆதாரங்கள் கிடைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதனிடையே, தேர்தல் முடிந்தவுடன், முன்னாள் பிரதமர் நஜீப் தனது குடும்பத்துடன் ஜகார்தாவுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் என்ற செய்தி பரவியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ஓய்வுக்காக செல்வதாக தெரிவித்தார்.

Next Story

மலேசிய பிரதமருடன் ரஜினி சந்திப்பு

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

rajini meets malaysia pm

 

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

 

சினிமாவைத் தாண்டி அவ்வப்போது பல்வேறு ஆளுமைகளை சந்திக்கும் ரஜினி, சமீபத்தில் இமயமலை பயணம் மேற்கொண்ட பிறகு தொடர்ந்து பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன. 

 

அந்த வகையில் தற்போது மலேசியா சென்றுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அந்நாட்டு பிரதமர், "ஆசிய மற்றும் சர்வதேச கலை உலக அரங்கில் பரிச்சயமான பெயர் கொண்ட இந்தியத் திரைப்பட நட்சத்திரமான ரஜினிகாந்தை சந்தித்தேன். எனது போராட்டத்திற்கு குறிப்பாக மக்களின் துயரம் மற்றும் துன்பம் தொடர்பாக அவர் அளித்த மரியாதையை நான் பாராட்டுகிறேன். ரஜினிகாந்த் தொடர்ந்து திரையுலகில் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்" என ரஜினியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

Next Story

மலேசியாவில் அஜித் ரசிகர்கள் சாதனை

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

Ajith fans record in Malaysia

 

தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகின்றன. இரு படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கில் கூடுகிறார்கள். இதனால் திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.

 

முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம், அடாவடி, திரையரங்கு சேதம், பேனர் கிழிப்பு எனப் பல சம்பவங்கள் அரங்கேறின. இதனிடையே, மலேசியாவில் துணிவு பட வெளியீட்டை முன்னிட்டு அஜித்திற்கு 9.144 மீட்டர் உயரம் கோண்ட கட்அவுட் வைத்து அஜித் ரசிகர்கள் சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் எந்த நடிகருக்கும் இவ்வளவு உயரம் கொண்ட கட்அவுட் யாரும் வைத்ததில்லை என்றும், அஜித்திற்கு தான் முதல் முறை என்றும் மலேசிய அஜித் ரசிகர்கள் சொல்கின்றனர். 

 

மேலும், ஒரு நடிகருக்கு அதிக உயரம் கொண்ட கட்அவுட் வைத்துள்ளதால் மலேசிய சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது. இதற்கான அங்கீகார சான்றிதழ் துணிவு பட மலேசிய உரிமத்தை வாங்கிய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அந்த கட்அவுட் புகைப்படத்தையும் சாதனை சான்றிதழையும் அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.