Skip to main content

சிவசேனா ஆட்சி மக்களுக்கு வேதனையைத்தான் தரும்... கரு.நாகராஜன்

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜக, தேர்தலில் கூட்டணியில் இருந்த சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது சிவசேனா முதலில் இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவி கேட்டது. அதற்கு பாஜக ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அந்தக் கூட்டணி முறிந்தது. பாஜக ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று சொன்னதால், சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர். சிவசேனா காலஅவகாசம் கேட்டது. அதற்குள் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

 

maharashtra politics



இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவாருடன் ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவின் தேவேந்திரபட்னாவிஸ் முதலமைச்சராகவும், அஜித்பவார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனை எதிர்த்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றன. நீதிமன்றம் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்கு தாங்கள் தயாராக உள்ளோம் என்று சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெரிவித்ததுடன், நேற்று தங்கள் கட்சி எம்எல்ஏக்களையும் ஒரே இடத்தில் வைத்து பலத்தை காட்டியதுடன், நாங்கள் 162 பேர் உள்ளோம் என ஒரு போர்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

 

ajit-pawar


 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் துணை முதலமைச்சர் பதவியை அஜித்பவார் இன்று (26.11.2019) ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
 

ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று ஆளுநரிடம் தெரிவித்த பாஜக, ஆட்சி அமைப்பதாக பதவியேற்று பின்னர் ராஜினாமா செய்கிறது... அடுத்தடுத்த மாற்றங்கள் மகாராஷ்டிரா அரசியலில் நிகழுகிறதே? என்று பாஜகவின் மாநில (தமிழகம்) செயலாளர் கரு.நாகராஜனிடம் கேள்வி எழுப்பினோம்.

 

Karu Nagarajan


இதற்கு பதிலளித்த அவர், ''பதவிதான் முக்கியம் என்று முற்றிலும் மாறான கொள்கை, சித்தாந்தம் உடைய கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைக்கிறது. அது நாளை எப்படி வேண்டுமானாலும் மாறும். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் சிவசேனாவுக்கு பாஜகவினரும், மக்களும் ஆதரவு அளித்தார்கள். சிவசேனாவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாஜகவுக்கு சிவசேனா கட்சியினரும், மக்களும் ஆதரவு அளித்தார்கள். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் ஓட்டு போட்டார்களோ, அவர்கள் ஆட்சி அமைக்காமல் மற்றவர்கள் ஆட்சி அமைப்பதை மக்கள் எப்படி ஏற்பார்கள். மக்கள் விரும்பாத ஆட்சி அமைகிறது. 


 

 

தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்று யாரோ ஒருவர் சொல்லவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர், அக்கட்சியின் மூத்த தலைவர், ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினர் அஜித்பவார். அவர் சொல்லும்போது நிராகரிக்க முடியுமா? நம்பித்தானே ஆக வேண்டும். 


 

 

கடந்த தேர்தலில் 260 இடங்களில் போட்டியிட்டு 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை 164 இடங்களில் போட்டியிட்டு 105 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவை மக்கள் ஆதரித்துள்ளனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சி அமைப்பதாக சொல்கிறது. இந்த ஆட்சி மக்களுக்கு வேதனையைத்தான் தரும்'' என்றார்.

 

 

Constitution

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது