Skip to main content

கலைஞரை வாழ்த்த வந்த காந்தியின் பேரன்; கலைஞர் 100 இலச்சினை வெளியீடு!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

M K Stalin Speech and Kalaignar 100

 

கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ‘கலைஞர் 100’ என்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். 

 

இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “இந்த இடம் கலைவாணர் அரங்கமாகக் கலைஞர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. அந்த கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டில் லோகோ வெளியீட்டு விழா நடப்பதும்; இந்த விழாவிற்கு சிறப்பு  சேர்க்கும் விதமாக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி கலந்து கொண்டதற்குப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் இயக்கத்தில் அண்ணல் காந்தியடிகளின் தொண்டராகத் தான் இருந்தார். பின்பு, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து கள்ளுக்கடை மறியல் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். வகுப்புரிமைக்காகக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் பெரியார். 

 

1947 ஆம் ஆண்டின் போது கோட்ஸேவால், அண்ணல் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது பெரியார் மிகுந்த வேதனை அடைந்தார் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது. தந்தை பெரியாரைப் போல, அவர் வழி வந்த அறிஞர் அண்ணாவும் காந்தி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். அறிஞர் அண்ணா, 1948 ஆம் ஆண்டின் போது ‘உலக பெரியார் காந்தி’ என்ற புத்தகத்தை எழுதி காந்தியின் பற்றை வெளிப்படுத்தினார்.

 

Kalaignar 100

 

பெரியார், அண்ணா, கலைஞர் என நாங்கள் உள்பட அண்ணல் காந்தியின் மீது பற்று வைத்திருப்பதைப் போல தான் காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ணன் காந்தி அவர்களும், எங்கள் மீதும் எங்களது திராவிட இயக்கத்தின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். பெரியார் மற்றும் அண்ணாவின் அரசியல் ஏழைகளுக்கானது, சாதியத்துக்கு எதிரானது, மதவாதத்துக்கு எதிரானது, சாமானிய மக்களுக்கானது என்று கோபாலகிருஷ்ணன் காந்தி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

 

வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமூகத்தை ஒளி கொடுத்து வாழும் காலத்தில் விடிவெள்ளியாக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தோன்றிய நாளான ஜூன் 3 ஆம் தேதி அன்று அவரது பிறந்தநாள் என்று சொல்வதை விட சமுதாயத்திற்கு உயிராக, உணர்வாக இருந்து உதயமான நாள் என்று சொல்வதே சரியாக இருக்கும். மேலும், கலைஞரின் இந்த நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு  ஓராண்டுக் காலம் கொண்டாடத்  திட்டமிட்டுள்ளது.  என் தலைமையிலான இந்த தமிழ்நாடு அரசைக் கலைஞருக்கு காணிக்கையாகச் செலுத்த விரும்புகிறேன். இந்த நவீன திராவிட மாடல் அரசுக்கு முன்னோடியாக இருப்பது கலைஞரின் வழிகாட்டுதல் பேரில் தான். ஏனென்றால், கலைஞர் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக இருந்து அந்த துறைகளில் வெற்றியையும் கண்டவர்.

 

அதனால் தான், விடுதலை இந்தியாவில் நடந்த 13  சட்டமன்றத் தேர்தல்களில் 5 முறை வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவி வகித்தார். முதலமைச்சராக மட்டுமல்ல மக்கள் மனதில் என்றும் ஆட்சி செய்து கொண்டிருப்பார். இலக்கியம், கவிதை போன்ற துறைகளில் தனது வெற்றி முகத்தைப் பதித்த கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

 

Kalaignar 100

 

கலைஞரின் பெயரில்  மாபெரும் நூலகம், மருத்துவமனை உள்ளிட்டவற்றை புதிதாக திறக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த ஓராண்டு விழா மாவட்டந்தோறும் நடக்கப்பெற உள்ளது. அந்த விழா வெறும் புகழ் பாடுவதற்காக மட்டும் அமைக்கப்படாது. கலைஞர் இந்த தமிழ் சமூகத்திற்குச் செய்த சாதனையைப் பற்றி விளக்கும் விழாவாக இருக்கும். கடந்த 50 ஆண்டுக்கால தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் அடித்தளம் வித்திட்டு தொலைநோக்கு பார்வையும் மக்கள் மீது பற்றும் கொண்ட கலைஞரால் மட்டுமே இத்தனை சாதனை செய்ய முடியும் என்று நிரூபித்தவர்.

 

பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், நகரங்கள் என நாம் இப்பொழுது காண்கிற அனைத்தும் கலைஞரால் கொண்டுவரப்பட்டது. பட்டப் படிப்பை முடித்தவர்கள்; பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்; வேலைவாய்ப்பைப் பெற்ற அரசு ஊழியர்கள் எனக் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் தொடர்புடையவர் தான் நமது கலைஞர். சென்னையையும் அதன் சுற்றி உள்ள மாவட்டங்களிலும் இத்தனை தொழிற்துறைகள் வளந்திருப்பதற்குக் காரணம் கலைஞர். அதனால் தான் அவர் வழி வந்த இந்த திராவிட அரசும் தொழிற்துறையை முன்னேற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்னே சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக ரூ.3,233 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகி இருக்கிறது என்றார்.

 

 

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.