Skip to main content

"யார் மீதாவது பழிபோட ஆள் வேண்டும்... தற்போது அவர்களுக்கு ஆள் கிடைத்துவிட்டார்கள்.." - புதுக்கோட்டை அப்துல்லா கருத்து!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாநாடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பான நம்முடைய கேள்விகளுக்கு திமுக-வை சேர்ந்த புதுக்கோட்டை அப்துல்லாவின் அதிரடியான பதில்கள் வருமாறு, 
 

 

 

h



தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடு மார்ச் கடைசி வாரங்களில் நடந்து முடிந்துள்ளது. 15-ம் தேதி ஆரம்பித்த அந்த மாநாடு 20, 21ம் தேதிகளில் நிறைவடைந்தது. தமிழகத்தில் இருந்து 1200 பேர் அதில் கலந்து கொண்டதாகப் புள்ளி விவரம் இருக்கிறது. கரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் இந்தத் தில்லி மாநாடு என்றும் பார்க்கப்படுகின்றது. கரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகமாகத் தேவைப்பட்ட நேரத்தில் இந்த மாநாடு அவசியமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உங்களுக்கு ஒரு செய்தியை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஜனவரி இறுதியிலேயே இந்தியாவில் கரோனா பலி ஆரம்பித்துவிட்டது. சீனாவில் இருந்து வந்தவர்களுக்கு அது உறுதி செய்யப்பட்டது. அதுதொடர்பான பேச்சுக்கள் அப்போதே எழுந்தது. ராகுல் காந்தி கூட இதுதொடர்பாகத் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து தெரிவித்திருந்தார். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் பிப்ரவரி 2ம் தேதியே சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு பிப்ரவரி மாதம் அப்படியே கடந்து விடுகிற்து. அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசா கொடுப்பதை நிறுத்தவில்லை. வெளியில் இருந்து வரும் இந்தியர்களையும், வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட யாரையும் இந்திய அரசு பரிசோதனை செய்யவில்லை. வழக்கம்போல விமானபோக்குவரத்து நடைபெற்று வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மார்ச் 2ம் தேதி பிரதமர் நான் என்னுடைய ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்கிறேன் என்று கூறுகிறார். 
 

http://onelink.to/nknapp


ஹோலி பண்டிகை வடநாட்டில் விமர்சையாகக் கொண்டாடும் ஒரு பண்டிகை ஆகும். அதேபோல் ஜனாதிபதி மாளிகையும் அதே தினத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறது. அதில், இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கிறது. இந்தியாவின் ஜனாதிபதிகளாக மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இருந்த காலகட்டத்தில் கூட ஹோலி பண்டிகை ரத்து செய்யப்படவில்லை. ஆனால் தற்போது ரத்து செய்யப்பட்டது. அப்போதே மத்திய அரசுக்குத் தெரிந்துவிட்டது, கரோனா சமூகப் பரவல் தொடங்கிவிட்டது என்று. கரோனா யாருக்கு இருக்கு, யாருக்கு இல்லை என்று கண்டுபிடிக்க முடியாத அளவு போனதால்தான் பிரதமரும், ஜனாதிபதியும் ஹோலி விழாவைக் கேன்சல் செய்கிறார்கள். இஸ்லாமிய ஜனாதிபதி கொண்டாடிய ஹோலி பண்டிகையை, சீக்கியர் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் கொண்டாடிய ஹோலி பண்டிகையை ஆர்.எஸ்.எஸ்.காரரான இந்திய ஜனாதிபதி கேன்சல் செய்கிறார்.

இந்த ஊரடங்கு உத்தரவை என்றைக்குச் செய்திருக்க வேண்டும், தான் பங்கேற்கும் விழாவில் யாருக்காவது கரோனா இருந்து தனக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்த அவர்கள், என்ன செய்திருக்க வேண்டும். இந்த ஊரடங்கை அன்றைக்கே கொண்டுவந்திருக்க வேண்டும். தனக்கு வரக்கூடாது நாட்டுக்கு வந்தால் சரியா என அவர்கள் நினைத்தார்களா?  தில்லியில் அந்த மாநாடு நடைபெறுவது மத்திய உள்துறையைக் கையில் வைத்திருக்கும் அமித்ஷாவுக்கு தெரியாதா என்ன? நீங்கள் நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டியதானே? அவர்களுக்கு யார் மீதாவது பழிபோட ஆள் வேண்டும். அதைத் தற்போது செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இல்லை என்றால், மத்திய அரசின் தவறு வெளியில் தெரிந்துவிடும். அதற்காகத்தான் இவ்வாறு இதை வெளியில் பரப்பி விடுகிறார்கள்.

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.