Skip to main content

டெல்லி மாநாட்டைத் தவிர இவர்களுக்கு எதுவுமே தெரியாது... அவர்கள் கூறிய கணக்கெல்லாம் தவறு - புதுக்கோட்டை அப்துல்லா கருத்து!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 1  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 7000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மாநாடு தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பான நம்முடைய கேள்விகளுக்கு திமுக-வை சேர்ந்த புதுக்கோட்டை அப்துல்லாவின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

b



டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் இருக்கும் இடங்களில் அருகில் இருப்பவர்கள் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை இயல்பாக ஏற்பட்டு விடுகிறதே?

வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் பற்றிய முறையான அறிவிப்பு இதுவரை செய்யவில்லை. இப்போது உங்களுக்கு கரோனா வந்திருக்கு, இவர் நான்காவது தெருவில் மூன்றாவது வீட்டில் இருக்கிறார் என்றால் உங்களைப் பார்த்து நான்கு தெருக்காரர்கள் அலார்ட் ஆகிவிடுவார்கள். அப்படி யாரையும் நீங்கள் சொல்லவில்லையே? நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சொல்லி, அந்த மாநாட்டுக்குப் போய்விட்டு வந்தவங்க இருக்காங்க, இந்த மாநாட்டுக்குப் போய்விட்டு வந்தவங்க இருக்காங்க, அப்படித்தானே சொல்கிறீர்கள். நீங்கள் வேறு யாரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். திரும்பத் திரும்ப ஒரே ஆளைப் பற்றித்தானே சொல்கிறீர்கள். மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று தினமும் 70, 80 பேர் எனச் சொல்கிறார்கள், ஒரு இரண்டு பேரை மட்டும் விட்டுவிட்டு இவர்களுக்கு எல்லாம் கரோனா பாதிப்பு இருக்கு என்று அரசாங்கம் தொடர்ந்து செல்லிவருகிறது. ஆனால் எங்களை இன்னும் சோதிக்கவே இல்லை என்று மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கூறுகிறார்களே?

நேற்று அவர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் 1200 பேர் என்றும் அவர்களில் 961 பேருக்கு அந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று கூறியிருக்கிறார்களே, ஏற்கனவே அவர்கள் கூறியதற்கும் தற்போது அவர்கள் கூறுவதற்கும் நிறைய முரண் இருக்கிறதே?

ஏற்கனவே அவர்கள் கூறிய கணக்குப்படி பார்த்தால் மாநாட்டுக்குச் சென்றவர்களில் 900 பேருக்கு அந்தப் பாதிப்பு இருக்க வேண்டும்.  குறைந்தது 800 பேருக்காவது இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே சொன்னார்களே 58 பேருக்கு இருக்கு, 68 பேருக்கு இருக்கு என்று. அவர்கள் சொன்னதை எல்லாம் கூட்டினால் இந்தக் கணக்குத்தான் வரும். நேற்று அவர்கள் சொன்ன கணக்குபடி 1,50,160 பேருக்குத்தான் பாதிப்பு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள். மக்களைக் குழப்ப வேண்டும் என்றே செய்ததுதான் இது. டெஸ்ட் ரிசல்டை அவர்களிடம் கொடுக்கும்போது உண்மை தெரிந்துவிடும் என்பதால் மாற்றி தற்போது சொல்லியிருக்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp



இந்த இக்கட்டான நேரத்தில் தென்காசியில் மசூதியில் தொழுகைக்காக 50-க்கும் மேற்பட்டவர்கள் கூடியது தற்போது வைரலாக்கப்பட்டுள்ளதே? 

யார் கூட்டமாக இந்த நேரத்தில் கூடினாலும் அது தவறுதான். ஆனால் 50,00,000 லட்சம் மக்கள் இருக்கின்ற ஒரு சமூகத்தில் 50 பேர் கூடியதை மட்டும்தான் பேசுகிறீர்கள். மீதியிருக்கிற இருக்கின்ற இத்தனை லட்சம் பேர் வீடுகளில் தானே இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஏன் பேசவில்லை. தொழுகை நடத்த கூடியிருந்த பகுதி முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி. மாற்று மதத்தினர் கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குப் பிறகுதான வசிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அங்கே திடீர் என்று காவல்துறையினர் வருகிறார்கள் என்றால் எப்படி வருவார்கள். அங்கே இருப்பவர்கள் தகவல் சொன்னால்தானே வர முடியும். போலீஸ் என்ன வெத்தலையில் மை போட்டா பார்க்க முடியும். வீடியோ வைரல் ஆனதாகச் சொல்கிறீர்கள், அதை எடுத்து யார், மசூதியில் அருகில் இருந்த இஸ்லாமியர்கள் தானே? அந்த வீடியோவில் அது தெரிகிறதே. அதைப் பற்றி மட்டும் ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள்? என முடித்தார்.

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.