Skip to main content

சிவசேனா ஆட்சி மக்களுக்கு வேதனையைத்தான் தரும்... கரு.நாகராஜன்

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜக, தேர்தலில் கூட்டணியில் இருந்த சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது சிவசேனா முதலில் இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவி கேட்டது. அதற்கு பாஜக ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அந்தக் கூட்டணி முறிந்தது. பாஜக ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று சொன்னதால், சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர். சிவசேனா காலஅவகாசம் கேட்டது. அதற்குள் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

 

maharashtra politics



இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவாருடன் ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவின் தேவேந்திரபட்னாவிஸ் முதலமைச்சராகவும், அஜித்பவார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனை எதிர்த்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றன. நீதிமன்றம் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்கு தாங்கள் தயாராக உள்ளோம் என்று சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெரிவித்ததுடன், நேற்று தங்கள் கட்சி எம்எல்ஏக்களையும் ஒரே இடத்தில் வைத்து பலத்தை காட்டியதுடன், நாங்கள் 162 பேர் உள்ளோம் என ஒரு போர்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

 

ajit-pawar


 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் துணை முதலமைச்சர் பதவியை அஜித்பவார் இன்று (26.11.2019) ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
 

ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று ஆளுநரிடம் தெரிவித்த பாஜக, ஆட்சி அமைப்பதாக பதவியேற்று பின்னர் ராஜினாமா செய்கிறது... அடுத்தடுத்த மாற்றங்கள் மகாராஷ்டிரா அரசியலில் நிகழுகிறதே? என்று பாஜகவின் மாநில (தமிழகம்) செயலாளர் கரு.நாகராஜனிடம் கேள்வி எழுப்பினோம்.

 

Karu Nagarajan


இதற்கு பதிலளித்த அவர், ''பதவிதான் முக்கியம் என்று முற்றிலும் மாறான கொள்கை, சித்தாந்தம் உடைய கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைக்கிறது. அது நாளை எப்படி வேண்டுமானாலும் மாறும். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் சிவசேனாவுக்கு பாஜகவினரும், மக்களும் ஆதரவு அளித்தார்கள். சிவசேனாவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாஜகவுக்கு சிவசேனா கட்சியினரும், மக்களும் ஆதரவு அளித்தார்கள். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் ஓட்டு போட்டார்களோ, அவர்கள் ஆட்சி அமைக்காமல் மற்றவர்கள் ஆட்சி அமைப்பதை மக்கள் எப்படி ஏற்பார்கள். மக்கள் விரும்பாத ஆட்சி அமைகிறது. 


 

 

தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்று யாரோ ஒருவர் சொல்லவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர், அக்கட்சியின் மூத்த தலைவர், ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினர் அஜித்பவார். அவர் சொல்லும்போது நிராகரிக்க முடியுமா? நம்பித்தானே ஆக வேண்டும். 


 

 

கடந்த தேர்தலில் 260 இடங்களில் போட்டியிட்டு 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை 164 இடங்களில் போட்டியிட்டு 105 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவை மக்கள் ஆதரித்துள்ளனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சி அமைப்பதாக சொல்கிறது. இந்த ஆட்சி மக்களுக்கு வேதனையைத்தான் தரும்'' என்றார்.

 

 

Constitution

 

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.