Skip to main content

தாமரை தமிழகத்தில் கண்டிப்பாக மலரும்.... அதனால்தான் திமுகவினரும் தற்போது வேல் எடுத்துள்ளனர் - நடிகர் ராதாரவி பேச்சு!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

gh

 

சென்னையில் கராத்தே தியாகராஜன் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். வழக்கமான முறையில் பேசிய அவர், திமுகவை கடுமையாக சாடினார். அவர் பேசியது வருமாறு, "நீண்டநாட்களாக பாஜகவில் சேருமாறு அண்ணன் பொன்னார் அவர்கள் தொடர்ந்து என்னை அழைத்து வந்தார். நானும் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தேன். ஒரு கட்டத்தில் நானே பாஜகவில் சேர்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பேசுவதற்கு முன்பு இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் திமுக நண்பர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் அங்கே நின்றுகொண்டிருக்கும் அந்த நபர்கள் கடைசியாக வர வேண்டிய இடம் இதுதான். இதை விட்டால் அவர்களுக்கு வேறு வழி கிடையாது. முருகன் அவர்களை பாஜகவிற்கு அழைத்து வருவார். இந்த முருகன் பேரைத்தான் சீமான் தொடர்ந்து உச்சரித்து வருகிறார். அதனால்தான் எங்களுடைய தலைவர் பேரும் கூட முருகன் என்று இருக்கிறது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும், வந்து 10 நிமிடமாவது பேச வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் இரண்டு நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நான் வருகிறேன் என்று சொல்லியும், அண்ணா கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

 

நான் அவரைப் பற்றி 10 நிமிடத்தில் என்ன பேச முடியும். 10 நிமிடத்தில் பேசக் கூடிய ஆளா அவர். கராத்தே தியாகராஜன் மட்டும் இல்லை என்றால், நான் சட்டமன்ற உறுப்பினரே ஆகி இருக்க முடியாது. அம்மா அவர்கள் இருக்கும்போது நான் தேர்லில் போட்டியிட்டபோது ஒரு குறிப்பிட்ட வார்டில் மா.சுப்பிரமணியன் அவர்கள் பலமாக ஆளுமை செலுத்திக்கொண்டிருந்தார். அம்மா அந்த வார்டை சொல்லி, ‘அந்தப் பகுதியில் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது’ என்று கேட்டார். நான் மா.சுப்பிரமணியன் அங்கு பலமாக இருப்பதாக கூறினேன். அப்படியா என்று கேட்ட அம்மா, உடனடியாக அந்த பகுதிக்குக் கராத்தே தியாகராஜனை அனுப்பி வைத்தார். வேறு யாரும் அம்மா நினைவுக்கு வரவில்லை. உடனடியாக அவரை அந்தப் பகுதியில் தேர்தல் பணியைக் கவனிக்க போட்டார்கள். ஆனால் கராத்தே தியாகராஜனைப் பார்த்து என்னிடம் ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார், ‘இவரிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள்’ என்று. அவர் எவ்வளவு மோசமோ அதை போல நானும் மோசமானவன். இந்த மோசமும், மோசமும் ஒன்னா சேர்ந்தால்தானே உருப்பட முடியும். அவரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. அதற்கான காலம் இன்னும் இருக்கிறது. 

 

இன்றைக்கு தாமரை மலராது என்று தொடர்ந்து சிலர் பேசி வருகிறார்கள். தாமரை தமிழகத்தில் நிச்சயம் மலரும். குளத்தில் தண்ணீர் இல்லை என்றால் தாமரை இல்லை என்று அர்த்தம் இல்லை. தண்ணீர் வருகின்றபோது தாமரை மேலே தெரியும். எனவே தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. நமக்கு திமுகவைப் பற்றி பயப்பட தேவையில்லை. நம்முடைய வேலையைப் பாதி திமுக தலைவரே செய்து கொண்டுள்ளார். யானை சாணம் போட்டால் லத்தி என்று சொல்லுவோம், மாடு போட்டால் சாணம் என்று சொல்லுவோம். ஆடு போட்டால் புழுக்கை என்று சொல்லுவோம். சாணி போடுவதிலேயே இவ்வளவு இருக்கிறது. அண்ணா யானை மாதிரி திமுகவை வைத்திருந்தார், ஆனால் தற்போது நிலைமை அப்படியா இருக்கிறது. ஸ்டாலின் சொல்கிறார், ‘நாங்கள் பார்க்காத போலீசா’ என்று, நான் அவருக்குச் சொல்கிறேன், எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அதிகம் பேசினால் அவர்களும் தங்களுடைய வேலைகளைக் காட்டுவார்கள். உங்கள் அப்பாவிடம் போய் இதைப் பற்றி நீங்கள் கேட்க வேண்டும். எங்கள் தலைவர் வேல் எடுத்துக்கொண்டு சென்றதையடுத்து இன்றைக்கு வேலை இல்லாதவன் எல்லாம் வேல் எடுத்துக்கொண்டு மாவட்டம் மாவட்டமாக சுற்றுகிறார்கள். இவர்கள் எப்படி சுற்றினாலும் பாஜக தமிழகத்தில் கால் பதிப்பதைத் தடுக்க முடியாது" என்றார்.

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.