Skip to main content

யார் மலாலா, நான்தான் மலாலா

Published on 08/03/2018 | Edited on 08/03/2018
malala

யார் மலாலா ? என்று அவர் கேட்டார்.

யாரும் எதுவும் சொல்லவில்லை. இருந்தும் அவர்கள் என்னை திரும்பி பார்த்தனர். ஏனென்றால் நான் ஒருவள் மட்டும்தான்  முகத்தை மூடாமல் இருந்தேன். 

அவ்வளவுதான் உடனே அவன் வைத்திருந்த கருப்பு பிஸ்டலை எடுத்துவிட்டான். பின்னர் அந்த துப்பாக்கியின் பெயர் "கோல்ட் 45" என்பதை தெரிந்துகொண்டேன். சில பெண்கள் கூச்சலிட்டனர். நான்  அவளின் கையை அழுத்தியததாக மோனிபா கூறினாள்.

அவன் என்னை மூன்று முறை, ஒன்றன்பின் ஒன்றாக சுட்டுத்தள்ளியதாக  என் நண்பர்கள் சொன்னார்கள். முதல் குண்டு என் இடக்கண் குழியின் வழியாக பாய்ந்தது, அடுத்த குண்டு என் இட தோள்பட்டையை தாக்கியது, என் இடது காதில் இருந்து இரத்தம் வலிந்து ஓடியது,  நான் மோனிபா மேல் சரிந்தேன். இதனால் மேலும் சுடப்பட்ட இரண்டு குண்டுகள் என் பின்னே இருந்தவர்களைத் தாக்கியது. 

பின்னர் என் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள், " தீவிரவாதி உன்னை ஒவ்வொரு முறை சுடும்போது அவனின் கை நடுங்கியது" என்று.

அதே நேரத்தில் நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டோம் என்னுடைய நீண்ட தலைமுடி மற்றும் மோனிபாவின் மடி முழுவதுமாக இரத்தம் கரையாக இருந்தது.

யார் மலாலா ? 

நான் தான் மலாலா. இதுதான் என் கதை.

இதில் சொல்லப்பட்ட நிகழ்வு என்பது ஒரு சாதாரண பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த உண்மை சம்பவம். மலாலா என்ற பள்ளி மாணவியை தலிபான் தீவிரவாதிகள் தாக்கினர். பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று தீவிரவாதிகள் சொன்னதை எதிர்த்து, நாங்கள் பள்ளிக்கு சென்று படிப்போம் என அவர்கள் போராடியதற்காக தீவிரவாதிகாளால் கொடுக்கப்பட்ட பரிசுதான் இந்த துப்பாக்கி சூடு. இந்த சம்பவத்திற்கு பின்னர் உலகமே மலாலாவை பற்றியும், "சுவாத்" என்னும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தை பற்றியும் தெரிந்துகொண்டனர். இங்கிலாந்து மருத்துவமனை மலாலாவுக்கு மருத்துவம் செய்தது, அங்கேயே அவருக்கு படிப்பும் அளிக்கப்பட்டது. பல நாடுகளில் சிறப்பு விருந்தினராக இவர் அழைக்கப்பட்டதும், பல விருதுகள் இவருக்கு கொடுக்கப்பட்டதும் இவரது தைரியத்திற்கு  கிடைத்த பரிசு. மிகச்சிறு வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதும், அதை வென்றவரும்  மலாலா தான். ஜஸ்டின் ட்ரூடோ, மலாலாவை கவுரவப்படுத்தும் வகையில் கவுரவ கனடா குடியுரிமை அளித்தார். உலகளவில் புகழ்பெற்ற இளைஞர்களில் மலாலாவுக்கு என்று ஒரு முக்கியமான இடம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. பெனாசிர் பூட்டோ எப்படி பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தாரோ, மாலாலாவும் அதே நம்பிக்கையை அளித்து நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.       

ஐநா இளைஞர்கள் கூட்டத்தில் பேசிய மலாலா, " ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா உலகையே மாற்றும் "  என்றார். இதை அந்த கூட்டத்தில் சொல்லும் போது அவருக்கு வயது 16 தான். இன்றும் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்துக்கொண்டும், தொண்டு நிறுவனத்தை பலரின் உதவியால் செயல்படுத்திக்கொண்டும் வருகிறார். மலாலா என்பவர் ஒரு சாதாரண மனிதர் மட்டுமல்ல, அவர் பல பெண்களின் உரிமைக்கான அடையாளம்!  

Next Story

 இஸ்ரேல் போர்; இளம்பெண்ணின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற கொடூரம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

The young lady lost her life for israel incident

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், காசாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற பலரை சுட்டுக் கொன்றனர். அதில் சிலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். 

 

இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்ற ஒரு இளம்பெண்ணை சித்ரவதை செய்து அவரது தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

 

இசை நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற இளம்பெண் ஷானி லோக். இவர் டாட்டூ கலைஞராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், பிணைக்கைதியாக கொண்டு செல்லப்பட்ட ஷானி லோக்கின் தலையில்லாத உடலை காசா நகரில் ஹமாஸ் அமைப்பினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில், அவரது உடலை ஒரு லாரியில் வைத்து சுற்றிலும் ஆயுதம் ஏந்தியவர்கள் முழக்கமிட்டபடி கொண்டு செல்கின்றனர். இது பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. டாட்டூ கலைஞர் ஷானி லோக் கொல்லப்பட்டதை இஸ்ரேல் ஜனாதிபதி இசோக் ஹெர்சோக் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது தலை கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

 

 

 

Next Story

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிய இளம்பெண் பலி!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Woman incident while talking on cell phone while charging

 

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோகிலா (வயது 33). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில், தனது 9 வயது மகனுடன் வசித்து வந்தார். கபிஸ்தலத்தில் கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோகிலா இன்று தனது கடையில், செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது.

 

இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எறிந்த நிலையில், கோகிலா கத்திக் கூச்சலிட்டுள்ளார். அதே சமயம் கடை முழுவதும் தீ பரவியதால் பலத்த தீக்காயமடைந்த கோகிலா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோகிலாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பாபநாசம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.