Skip to main content

பணக்கார நிர்வாகிகளால் புலம்பும் மக்கள் நீதி மய்யம்! கமலின் தேர்தல் திட்டம்! 

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

"தமிழக அரசியல் மக்கள் நலனை விட்டு விலகியும் சுயநலம்மிக்கதாகவும், தரம் தாழ்ந்தும், தன் பாரம்பரிய பெருமைகளை இழந்தும் நின்ற ஒரு சூழலில், அரசியல் நாகரிகத்தை மீட்டெடுக்கவும், மீண்டும் மக்களுக்காக பாடுபடும் ஒரு அரசியல் கட்சியினை உருவாக்கிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலும், என்னால் ஆரம்பிக்கப்பட்டதுதான் மக்கள் நீதி மய்யம் கட்சி. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, கட்சிக்கு ஆறு பொதுச்செயலாளர்களை அறிவித்தபோது, ம.நீ.ம.வின் தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையின் ஆரம்ப வரிகள்தான் மேலே உள்ளவை.

 

mnm



பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பு -ஆ.அருணாசலம், பொதுச்செயலாளர், அமைப்பு (வடக்கு, கிழக்கு) -ஏ.ஜி.மௌரியா ஐ.பி.எஸ். (ஓய்வு), பொதுச்செயலாளர், கொள்கை பரப்பு -ஆர்.ரங்கராஜன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு), பொதுச்செய லாளர், சார்பு அணிகள் -வி.உமாதேவி, பொதுச் செயலாளர், தலைவர் அலுவலகம் -பஷீர்அகமது ஐ.ஏ.எஸ். (ஓய்வு), பொதுச்செயலாளர், அமைப்பு (தெற்கு, மேற்கு) தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வையில். இதுதான் கமல் அறிவித்த புதிய பொறுப்புகள்.

கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் மகேந்திரன் அதே பொறுப்பில் தொடர்வார், பொருளாளராக ஏ.சந்திரசேகர் நியமிக்கப்படுகிறார். தமிழகத்தை 8 மண்டலங்களாகப் பிரித்து 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதையும் அறிவித்துள்ளார் கமல். கமலின் இந்த அறிவிப்பிற்குப் பின்னால் மெகா திட்டம் ஒன்று உள்ளதாம். அது என்ன திட்டம் என்பதை நம்மிடம் விரிவாக சொன்னார், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ம.நீ.ம.வின் மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர்.
 

mnm



"தேர்தல் வியூகம் வகுத்துத் தரும் “பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’கார்ப்பரேட் கம்பெனி தான் இப்போது எங்களது கட்சித் தலைவரின் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக ஐ-பேக் கம்பெனியைச் சேர்ந்த 150 பேர் கொண்ட டீம், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கள மிறங்கியிருக்கிறது. (இதற்காக 30 கோடி ரூபாய் அட்வான்ஸாக வாங்கியிருக்கிறாராம் பிரசாந்த் கிஷோர்). ஒன்றிய, நகர, அளவில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள், சமூக சேவையில் ஈடுபாடு உள்ளவர்களை கணக்கெடுக்கிறார்கள். எங்களைப் போன்ற மாவட்டப் பொறுப்பாளர்களிடமும் அவர்களைப் பற்றி கிராஸ்செக் பண்ணுகிறார்கள்.


அதேபோல் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளில், கட்சிக்காக உழைத்தும், மக்களிடம் செல்வாக்கு பெற்றும், இப்போது எந்தப் பதவியிலும் இல்லாமல் இருப்பவர்களிடமும் சகஜமாக பழகி, தங்களின் வளையத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். மக்கள் செல்வாக்கு இருந்தாலும் பொருளாதார செல்வாக்கு உள்ளவர்களைத்தான் முக்கால்வாசி தங்களது செலக்ஷன் லிஸ்டில் சேர்க்கிறார்கள்.

அந்த வகையில் பொருளாதாரத்தில் செம ஸ்ட்ராங்காக இருப்பவர்தான் இப்போது பொ.செ.வாக நியமிக்கப்பட்டுள்ள வி.உமாதேவி. இவர் அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் -ராமலிங்கா மில்ஸ் குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சுப்புராஜின் மூத்த மருமகள். அதேபோல் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.சந்திரசேகர், திருப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர். மற்ற பொ.செ.க்களான அருணாசலம், ஆர்.ரங்கராஜன், பஷீர் அகமது போன்றோரும் வசதி படைத்தவர்கள்தான். இப்படிப்பட்ட பணக்காரர்களின் உதவியுடன், எங்களைப் போன்ற பண வசதி இல்லாத பழைய நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் மூலம் கிராம லெவலிலும் கட்சியைக் கொண்டு போய்ச் சேர்க்கும் திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறார் எங்கள் தலைவர்''’என்றார்.

  mnm



தென்மாவட்ட பொறுப்பாளர் ஒருவரின் கருத்தோ வேறுவிதமாக உள்ளது. ""பணம் இருப்பவர்கள் கட்சிக்குத் தேவைதான். ஆனால் அவர்களை அணுகுவது அவ்வளவு எளிதில்லையே. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் கூட, உறுப்பினர்கள் சேர்க்கைப் பட்டியலை மா.செ.க்கள், கட்சித் தலைமையிடம் கொடுக்கும்போது ஒரு உறுப்பினருக்கு 25 ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்கின்றன. ஆனால் எங்கள் கட்சியிலோ மாவட்டப் பொறுப்பாளர்கள், சென்னை போன்ற மாநகரங்களில் இருக்கும் பகுதிப் பொறுப்பாளர்கள், கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்த்து பட்டியலைக் கொடுக்கும்போது தலைமையிடம், ஒரு உறுப்பினருக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்பதுதான் சிரமமாக உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட பணக்காரர்களுக்கென்று ஒரு கோஷ்டி உருவாகி, பழைய நிர்வாகிகளை சங்கடப்படுத்துகிறது.


இதுக்கு உதாரணம், சில மாதங்களுக்கு முன்புவரை, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார் சவுரிராஜன். கடந்த ஜூலை 26-ஆம் தேதி சென்னை ராஜ் பார்க் ஹோட்டலில் நடந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கூட, சவுரிராஜனை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என தீர்மானம் போட்டோம், ஆனால் அது நடக்கவில்லை. இதெல்லாம் எங்கள் தலைவருக்குத் தெரியுமோ, தெரியாதோ?''’என்றார். அடுத்த தேர்தலுக்கு முன், தன் கட்சி பலத்தை உயர்த்த மெகா திட்டத்துடன் நகர்கிறார் "பிக்பாஸ்' கமல்.
 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.